விளிம்பில்
உதடு வைத்து
உறிஞ்சித் தீர்க்கிறது பால்யத்தின் அவா
மாத விலக்கின் கிழமை நெருங்க
கட்டிக் கொண்ட மார்பின் காம்புகள் வழி
குருதி வழிவதை
பாலாய்ப் பருகுகிறது
கத்தி ஓய்ந்த குழந்தை
குப்பைத் தொட்டியின் எச்சிலையின்
ஒரு பருக்கை சோறும்
சில துளி எச்சில்களும்
பச்சையத்தில் படிந்த ரேகைகளும்
அள்ளித் தின்ற அசதியில் களைத்தும்
பின்னிரவில் புணர்ந்ததை
கசங்கிக் கறுப்பாய்
கலவி மணம் வீசும் மல்லிகை
கதை கதையாய் சொல்கிறது
காலையில்
உணர்ச்சிகள் தெறித்து
பீச்சியடித்த சுவரின்
பச்சை வாசனையையும்
வெடித்துக் கிளம்பிய சிரிப்பை
அடக்கிக் களைத்து
மயங்கிக் கிடந்த உடலைத் தழுவி
வியர்வையை அள்ளிக் குடித்தும்
அடர்ந்து வீசும் காற்று
ஓயாது பேசுகிறது
அந்தரங்கம் பற்றி
தன் அறுக்கப்பட்ட நாவால்
உச்சரிக்கவே முடியாத ஒரு மொழியில்
மிரட்டல் கவிதை இது மனோ ..!
ReplyDeleteஒரு சிறு நடுக்கம் பரவுகிறது உக்கிரத்தில்
அந்தரங்கத்தைப் பேசும்
ReplyDeleteஉங்கள் மொழி
புதிது நதி.
வருகைக்கும், கருத்துக்களிற்கும் மனமார்ந்த நன்றி நேசமித்திரன், மற்றும் சந்தானகிருஷ்ணன்,
ReplyDeleteபுனிதம்
ReplyDeleteஉணர்வின் அடர்த்தி வரிகளாக...
ReplyDelete