பிரட்டிப்போட்ட கரப்பானின்
பிய்ந்து கொண்டிருக்கும்
இறகுகளுக்குள்ளிருந்து
எட்டிப் பார்க்கிறது மனது
சாத்தியப்பாடுகள் தரும்
நிகழ்தகவுகளின் அன்புகளில்
நெரிந்து வாழப் பழகுகிறது
நசிந்த உயிர்
பெயர் எழுதப்படாத கண்ணீர்
யாருக்குமே இல்லாமல் வழிய
பிணமாகக் கனக்கிறது
மௌனம்
ஆழ் மனதுக்குள் அலையும்
உருவற்ற கருவைத்
துரத்துவதொடு நிற்கிறது
கவிதை
முற்றுப்புள்ளிகளற்றுப் போன
இறுதிக் கவிதையின் முடிவாய்
மிஞ்சி விளைகிறது
காயம்
நிரந்தரமற்ற தூக்கத்தில்
நெருடும் விடியலில்
காற்றில் கீறுகிறது
பாச விரல்
இன்னொரு கரப்பானை
இறுகப் பிடித்தபடி
//ஆழ் மனதுக்குள் அலையும்
ReplyDeleteஉருவற்ற கருவைத்
துரத்துவதொடு நிற்கிறது
கவிதை//
அழகான ஆழமான கவிதை.......
அப்படியே கொஞ்சம் என் பதிவையும் பாருங்களேன்.........
http://sangkavi.blogspot.com/
மற்றுமொரு அழகான கவிதை உங்களிடமிருந்து....
ReplyDeleteவழக்கம்போல் மனத்துள் நெருடுகிற வார்த்தைகளின் கட்டமைப்பு. வாழ்த்துகள
ReplyDelete//பெயர் எழுதப்படாத கண்ணீர்
ReplyDeleteயாருக்குமே இல்லாமல் வழிய
பிணமாகக் கனக்கிறது
மௌனம்
ஆழ் மனதுக்குள் அலையும்
உருவற்ற கருவைத்
துரத்துவதொடு நிற்கிறது
கவிதை //
ரசித்த வரிகள்.. அசைபோட்டுக் கொண்டே இருக்கிறது மனது.
நல்லாருக்கு
ReplyDeletearumai sakothari arumai
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete