உயிர்ப்பின் உச்சத்தில்
மீள மீளப்
பிறப்பதென்றானது
மார்கழிப் பனிக்குடத்தை
தாங்கியும் தாங்காதும்
நாணல் படும் அவஸ்தையை
அள்ளிக் கொண்டது மனது
மார்புக்குள் அயரும்
மழலையாய் மாறி
நிம்மதிச் சன்னிதானத்திற்கு
குடிபெயர்ந்தது உயிர்
இயல்பிருத்தலுக்கு முயன்று
தோற்பதும் வெல்வதுமாய்
மயங்கி சாய்கிறது
இன்றைய பொழுது
மண்ணைத் தொட்டு
முத்தமிடும் அவசரத்தில்
வருகையைத் தெரிவிக்காது
துமித்துப் போகிறது முகில்
தனக்கான இலக்கணத்தின் பால்
நிற்காது வழுவி
பிரசவிக்கப்பட்டிருக்கிறது
ஒரு கவிதை
காதலாய்..!
- வழுவிய கவிதை -
ReplyDeleteரொம்ப நல்லா வந்திருக்குங்க...
வாழ்த்துக்கள்.
"துமித்துப் போகிறது முகில்"
ReplyDeleteபுரியவில்லை...கொஞ்சம் விளக்குவீர்களா ?
///மண்ணைத் தொட்டு
ReplyDeleteமுத்தமிடும் அவசரத்தில்
வருகையைத் தெரிவிக்காது
துமித்துப் போகிறது முகில் ///
துமித்துப் போகிறது முகில்... அடடா என்ன வார்த்தைகள்.
கம்பனுக்கு வந்துதித்த வார்த்தை அல்லவா "துமி'.
நல்ல கவிதைகள் தோழி. உங்களின் இலக்கிய ரசனை வியத்தக்க ஒன்றாக உள்ளது. வாழ்த்துகள்
மார்கழிப் பனிக்குடத்தை
ReplyDeleteதாங்கியும் தாங்காதும்
நாணல் படும் அவஸ்தையை //
அருமையான வார்த்தைடா மயோ
கம்பனின் தன் பாட்டில் எழுதிய "துமி" (துளி) என்னும் சொல் இலக்கணப் பிழை அற்றது என்பதை சரஸ்வதியே பூவுலகு வந்து முத்தேவர்க்கும் அன்னையாகி நிருபித்ததாக காவியம் சொல்கிறது..! துமி மெல்லிய தூறல் என்று பொருள் படும்..! இதை இலங்கைத் தமிழ்ப் பேச்சுவழக்கில் இன்றும் காணலாம்..!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி..!
மனசிலிருந்து வழுவாக் கவிதை.
ReplyDelete"விளக்கத்திற்கு நன்றி,,"
ReplyDeleteகவிதையைப் பற்றி சொல்ல
வார்த்தைகளே இல்லை..!
:)
ReplyDelete