Wednesday 2 December 2009

சிந்தாமல் விட்ட துளி

கண் ஓட்டைகளுக்குள்
இவ்வளவு குருதியிருக்குமென்று
நான் நினைதேயிருக்கவில்லை

அது உதடு நனைக்கும் போதான
உவர்ப்பை என்னால்
எப்போதுமே ரசிக்க முடிவதில்லை

என் நெஞ்சு சாற்றை உறிஞ்சி
எப்போதாவது வழியும் துளி
இனிக்கவும் செய்கிறது

பலவேளைகளில்
தாடை இறுக்கி
காற்றின் மூச்சு நிறுத்தி
விசும்பலின் கழுத்துத் திருகி
விக்கலில் முடிக்கையில்
நறுக்கென்ற ஒரு வலியுடன்
தன்னிருப்பை சொல்லி
துளியை உள்வாங்குகிறது
இதயம்

கூர்ப்பின் பரிணாமத்தில்
இன்னொன்றாக மாறி
என்னை ஆளத் தொடங்குகிறது
நான் சிந்தாமல் விட்ட அந்த
செங்குருதித் துளி

2 comments:

  1. //பலவேளைகளில்
    தாடை இறுக்கி
    காற்றின் மூச்சு நிறுத்தி
    விசும்பலின் கழுத்துத் திருகி
    விக்கலில் முடிக்கையில்
    நறுக்கென்ற ஒரு வலியுடன்
    தன்னிருப்பை சொல்லி
    துளியை உள்வாங்குகிறது
    இதயம்//

    அருமையான வரிகள்..

    ReplyDelete