ஓவென்று அழும் நொடிகளால்
என் அறையின் குப்பைத் தொட்டி
நேற்றயதுகளில் புதைந்த
இன்றயதுகளுக்கான மனதைத்
தேடி தொலைந்தேனென்று
தாம் தூமென்று குதிக்கிறது பாதி நாள்
தவணை சொல்லி மீண்டெழுந்தால்
கழியும் கணங்கள் போக
மீதியில் வாழும் லாவகங்கள்
கைவரவில்லை உனக்கென்று
குற்றம் சுமத்துகிறது மீதி
அப்படியா என்று நான்
கேட்டு அழ முன்னமே
பிறந்துவிடுகிறது
எனக்கான அடுத்த நாள்
ஏதுமற்ற நாள் நிரப்பிய தாள் அருமை
ReplyDeleteமிகவும் நன்றி.
ReplyDelete/////அப்படியா என்று நான்
ReplyDeleteகேட்டு அழ முன்னமே
பிறந்துவிடுகிறது
எனக்கான அடுத்த நாள்/////
நன்றாய் இருக்கிறது தொடர்ந்து எழுதுங்கள் ...............
வெறுமையை வெளிப்படுத்திய விதம் அருமை!
ReplyDeleteAll your poems are wonderful. Wishes and keep writing.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete////ஒன்றுமே செய்யாமல் போனதற்காய்
ReplyDeleteஓவென்று அழும் நொடிகளால்
நிரம்பிக் கிடக்கிறது
என் அறையின் குப்பைத் தொட்டி //
நதியா,
ஒரு நாளுக்கே இவ்வளவா? இங்கே, ஒன்றுமே செய்யாமல் ஆயுளைக் கழிப்பவர்களை என்ன செய்யலாம்?
கவிதை அருமை.
மிக இலாவகமான சொல்லாடல் தோழி...
ReplyDeleteவாழ்த்துகள்
-ப்ரியமுடன்
சேரல்
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.
ReplyDelete//ஒரு நாளுக்கே இவ்வளவா? இங்கே, ஒன்றுமே செய்யாமல் ஆயுளைக் கழிப்பவர்களை என்ன செய்யலாம்?//
ReplyDeleteதலைப்பிலேயே அதைத் தெளிவுபடுத்திவிட்டேன். "என்" ஒரு நாள் என்று.
உங்கள் அனைவரது வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்.
ReplyDelete