Friday 18 December 2009

மறு தாக்கம்

பிரட்டிப்போட்ட கரப்பானின்
பிய்ந்து கொண்டிருக்கும்
இறகுகளுக்குள்ளிருந்து
எட்டிப் பார்க்கிறது மனது

சாத்தியப்பாடுகள் தரும்
நிகழ்தகவுகளின் அன்புகளில்
நெரிந்து வாழப் பழகுகிறது
நசிந்த உயிர்

பெயர் எழுதப்படாத கண்ணீர்
யாருக்குமே இல்லாமல் வழிய
பிணமாகக் கனக்கிறது
மௌனம்

ஆழ் மனதுக்குள் அலையும்
உருவற்ற கருவைத்
துரத்துவதொடு நிற்கிறது
கவிதை

முற்றுப்புள்ளிகளற்றுப் போன
இறுதிக் கவிதையின் முடிவாய்
மிஞ்சி விளைகிறது
காயம்

நிரந்தரமற்ற தூக்கத்தில்
நெருடும் விடியலில்
காற்றில் கீறுகிறது
பாச விரல்
இன்னொரு கரப்பானை
இறுகப் பிடித்தபடி

7 comments:

  1. //ஆழ் மனதுக்குள் அலையும்
    உருவற்ற கருவைத்
    துரத்துவதொடு நிற்கிறது
    கவிதை//

    அழகான ஆழமான கவிதை.......

    அப்படியே கொஞ்சம் என் பதிவையும் பாருங்களேன்.........

    http://sangkavi.blogspot.com/

    ReplyDelete
  2. மற்றுமொரு அழகான கவிதை உங்களிடமிருந்து....

    ReplyDelete
  3. வழக்கம்போல் மனத்துள் நெருடுகிற வார்த்தைகளின் கட்டமைப்பு. வாழ்த்துகள

    ReplyDelete
  4. //பெயர் எழுதப்படாத கண்ணீர்
    யாருக்குமே இல்லாமல் வழிய
    பிணமாகக் கனக்கிறது
    மௌனம்

    ஆழ் மனதுக்குள் அலையும்
    உருவற்ற கருவைத்
    துரத்துவதொடு நிற்கிறது
    கவிதை //

    ரசித்த வரிகள்.. அசைபோட்டுக் கொண்டே இருக்கிறது மனது.

    ReplyDelete