Friday 5 February 2010

இரு கவிதை ஒரு காதல்

1.
இரு நிழல்கள்
ஒன்று இவள்
சற்றிறங்கிய மேகம்
தூறிக் கொண்டிருந்தது
கூடவே மரமும்
கரைந்து ஒன்றாகி
ஒரு நிழல்
காதல்

2.
சேர நின்றது
மழை
புன்னகைத்தாய்
பூத் தொடுத்தாய்
மௌனமாக்கப்பட்ட இதழ்
மொழிகளற்ற பிரக்ஞை
எட்டக் கிடந்தது
காமம்
தொடக் கடந்தது
காதல்

9 comments:

  1. ரெண்டு கவிதைகளும் ரொம்ப பிடிச்சிருக்கு.

    ReplyDelete
  2. இன்றுதான் உங்கள் கவிதைகளை முதலில் பார்த்தேன்...அருமையாக எழுதுகின்றீர்கள்...வாழ்த்துக்கள் ...தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  3. ம்ம் நல்ல வெளிப்பாடு
    இன்னும் பேசி இருக்கலாம் என்று தோன்ற வைப்பது கவிதையின் வெற்றியாக கொள்கிறேன்

    ReplyDelete
  4. நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும்....

    ReplyDelete
  5. நன்றி நேசமித்திரன் சார்....

    ReplyDelete
  6. அருமையாய் இருக்கிறது மனோ காதலும் காமமும்

    ReplyDelete
  7. ஒரு புதிய சந்தோசம் . அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. kavithaiyin paaduporul arumai nathiye,melum ungal kavithaikalai inruthaan paarkiren vazhthukal thozi.

    anbudan
    ursularagav

    ReplyDelete