குழைந்த இருட்டு
குதப்பித் துப்பிய வெட்கங்களைத்
தேடத் தொடங்கினாள்
கழற்றி எறிந்த சட்டையுடன்
ஒட்டியபடி கிடந்தது மனது
கட்டில் சட்டத்தில் தொங்கவிட்ட
உணர்ச்சிகள் வரிசைப்பட்டன
மல்லிகைகளால் இவனால்
முழமிடப்பட்டிருந்த முத்தங்கள்
இன்னும் மீதமிருந்தன
கனகாம்பரத்துக்காக அங்கே
அவனால் அளக்கப்படும்
யாருக்குத் தெரியும்
நாளை முத்தச் சுரப்புகள்
சேலையுடன் உரியப்படலாம்
அவளின் உதட்டுச் சாயம் அழித்து
பூவிதழ் தட்டியவனின்
சட்டையின் கட்டங்களிலிருந்து
எம்பிக்கொண்டிருந்தாள்
அவன் மனைவி
அவளின் சாளரத் தாழ்
கயிற்றினால் கட்டப்பட்டிருந்தது
தலையணை தடவி
தாள்கள் எண்ணியவளின்
தேயாத சுவடுகள்
தெருவில் பதிந்தன
அடையாள வேட்கை
அவளை மட்டும் வேசியாக்கியது
விடுதலையாகிய மனைவியுடன்
அதே தொழிலிருந்த
அவனைச் சுட்ட
வார்த்தைகள் தேடுவதை விடுத்து
புணர்தலின் அவசரத்தில்
நிர்வாணப்பட்டிருந்தது
இந்த சமூகம்
இப்படியான வார்த்தைகள் எனக்குள் வராத ஏக்கம் சுடுகிறது. சில உணர்வுகளைச் சொல்ல கவிதை மொழி சாலச் சிறந்தது. உங்களிடம் அது இருக்கிறது மயூரா
ReplyDeleteஆத்தீ !!!!
ReplyDeleteமனோ ....
கசிந்தொரு துளி வீழ்ந்து ககனம் பரவிப் பெருமழை சாற்றும் புவனம் சிறு யன்னல் வலை வழியே காணுதலொப்ப
களரித்தாளமிசைக்கும் சொற்கள்
நன்றி கிருத்திகன்,
ReplyDeleteநன்றி நேசமித்திரன்
ReplyDeleteநன்றி ராஜாராம்...
ReplyDelete//தலையணை தடவி
ReplyDeleteதாள்கள் எண்ணியவளின்
தேயாத சுவடுகள்
தெருவில் பதிந்தன
அடையாள வேட்கை
அவளை மட்டும் வேசியாக்கியது//
உங்கள் கவிதைகளில் அழகான ஆழமான வரிகள்.....
அற்புதமான வரிகள் நதியானவள்...நிறைய எழுதுங்கள்.....:)
ReplyDeleteபுணர்தலின் அவசரத்தில்
ReplyDeleteநிர்வாணப்பட்டிருந்தது
இந்த சமூகம்
kalakkitteenga....!!!
valikalai varikalaukkul mika elithaai pathiyamidum vitthai ungalukku vasappatirukkirathu,,,
VAAZHTHUKKAL....!!!
நன்றாக இருக்கிறது...
ReplyDeleteநன்றி Sangavi
ReplyDeleteநன்றி Tharughashini...
ReplyDeleteநன்றி Meera...
ReplyDeleteநன்றி
ReplyDeleteசொல்லிப் புரியாது என் வலி என்பார்கள்..! அனால் உணர்வுகளை வார்த்தைகளில் காட்ட உங்கலால்முடிகிறதே..!
ReplyDelete