அகோர நினைவுகளைப் பிரசவித்த
அசிங்கத் தழும்புகள் பல
என் வயிறெங்கும்
நான் மார்பு கிழித்தெறிந்த
அவற்றின் எச்சங்கள் பல
என் வழியெங்கும்
முண்டங்களெல்லாம் சேர்ந்து
முடிவிலியில் சந்திக்கின்றன
பிறிதொரு நாளில் எனை
இம்சிப்பது பற்றியும்
இன்னொரு மன வன்புனர்வுக்கான
இரகசிய ஆயத்தம் பற்றியும்
சூடாகவே விவாதிக்கின்றன
பிண நாற்றங்களிடையில் திமிறி
தன் மூச்சையே தேடும் உயிர்
வெற்று நெஞ்சுக் கூட்டில்
காதல் இருப்பதாகப் பிதற்றுகிறது
அது கனவில் இருக்கிறது
எதிர்பாராத கணத்தில் நடக்கும்
நினைவு வன்புணர்ச்சிகளில்
களைத்துக் கிடக்கிறது மனம்
காதல் பற்றிக் கதைக்க
அவற்றின் வாய் தேடுகிறது
எனினும் நீளும் வலிகளின் போது
முண்டங்களே பிரசவமாகின்றன
அவை முடிவிலியிலேயே தான்
சந்திக்கவும் செய்கின்றன
//என் நதியுலகில்...
ReplyDeleteகாதலில்லை காயமில்லை
எந்தன் உலகத்தில்;
சாதலில்லை உயிர்ப்புமில்லை
எந்தன் ஆட்சியில்;
வாழ்ந்து போக நானுமில்லை
என் உயிர் தவிர;
ஆள்ந்து போக எவருமில்லை
என் யாக்கை தவிர; //
ஏதோ செய்கிறது!!
நல்லதொரு கவிதை.
ReplyDeleteஅதிர்ந்து கொண்டிருக்கிறது மனசு கவிதையி இருந்து வெளி வராமல்
ReplyDeleteஇன்னொரு மன வன்புனர்வுக்கான
ReplyDeleteஇரகசிய ஆயத்தம் பற்றியும்
சூடாகவே விவாதிக்கின்றன//
நதிபோல் வார்த்தைகள் பிரவாகமாய்!!!மிக நன்று...
நன்றி...
ReplyDelete