ஆழ்கிணற்றுக்குள் யாரோ
அள்ளிக் கொட்டிய இருட்டைக்
கிள்ளிப் போடுவது பற்றியும்
துலாவின் வாளி விழ எழும்
பிலாக்கணத்தை நிறுத்துவது குறித்தும்
தண்ணீர்ப் பாம்புகளை விடத்
தவளைகள்தான் கவலைப்பட்டன
படிகளில் குறிக்கப்பட்ட தத்தம்
பரம்பரைப் பெயர்கள் கொண்டே அவை
நீதிமன்றக் கூடுகளில்
அழைக்கப் பட்டிருந்தன
கோப்புகளுக்கும் வாய்தாக்களுக்கும்
நீர்ப்பாம்புகள் தலையைக் காட்டின
அதில் பல பெண்களாக இருந்தன
சில வாற்பேத்தைகளும்
நிலாவின் நிழல் விழுந்த
அரைகுறை இரவொன்றில்
"பாம்புகள் படியேற"
விதிகள் செய்யப்பட்டதாக
தவளைகள் கத்தின
அடுத்த மழையில் செத்தன
பின்வந்த அமாவாசையில்
பிசைந்த இருட்டில் நின்று
பாம்புகள் தீர்ப்பைப் படித்தன
தங்களின் காதுகள்
செவிடாகிப் போனதனால்
காத்திருக்கத் தொடங்கின
வாற்பேத்தைகளுக்காக
இப்போதும்
ஏன் இப்படி?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசத்தியமா கவிதை புரியல ?
ReplyDeleteஆனா ஏதோ வலியின் ஒலி மட்டும் கேட்குது....
:(
ReplyDelete//தங்களின் காதுகள்
ReplyDeleteசெவிடாகிப் போனதனால்//
அருமை..
:)
ReplyDeleteமுதிர்ந்த சொற்கள்
நன்றி...
ReplyDelete