tag:blogger.com,1999:blog-36347610571500252782024-03-13T19:31:21.239-04:00நினைவுகளின் பிரதி..;பனி நிலத்தில் விழும் இலையுதிர்கால இலைகளில் எழுதப்பட்டிருந்தவற்றின் பிரகாரம்..;மயூ மனோ (Mayoo Mano)http://www.blogger.com/profile/12666644873302635477noreply@blogger.comBlogger84125tag:blogger.com,1999:blog-3634761057150025278.post-39611204481074418572021-07-06T15:02:00.001-04:002021-07-06T15:02:03.026-04:00 சந்தோசம் (- நன்றி காலம் இதழ் )<p>அவள் அவனை காரில் ஏற்றிக் கொள்வதற்குப் போன போது வெளியில் மழை தூறிக் கொண்டிருந்தது. லேசான இளவேனில் மழை. அவன் வீட்டு வாசல்படிகள் தொடங்கும் இடத்தில் குந்தியிருந்தான். கைகளின் ஒரு பொலித்தீன் பையுக்குள் ஒன்றிரண்டு உடுப்புகளும் போத்தில்களும் இருந்தன. மறு கையில் போன் இருந்தது. இவளது கார் டிரைவ் வேயில் வந்தும் அவன் எழும்பி வரவில்லை. இன்னொருவர் வந்து அவனுக்கு உபெர் (Uber) வந்துவிட்டதாய் சொன்ன பின் அவன் காரை நோக்கி வந்தான். </p><p>"நீங்கள் தான் கிறிஸ் பார்க்கர்?" அவள் வழமை போல கேட்டாள்.</p><p>"இல்லை, நான் ஜெரோனி"</p><p>"ஓ" </p><p>அவன் பின் கார் கதவைத் திறந்து ஏறி அமர்ந்து கொண்டான். அவளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவள் திரும்பி அவனிடம் பேச முயன்ற போது மற்றவன் இவளின் பக்கமாக வந்தான். </p><p>"நான் கிறிஸ், இவர் என் நண்பன் ஜெரோனி. இவருக்காக நான் தான் உபேர் அழைத்தேன். நான் வரவில்லை"</p><p>"சரி, அப்படியானால் நான் விடைபெறுகிறேன்" இவள் பொதுப் படையாக சொல்லி விட்டு திரும்பி ஜெரோனியைப் பார்த்துப் புன்னகைத்தாள். ஜெரோனி நாற்பதுகளின் ஆரம்பத்தில் இருக்கலாம் என்று தோன்றியது. நல்ல உயரமாக உடற்கட்டுடன் இருந்தான். பேச விருப்பப்படுபவனாக தெரியவில்லை. அவன் காரில் ஏறும்போது அவனுடன் ஏறிய சிகரெட்டும் மழையும் கலந்த மணம் இவளுக்கு ஒத்துவருமாய் போல் இல்லை. அவனும் பதிலுக்குப் புன்னகைத்தான். இவளுடைய போனில் இன்னும் போக இருக்கும் தூரம் அறுபத்தாறு கிலோமீற்றர்களாக இருந்தது. இன்னும் கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் இந்த மனிதனுடன் பயணிக்கவேண்டும். இவளுக்கு யோசனையாக இருந்தது. இந்த உபேர் அழைப்பை அவள் ஏற்றுக் கொள்ளும்போது அவளுக்குத் தோன்றியதெல்லாம் ஓன்று தான், இதை முடித்தால் இன்றைய நாளின் இலக்காக நூறு டொலர்கள் வந்துவிடும். நேரத்துடன் வீட்டுக்குப் போகலாம், போகும் போது மகனுக்கு மக் டொனல்ட்ஸ் சிக்கின் நக்கெட்ஸ் வாங்கிப் போனால் இரவு சாப்பாடு பற்றிக் கவலைப் படத்தேவையில்லை என்பது மட்டும் தான். இப்போது இந்த மனிதனுடன் தூறும் மழையில் ஒரு மணித்தியாலம் பயணம் என்னும் போது அவளுக்கு என்ன நினைப்பதென்று தெரியவில்லை. இறக்கி விட்டுப் போனாலும் கஸ்டமர் சர்வீஸில் முறைப்பாடு செய்துவிடுவார்கள். அது வேறு சிரமமாக இருக்கும். வருவது வரட்டும் என்று தோன்றியது அவளுக்கு. காரை மித வேகத்தில் ஒட்டி நெடுஞ்சாலையில் ஏற்றினாள். </p><p> நெடுஞ்சாலை அவ்வளவு இறுக்கமாக இல்லை. கோரோனாவின் விதிகள் மக்களை கட்டிப்போட்டிருந்தன. இவள் சற்று வேகமாகவே ஒட்டிக் கொண்டிருந்தாள். </p><p>"உங்களுக்கு ரேடியோ வைக்கட்டுமா? எந்த சேனல்?"</p><p>"தேவையில்லை, நான் கேட்பதில்லை."</p><p>"ஓகே."</p><p>அந்தக் காரின் அளவு சிறுத்துக் கொண்டு வருவது போல இருந்தது. மழைத் துளிகள் விழும் சத்தமும், வைப்பரின் சர சரவும் தவிர காருக்குள் வேறு ஓசைகளும் இல்லை. அவனின் மூச்சு சற்று பலமாக வந்து கொண்டிருந்தது. இவளுக்கு அந்த அமைதியின் அடர்த்தியைத் தங்க முடியாது போல தோன்றியது. </p><p>"ஜெரோனி, நீங்கள் இப்போது போகும் இடத்தில் தான் இருக்கிறீர்களா?" </p><p>"யா, ஒருவருடம் ஆகிறது. இங்கு என் அம்மா இறந்துவிட்டார், அதனால்தான் வந்தேன்."</p><p>"ஓ, ஐ ஆம் சாரி"</p><p>"பரவாயில்லை, அவர் முதியோர் இல்லத்தில் இருந்தார். கொரோனா என்று சொன்னார்கள். அவரைப் பார்க்கக் கூடவில்லை. எல்லாம் முடிந்து விட்டது."</p><p>"மிகவும் கடினமான காலம் தான்."</p><p>"நான் இதை எதிர்பார்க்கவில்லை. அவரை இந்த மாதம் முழுதும் சந்திக்கவில்லை. ஒன்றிரண்டு தடவைகள் வீடியோ காலில் பார்த்தது தான். அவர் சந்தோசமான வாழ்க்கையை வாழ்ந்தார். அதனால் என் மனதுக்கு சமாதானமாக இருக்கிறது. அவரது இறுதிக் கிரியையை நான் எங்களது இடத்தில் செய்யவேண்டும் என்று விரும்பினேன். இப்படியாகிவிட்டது."</p><p>"எது உங்களது சொந்த இடம்?"</p><p>"ஹா ஹா, கனடா முழுவதும் எங்களது சொந்த இடந்தான். ஆனால் நாங்கள் அந்த வாழ்க்கையை இழந்துவிட்டோம். நான் இந்த நாட்டின் பூர்வீகக் குடியை சேர்ந்தவன், மனிடோபா மாநிலந்தான் எங்களது பிறந்த இடம். இப்போது இங்கு வந்துவிட்டோம்"</p><p>"ஓ," இவளுக்கு இப்போது என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவனைக் காயப்படுத்திவிட்டோமோ என்று தோன்றியது. "எனக்குத் தெரியவில்லை, சொந்த இடத்தைத் தொலைத்த வலியை நானும் அறிவேன். உன் நிலையை நான் உணர்ந்து கொள்கிறேன்"</p><p>"இட்ஸ் ஓகே. எனக்குப் பழகிவிட்டது. நீ எந்த நாட்டைச் சேர்ந்தவள்? இந்தியாவா?"</p><p>"இல்லை, ஸ்ரீ லங்கா"</p><p>"எனக்கு இந்தியாவை சேர்ந்த காதலி ஒருத்தி இருந்தாள். அவளும் உன் சாயல் தான். அதனால் தான் கேட்டேன்"</p><p>"இட்ஸ் ஓகே"</p><p>"அவளது பெயர் சிவாங்கி, அவள் ஒரு நர்ஸ். அவளை நான் மெடிக்கல் கேம்ப் ஒன்றில் சந்தித்தேன். இருபது வருடங்கள் இருக்கும். அவள் மனிடோபா வந்திருந்தாள். அவளை மறக்கவில்லை நான்"</p><p>"இப்போதும் தொடர்பில் இருக்கிறீர்களா?"</p><p>"இல்லை, அவள் எங்கிருக்கிறாள் என்று தெரியவில்லை. ஐந்து வருடங்கள் அவளுடன் உறவில் இருந்தேன். பிறகு என்னால் முடியவில்லை."</p><p>"நல்லது."</p><p>"நீ இந்துவா? சிவு ஒரு இந்து. அவளுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். அவள் குடும்பத்துக்கு மிகவும் பயந்தவளாக இருந்தாள். என்னால் அதை எதிர்க்கவும் முடியவில்லை, ஒத்துக் கொள்ளவும் முடியவில்லை. அதனால் நான் விலக வேண்டியதாகப் போனது."</p><p>"புரியவில்லை"</p><p>"ம்ம், அவளால் சேர்ந்து வாழ வர முடியவில்லை. அவளது குடும்பம் என்னை வெறுத்தது. இருந்தும் அவள் திருமணத்தை வலியுறுத்தினாள். திருமணம் செய்தால் மட்டும் தான் அவளுடன் வாழ முடியும் என்று சொன்னாள். என்னை மனிடோபாவில் இருந்து ஒண்டாரியோ வர சொல்லி வற்புறுத்தினாள்."</p><p>"நீங்கள் திருமணம் செய்ய விரும்பவில்லையா?"</p><p>"ம்ம், எனக்கு அப்போது இருபத்தைந்து வயதளவு தான் இருக்கும். எனக்கும் நிறைய பொறுப்புகள் இருந்தன. நான் இந்த உலகத்தை சுற்றிப் பார்க்க ஆசைப்பட்டேன். சேர்ந்து வாழ்வதற்கே திருமணம் என்பது எனக்குப் புதிதாக இருந்தது. எல்லாம் அவள் கர்ப்பமானதுடன் முடிந்து போனது."</p><p>"ஓ, குழந்தை என்னவானது?"</p><p>"அதை அவர்கள் குடும்பத்தினர் கலைத்து விட்டனர்."</p><p>அவன் மௌனமானான். அவன் முகத்தில் ஒருவித இறுக்கம் பரவியது இவளுக்கு கண்ணாடியில் தெரிந்தது. இருபது வருடங்களுக்கு முதல் கலைந்து போன குழந்தையின் சாயலை மனது யோசித்தது. இவளது மகன் போல இருக்கலாம். கொஞ்சம் கூட வெள்ளையாக இருந்திருக்கும். </p><p>"அவள் என்னை மிகவும் விரும்பினாள். வீட்டை விட்டு வர அவளுக்கு முடியவில்லை. அவளது அறை யன்னல் ஏறித்தான் அவளை சந்திக்க வேண்டும். அப்போதெல்லாம் வீட்டில் தான் தொலைபேசி இருக்கும். நான் அவளது அறை பக்க தெருவில் காத்திருப்பேன். என்னை அவள் கண்டதும் சுவரேறி அவளறைக்குள் செல்வேன். பிறகு அப்படியே இறங்கி வீட்டுக்குப் போவேன். நான் அவளைத் தொலைத்துவிட்டேன் "</p><p>"நல்ல காதல் கதை தான் வைத்திருக்கிறீர்கள்" இவளுக்கு என்னவோ போலிருந்தது. யார்தான் காதலைத் தொலைக்கவில்லை. எல்லோரும்தான் தொலைக்கிறார்கள். தொலைத்தது தெரியாமாலே தொலைக்கிறார்கள். </p><p>"நீ காதலித்திருக்கிறாயா?"</p><p>"ஆம்,"</p><p>"அவனையே மணந்து கொண்டாயா?"</p><p>"என் முதற் காதலை மணக்கவில்லை"</p><p>"ஓ, உன்னை இரண்டு மூன்று தடவைகள் காதலிக்க அனுமதிக்கிறார்களா என்ன? காலம் மாறிவிட்டது தான்." அவனுக்கு அது ஆச்சரியமாக இருந்தது இவளுக்கு கோபம் வந்தது.</p><p>"ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்?"</p><p>"சிவு திருமணம் செய்திருப்பாளா என்று நான் யோசித்திருக்கிறேன். அதனால் தான் கேட்டேன். நீயும் திருமணம் செய்த பிறகா சேர்ந்து வாழத் தொடங்கினாய்?"</p><p>"அப்படித்தான் விதிகள் எழுதப்பட்டிருக்கிறது, உங்கள் சிவு போல என்னால் என் காதலனை அறைக்குள் யன்னல் வழியாகக் கொண்டுவர முடியவில்லை."</p><p>அவன் புன்னகைக்கும் போது இன்னும் இளமையாகத் தெரிந்தான். </p><p>"என் சிவு" அவன் திரும்ப சொல்லிக் கொண்டான். "உனக்கு சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் நீ அதை செய்திருப்பாயா?"</p><p>"இல்லை என்று பொய் சொல்ல மாட்டேன். அது மட்டுமில்லை, என் முதல் காதல் தொலை தூரத்தில் இருந்தது. அவனால் இந்த தொலை தூரக் காதலை சமாளிக்க முடியவில்லை. இன்னொரு பெண்ணைத் தேடிப் போய்விட்டான்"</p><p>"நீ திருமணம் செய்து கொண்டததிற்காக வருத்தப்பட்டிருக்கிறாயா?"</p><p>"அப்படியில்லை, கொஞ்சம் சேர்ந்து பழகி அதன் பிறகு குடும்பம் என்று ஆரம்பித்திருந்தால் நல்லது என்று தோன்றி இருக்கிறது."</p><p>"அதை இப்போது உணர்கிறாயா?"</p><p>"அப்படி யார் தான் உணரவில்லை என்கிறீர்கள்? எனக்குத் தெரிந்து அதிகமானவர்கள் அப்படித்தான் உணர்கிறார்கள். யாரேனும் இல்லை நான் ஒரு போதும் மண வாழ்க்கை சலித்ததாய் காணவில்லை என்று சொன்னால் அதை நான் பொய் என்பேன்." </p><p>அவளுக்கு இந்த வாழ்க்கை பிடிக்கவில்லையென்று அவனுக்கு சொல்லவேண்டும் என்று தோன்றியது. அவன் தன்னை மதிக்க மாடடானோ என்று சந்தேகம் வந்தது. அவளுக்கு தன் வாழ்வில் ஆணின் தேவை குறைந்து கொண்டே வருவது போல இருந்தது. அப்படி இருப்பதை மறைத்துக் கொண்டு திரியப் பழகி இருந்தாள். திருமணம் செய்தது தப்போ என்றுகூட அவள் யோசித்திருக்கிறாள். அவளுக்கு அப்போது தேவைப்பட்ட ஆண் துணையை அவளால் சாதாரணமாக அடைய நேர்ந்திருந்தால் அவள் திருமணம் செய்திருப்பாளா என்று தோன்றியது. அவன் தனக்குள் துளைத்து மனதில் கேள்விகளை உருவாக்குவதை அவள் விரும்பவில்லை. அந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல அவளுக்கு பிடிக்கவில்லை. </p><p>"எனக்கு உன்னை பிடித்திருக்கிறது, நீ இயல்பாக பேசுகிறாய். நீ என்னை மதிப்பிட முயற்சிக்கவில்லை" அவன் புன்னகை மாறாமல் பதில் சொன்னான்.</p><p>"நீங்கள் இப்போது யாருடன் இருக்கிறீர்கள்?"</p><p>"என் வாழ்க்கை முழுவதும் நான் திருமணம் செய்து கொள்ளவேயில்லை. இப்போது எனது தோழியுடன் ட்ரைலர் ஒன்றில் வசிக்கிறேன். எனது வீடு, வாகனங்கள் எல்லாவற்றையும் விற்று விட்டேன். ஒரு சின்ன டிரக் வைத்திருக்கிறேன். நினைத்தவுடன் அதில் என் ட்ரெய்லரை கொழுவிக் கொண்டு பயணப்படுவேன். உனக்குத் தெரியுமா, என் வாழ்க்கையில் குறைந்தது இருபது பெண்களை சந்தித்திருக்கிறேன். ஒவொரு பெண்களும் ஒவ்வொரு நாட்டை சேர்ந்தவர்கள். நான் யாரையும் ஏமாற்றவில்லை. என்னைப் பற்றி சொல்லித்தான் பழகி இருக்கிறேன். அவர்களுடன் பழகிய நாட்கள் செக்ஸ் என்பது தாண்டி நாங்கள் மகிழ்வாகவே இருந்தோம். பிரியும் போதும் அப்படியே, அனைத்து கலாச்சாரங்களையும் நான் மதிக்கிறேன். என் மனத்துக்குப் பிடித்த சிலவற்றைப் பின்பற்றுகிறேன். இப்படி உன்னால் ஒத்துக்கொள்ள முடியுமா?"</p><p>"என் வாழ்க்கை ஒரு காதல் தோல்வியிலும் மற்ற காதல் திருமணத்திலும் முடிந்ததையொட்டி நான் கவலைப் படவில்லை. ஏனென்றால் கவலைப்பட அவகாசம் கிடைக்கவில்லை. நான் ஓடிக்கொண்டேயிருக்கிறேன். எனக்கு காதல் அன்பு செக்ஸ் என்பது தாண்டிய வாழ்க்கை தேவைப்படுகிறது. நான் நாடோடியாகவே இருக்க ஆசைப்படுகிறேன். என் கவலையெல்லாம் ஏன் நான் நாடோடியாக இருக்க முடியாதிருக்கிறதென்பது தானேயல்லாது இருபது நாட்டு ஆண்களுடன் வாழ முடியாமல் போனதில்லை" </p><p>"உன் ஆசைகளை நீதான் நிறைவேற்ற வேண்டும், மற்றவர்கள் அல்ல. நீ எப்படி உபேர் ஓடுகிறாய்? நான் உபேர் எடுப்பதில்லை. ஆனால் நான் நினைக்கிறேன் பெண்கள் இந்த வேலை செய்ய விருப்பப் படுவதில்லை."</p><p>"என் கணவரது வேலை கொரோனாவால் நின்று போனது. அரசாங்கம் தரும் பணம் போதுமாக இல்லை. என்னால் வேறு வேலை இப்போது தேட முடியாது. அதனால் நான் உபேர் ஓடுகிறேன். மற்ற நேரங்களில் சாப்பாடு டெலிவெரி செய்கிறேன்" இவளுக்கு கண் கலங்கியது. குடும்பத்தின் சுமை அவள் தோள்களில் அப்படி அழுத்தியது. இன்னும் என்னென்ன வரப்போகிறதோ தெரியவில்லை.</p><p>"ஓ, உன்னை நினைத்து நான் வருத்தப்படுகிறேன். உன்னால் முடிந்தால் இப்போது என்ன செய்ய விரும்புகிறாய்?"</p><p>"என் மகனுடைய உரிமைகள் பாதிக்கப்படாத ஒரு வாழ்க்கையை அவனுக்கு கொடுக்க வேண்டும். அதை முன்னிறுத்தி எதுவும் செய்வேன்" </p><p>"ஓ" ஒற்றை சொல்லோடு அவன் மௌனமானான். </p><p>இவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. பேசவே மாட்டான் போல இருந்த அவனது கேள்விகள் அவளுக்குள் இறங்கி வேலை செய்யத் தொடங்கின. அவளால் முடிந்திருந்தால் எத்தனையோ செய்திருப்பாள். ஏன் முடியவில்லை என்று தான் தெரியவில்லை. தெரிந்துகொள்ளவும் அவள் முயற்சிக்கவில்லை. அவளுக்கான கோடுகளை யார் யாரோ போட்டுக் கொடுத்தார்கள். அவளது வேலை அதில் பிசகாமல் நடப்பது மட்டுமாகத் தானிருந்தது. அவள் அதில் சிறந்திருந்தாள். </p><p>கார் நெடுஞ்சாலைகளில் இருந்து இறங்கி சாதாரண வீதிகள் தாண்டி இரு பக்கமும் வயல்கள் சூழ்ந்த குறுந்தெருக்களுக்குள் நுழைந்தது. குதிரைகளும் மாடுகளும் மேய்ந்து கொண்டு நின்றன. இவளுக்கு ஊர் நினைவு வந்தது. எப்போதிருந்து தான் இப்படி விலங்குகளைக் காண முடியும். அவள் அமைதியாகப் பார்த்துக் கொண்டு வந்தாள். மனம் கொஞ்சம் யோசனையில் இருந்தது. அவனுந்தான். அவள் மௌனம் அவனைக் காயப்படுத்தியிருக்கலாம்; இல்லை அவனும் சிவுவை யோசித்திருக்கலாம். அப்படியே கண்களும். </p><p>"நீ சந்தோசமாகவிருக்கிறாயா?"</p><p>"என்ன?" அவளுக்கு அப்படி ஒரு கேள்வி இருக்கிறதா என்று தெரியாதது போலத் தோன்றியது. அந்தக் கேள்வி எந்த மொழியிலும் கேட்கப்பட்டாலும் அதற்கு என்ன பதில் சொல்வதென்று அவளுக்கு தெரிந்திருக்கவில்லை. அவளிடம் யாரும் அந்தக் கேள்வியைக் கேட்டதுமில்லை. சந்தோசம் எப்படியிருக்கும் என்பது அவளுக்கு மறந்துவிட்டது போலத் தோன்றியது. அவளுக்கு சடுதியாக அவனது அம்மாவின் சாவு நினைவுக்கு வந்தது. இந்த மரணம் எப்படியிருக்கும்? எந்தவகையான ஆறுதலை அது தரக்கூடும். திரும்பி அந்த விலங்குகளைப் பார்த்தாள். மழை பெலுக்குமாய்ப் போல இருந்தது. அவை தங்கள் குடிலுக்குள் புகுந்து கொண்டிருந்தன. அவள் அவனை இறக்கிவிட்டு இன்னும் ஒரு மணித்தியாலத்தில் செய்யப் போவதைப் போல. இந்த ஆயுளைக் கடந்தே ஆகவேண்டுமென்ற தீவிரம் அவளுக்குள் பொங்கி வழிந்தது. அவள் காரை நிறுத்திவிட்டு மழைக்குள் ஒடத் தொடங்கினாள்.</p><p><br /></p><p>- நன்றி காலம் இதழ் </p>மயூ மனோ (Mayoo Mano)http://www.blogger.com/profile/12666644873302635477noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3634761057150025278.post-28237194299212764442020-06-16T12:50:00.002-04:002020-06-19T00:48:05.953-04:00அம்மாவாதலின் கதை....!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<b>த</b>ண்ணீர்க்குடம் உடையும் போது காலை பத்து மணி. அவள் முழித்திருந்தாலும் கண்கள் திறக்காமல் சரிந்து படுத்திருந்தாள். வெது வெதுப்பான சுடு தண்ணீர் போல ஒரு திரவம் கால்களை நனைத்து மெலிதாக கோடு போட்டபடி வழிந்தது. முதலில் சிறுநீர் தான் என்று நினைத்தாலும் என்னவாயிற்று திடீரென்று என்பதான ஒரு சந்தேகத்தில் எழும்பி குளியலறைக்குள் நுழைந்தாள். படித்திருந்த விஞ்ஞான அறிவு இது தண்ணீர்க்குடம் என்று சொல்லியது. ஒரு விதமான வலியும் தோன்றவில்லை. வலி எப்படி இருக்கும் என்றும் தெரியாது, ஏனெனில் இது தான் முதல் பிள்ளை. இன்னும் மூன்று நாட்கள் இருக்கிறது என்றபோதும் சற்றே முன்னே பின்னே ஆகும் என்றதும் அவளுக்கு தெரியாமல் இல்லை. குழந்தைப்பேறு விடுமுறை காலம் அன்று தான் தொடங்கியிருந்தது. முதல் நாள் கூட வேலைக்கு போய் விட்டு வந்து இன்னும் இரண்டு நாள் கொஞ்சம் ஓய்வாய் இருக்கலாம் என்று இருந்த போது இப்படி தொடங்கியது கொஞ்சம் ஏமாற்றமாய் இருந்தது. ஆனாலும் ஏதோ ஒருவித நிம்மதி நெஞ்சில் பரவாமல் இல்லை.<br />
<div>
<br /></div>
<div>
ஷவரை இயக்கி சூடு உணரக்கூடிய மாதிரி தண்ணீரில் தலையை நனைத்தபடி யோசித்தாள். இனி ஹாஸ்பிடல் போக வேணும். அதுக்கான பையை நேற்றிரவு தான் கணவனோடு சேர்ந்து அடுக்கி முடித்திருந்தாள். நேற்று பின்னேரமாய் நடை பயிற்சி முடிந்து வரும்போது ஏதோ ஒரு மாற்றம் உணரப்பட்டதுதான். தோலில் ஒரு சின்ன கீறல் விழுந்தால் வரும் வலி போல கண நேரத்துக்கும் குறைவான பொழுது உணரப்படட மெல்லிய வலி அது. என்னவோ உள் மனம் சொல்ல இரவே எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொண்டாள். ஷவரில் இருந்து வெளியில் வந்து தலை துவட்டிய படியே கணவனை அழைத்து விபரம் சொல்லிக் கொண்டாள். அவன் எழுபது நிமிடங்கள் அளவு காரில் வந்தால் எடுக்கும் தூரத்தில் வேலையில் இருந்தான். அவன் வந்து ஹாஸ்பிடல் போகும் அளவுக்கு காத்திருப்பதில் எந்த சிக்கலும் வந்துவிடப் போவதில்லை என்று தோன்றியது. அனால் அவனது மனத்திருப்திக்காக ஒரு டாக்ஸியை பிடித்து போய்விடுவதாய் சொல்லி விட்டு போனை வைத்துவிடடாள். மாடிப் படிகள் இறங்கி வந்தால் குழந்தையின் கார்சீட்டின் நினைவு வந்தது. அதில்லாமல் குழந்தையை வீடு கொண்டுவர முடியாது. உடைக்காமல் அப்படியே இருந்த அந்தப் பெட்டியுடன் போராடி ஒரு மாதிரி அதை வெளியில் எடுத்துக் கொண்டு டாக்ஸியில் ஏறும் போது மணி பதினொன்றரை ஆகிவிட்டிருந்தது. தண்ணீர்க்குட நீர் மாதவிடாயின் முதல் முதல் நாள் அளவுக்கு வெளியேறிக்கொண்டிருந்தது. பெரிதாக ஒரு வித்தியாசமும் தெரியவில்லை. </div>
<div>
<br /></div>
<div>
ஹொஸ்பிடலில் ஒன்றும் சொல்லாமல் சேர்த்துக் கொண்டார்கள். குழந்தை பிறக்க இன்னும் ஒரு நாளாவது ஆகும் என்று சொன்ன போது சோர்வாக இருந்தது. எப்படி எப்படியெல்லாமோ மனதை தயார் செய்திருந்தாலும் காத்திருத்தல் எப்போதும் இலகுவாய் இருப்பதில்லை தானே. எதற்குதான் காத்திருக்க யார்தான் தயாராகவிருக்கிறார்கள். ஏன் இந்தக் குழந்தை தங்கக்கூட அவள் காத்திருக்கவில்லை. அவளுக்கு எப்பவும் எல்லாமே உடனே உடனே நடக்க வேண்டும். நினைத்ததை சாதித்த பழக்கம் அவளை இம்சைப் படுத்தியது. தாதி வந்து சும்மாயிருக்க வேண்டாம் என்று நடக்க சொன்னபோது எரிச்சல் வந்தது. இனியில்லை என்ற ஒரு சந்தர்ப்பத்தில் தான் சிசேரியன் செய்து குழந்தையை வெளியில் எடுப்பார்கள் என்பதை அறிந்தே இருந்தாள். இன்னும் ஒரு நாள் இந்த தாதிமார்களை, ஹாஸ்பிடல் அறையை சகித்துக் கொண்டிருக்க இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்ற, நடந்தால் கொஞ்சம் சீக்கிரமாக குழந்தை பிறந்து விடும் என்ற ஆசையும் சேர வெறி பிடித்தவள் மாதிரி நடக்க தொடங்கினாள். கணவன் பாவம், வேறு வழியில்லாமல் அவள் கையைப் பிடித்தவாறும் அவளது வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாவிடில் பின்னேயாய் திரிந்து கொண்டிருந்தான். குழந்தை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு இறங்கி வரும் போது இரவு பத்தரை ஆகிவிட்டிருந்தது. அதுக்குள் தண்ணீர்க்குட நீர் முழுவதும் வெளியேறி முடிந்து விட்டிருந்தது. அவள் தாதியிடம் சொல்லிக் கொண்டு திரும்பவும் குளித்துவிட்டு வந்து அமர்ந்து கொண்டாள். இனி நடக்க முடியும் என்று தோன்றவில்லை. வலியும் தொடங்கவில்லை. இப்போது அவளுக்கு உண்மையாகவே கோபம் வந்தது. ஆனால் யாரைத்தான் கோபித்து கொள்வது என்று தெரியவில்லை.<br />
<br />
எல்லா வசதிகளுடனும் கூடிய அறை அது. அவள் அறைக்கு எதிராக நர்சிங் ஸ்டேஷன் இருந்தது. இவளது கட்டிலிலிருந்து அவர்களை நன்றாகவே பார்க்க முடிந்தது. அங்கும் இங்குமாய் ஓடிக் கொண்டிருந்தாலும் இவளது பார்வை படும்போது யாரும் புன்னகைக்க மறக்கவில்லை. "இண்டைக்கு என்ன ராசியோ தெரியவில்லை. ஒரு குழந்தைகளும் வர மாட்டினம் எண்டு அடம்பிடிக்கினம்" சிரித்துக் கொண்டே ஆங்கிலத்தில் சொன்ன அந்தப் பெண் மருத்துவருக்கு கோபமே வராது போலத் தோன்றியது. "எத்தனை குழந்தைகள் இண்டைக்கு பிறப்பார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள்?" இவளுக்கு தன் மகனோடு இந்தப் பூமிக்கு வரப் போகும் ஆண் பெண் தேவதைகளை, போராளிகளை அறிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வம் மிகுந்தது. "நீ நம்ப மாடடாய். இன்னும் மூன்று பேர் உன்னைப் போல இருக்கினம். தண்ணீர்க் குடம் உடைந்து, இன்னும் வலி வராமலும், செயற்கை வலி மருந்து ஏற்றியபடியும். அவர்களுக்கு குழந்தை கூட இறங்கி இருக்கிறது. ஆனால் இன்னும் எப்படியும் நான்கு ஐந்து மணித்தியாலங்கள் ஆகும். ஆனால் உனக்கு நாளை தான் பிரசவம் நடக்கும். யோசிக்காதே. வலி தானாகவே தோன்றினால் நல்லது. அதற்குத்தான் காத்திருக்கிறோம். நீ கொஞ்சம் ஓய்வாக அமர்ந்திரு." டாக்டர் போய்விட்டார். இவள் பேசாமல் போனை எடுத்து நோண்ட ஆரம்பித்தாள். கணவனுக்கு இவளைப் பார்க்க பார்க்க விசர் பிடித்திருக்க வேண்டும், சாப்பிட ஏதும் வாங்கி வருகிறேன் என்று கீழிறங்கி போய்விட்டான். </div>
<div>
<br /></div>
<div>
இரவு பத்தரை போல டாக்டர் வந்து வலி வருவதற்காண மருந்து ஏற்றுவதுதான் அடுத்த நிலை என்னும் போது எதையாவது செய்து தொலையுங்கள் என்ற நிலைக்கு அவள் வந்துவிட்டிருந்தாள். வலிக்குரிய மருந்து ஏற்றப்பட்டு கொழுவி விட்டிருந்தார்கள். வலியை மறக்கும் மருந்தை எடுப்பதை அவள் விரும்பவில்லை. இந்த பிரசவவலி பற்றி எல்லோரும் கதை கதையாய் சொல்லியிருந்தார்கள். அதை உணர்ந்து பார்த்தால் என்ன என்று தோன்றியது. அதோடு அந்த மருந்தை முள்ளந்தண்டில் ஏற்றுவார்கள், அதனால் ஏற்படும் பக்கவிளைவு நெடுங்காலம் இருக்கும் என்றதை அறிந்திருந்தாலும், வலியை அனுபவிப்பதில் எந்த தயக்கமும் இருக்கவில்லை என்பதாலும் அவள் பேசாமல் இருந்தாள். கணவன் அறைக்குள் இருந்த சோபா படுக்கையில் தூங்கிவிட்டிருந்தான். அவளைவிட அவன்தான் உணர்ச்சிப் பெருக்கில் இருப்பதாக அவளுக்குத் தோன்றியது. அவள் மனது ஒருவித அமைதியில் இருந்தது. கல்யாணம் முடிந்து, ஒரு வருடம் ஒருவரை ஒருவர் அறிந்து, உலகம் சுற்றி பின் திடடமிட்டு குழந்தை என்னும் அடுத்த நிலைக்கு போய்விட்டிருந்தவர்கள் அவர்கள். எப்படியோ குழந்தை பிறந்துவிடத்தான் போகிறது. முயற்சி செய்து சுகப்பிரசவமாய் இருக்கப் பார்ப்பார்கள். இல்லை என்றால், வெட்டிக் கிழித்து எடுப்பார்கள். இதில் எதை நினைத்து பயப்பட வேண்டும் என்று அவளுக்கு தெரியவில்லை. அவனுக்கோ அவளது அமைதி வியப்பாய் இருந்தது, அதிலேயே அவனுக்கு டென்ஷன் ஏறி விட்டிருந்தது. இது போதாதென்று தொடந்து அழைத்த சொந்தங்கள் அவனை இன்னும் குழப்பி விட்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் இருவரது போனையும் அவளே பதில் சொல்லி வைக்க வேண்டியதாயிற்று. அவளுக்கு அதிலொரு கஷ்டமும் இல்லை. வலி வந்து போகும் இடைவெளி குறைய ஆரம்பித்தது. ஆனால் குழந்தை தான் கர்ப்பப்பையில் இறங்க மாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருந்தது. </div>
<div>
<br /></div>
<div>
அவள் இந்தக் குழந்தையை மகிழ்வாகவே ஏற்றிருந்தாள். ரொம்பக் காலமாய் காத்திருக்க வைக்காமல், நினைத்த உடன் கருவில் தோன்றியதாலோ என்னவோ குழந்தை அமையாமல் போய் ஒவ்வொரு மாதங்களையும் கண்ணீரில் கரைக்கும் பெண்களின் வலி அவளுக்கு ஏட்டளவிலேயே தெரிந்திருந்தது. குழந்தையை சுமக்கும் காலங்களையும் அவள் வெகு இயல்பாகவே கடந்திருந்தாள். வழமையாக இருக்கும் கர்ப்ப கால அவஸ்தைகளையும் சாதாரணமாகவே கடந்தாள். பிடித்ததை தின்றாள். வழமை போல் வேலைக்குப் போய் வந்தாள். வீட்டு வேலைகளிலும் குறை வைக்கவில்லை. "உனக்கு அறிவிருக்கா, நீ என்ன நினைச்சுக் கொண்டு திரியிறாய்" என்று கணவன் கத்திப் பார்த்து களைத்தான். அவள் இயல்பாய், வெகு இயல்பாய் கடந்தாள். கிட்டத்தட்ட நூறுக்கும் கூடவாய் புத்தகங்கள் வாசித்து முடித்திருப்பாள். அது போதாதென்று சிறியவர் பெரியவர் பார்க்கும் படங்கள் என்ற பேதமில்லாமல் எல்லாப் படங்களும் பார்த்து தீர்த்தாள். பார்ப்பது மட்டுமில்லாமல் குழந்தைக்கும் விளங்கப் படுத்தினாள். அவளுக்கு யாரைப் பற்றியும் ஒரு கவலையும் இருக்கவில்லை. தனக்குப் பிடித்த விளையாட்டுப் போட்டிகள், நிகழ்ச்சிகள் மட்டுமில்லாமல் படித்த நாவல்களைக் கூட திருப்பி வாசித்து தீர்த்தாள். போதாக்குறைக்கு தனக்குப் பிடித்த கணக்கு, கெமிஸ்ட்ரி புத்தகங்களையும் எடுத்து வைத்துக் கொண்டு கணக்குப் போட்டுக் கொண்டிருந்த அவளை கணவன் விசித்திரமாகப் பார்த்தான். தன் குழந்தைக்கு எல்லாவற்றையும் கடத்தி விடவேண்டும் என்ற தீவிரம் அவளை அனைத்தையும் செய்ய வைத்தது. குழந்தை பிறந்ததும் தனக்கென்ற ஒரு உலகை நெய்து விடுமென்பதில் அவளுக்கு எந்தவிதமான சந்தேகங்களும் இல்லை. அவளும் அதையே விரும்பினாள். சுயமாய் இயங்கும் தன் மூலமாய் இந்த உலகுக்கு வருகை தரப்போகும் உயிரை கொண்டாட விரும்பினாள். பிறந்து வளரும் போது எந்தவிதக் கடடாயங்களையும் அந்தக் குழந்தை மேல் திணிக்கும் எண்ணம் அவளுக்கு தூண்டற இல்லை. கருவில் இருக்கும் போது மட்டுமே தன்னுடலின் ஒரு அங்கமாய் இருக்கும் அந்த உயிருக்கு சில விஷயங்களை சொல்லிவிட வேண்டுமென்ற எண்ணம் அவளை அலைக்கழித்தது. தன மனம் திருப்திபடும் அளவுக்கு அவள் கர்ப்ப காலத்தைக் கொண்டாடியிருந்தாள்.</div>
<div>
<br /></div>
<div>
அடுத்த நாள் விடிந்து காலை பத்தரை ஆகிவிட்ட போதும், குழந்தை இன்னும் இறங்க இடமிருப்பதாக காத்திருக்க நேர்ந்தது. ஒரு வைத்தியரே சேவையில் இருந்ததாலும் இன்னும் மூன்று கர்ப்பிணிகள் பிரசவிக்கப் போராடிக் கொண்டிருந்ததாலும் விடிகாலை ஐந்தரை போல இவளுக்கு ஏற்றப்பட்டுக்கொண்டிருந்த வலி கூட்டுவதற்கான ஹோர்மோனை நிறுத்தி விட்டிருந்தார்கள். வயிற்றின் வெளிப்பகுதியில் பொருத்தியிருந்த கருவியில் குழந்தையின் இதயத்துடிப்பும் ஒக்ஸிசன் அளவும் ஓடிக் கொண்டிருந்தது. இவள் அங்கேயிங்கே நகர்ந்தாள் என்றால் அது நர்சை கூப்பிட்டது. அவர்களில் ஒருவர் வந்து, மீண்டும் அந்தக் கருவியை சரியாய் வைத்து சிரித்து விட்டுப் போனார்கள். குழந்தை எந்தப் பிரச்சினைகளும் இல்லாமல் இருந்ததாலும் இவளும் வலியைத் தாங்க மாட்டாதவள் போல இல்லாததாலும் நர்ஸ்மாரும் பேசாதிருந்தனர். இயற்கையாய் குழந்தை பிறந்துவிடும் என்பதில் மட்டும் நம்பிக்கை வைத்திருந்தவர்களாய் அவர்கள் இருந்தனர். தண்ணீர் எல்லாம் வடிந்து போனபோதும், முப்பது மணித்தியாலங்கள் கடந்த போதும் குழந்தையின் இதயத்துடிப்பில் எந்த வித மாற்றங்களும் இல்லை. இவளிடமும் தான். அடிக்கடி வந்த டாக்டர் பார்த்துவிட்டு, "உன் குழந்தை தெரியாமல் தண்ணீர்க்குடத்தை உடைத்துவிட்டது, இப்போது வரப்பிடிக்காமல் உள்ளேயே இருக்க பார்க்கிறது" என்று சொல்லி சிரித்தபோது அவளுக்கும் அது உண்மையாகவிருக்குமோ என்று தோன்றியது. நர்ஸ்மார் பெரிய பந்தொன்றைக் கொண்டுவந்து அவளை அதன் மீது சரிந்து படுக்குமாறு கேட்டுக் கொண்டனர். இன்னும் கொஞ்சம் இறங்க வேண்டும், இன்னும் கொஞ்சம் திரும்ப வேண்டும் என்னும் மந்திரங்களையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தனர். இவளுக்கு வலி தாங்க முடியாமல் மயக்கம் வருமாய்ப் போல இருந்தது. ஆனாலும் அவர்கள் சொல்வதையெல்லாம் செய்து கொண்டிருந்தாள். அவளுக்கு இனியும் காத்திருக்க முடியுமென்று தோன்றவில்லை.<br />
<br />
பதினொன்றரை போல வலி உயிர் போவது போல வந்து வந்து போனது. இவள் நிலத்தில் கால் விரல்களை அழுத்தியும், கட்டில் சட்டங்களை இறுக்கப் பிடித்தும் வலியை கட்டுக்குள் வைத்திருக்கப் போராடினாள். "வலியை தாங்குவதற்கே உன் சக்தி முழுக்க செலவழிக்கிறாய். இதைவிட குழந்தை நன்கு இறங்கி வந்ததும் அதை வெளியே தள்ளுவதற்கும் உனக்கு சக்தி வேண்டும். இப்பவே ஒரு நாள் தாண்டிவிடடாய். அவசரமாய் சிசேரியன் செய்யும் தேவை நேர்ந்தாலும் நீ எபிடூரல் (வலி மறக்கும் ஊசி, முள்ளந்தண்டில் ஏற்றுவது) போடுவது நல்லது." வரும் போகும் நர்ஸமாரும் டாக்டரும் திரும்ப திரும்ப வற்புறுத்தினர். அவளுக்கும் அவர்கள் சொல்லும் நியாயம் விளங்குமாய் பட்டது. அவளால் இனி என்ன நடக்கவிருக்கிறது என்று சொல்ல முடியாமல் இருந்தது. "Go with the flow" மனநிலைக்கு அவள் வந்து விட்டிருந்தாள். ஊசி ஏற்றி முடிக்கும் போது மதியம் பன்னிரண்டு ஆகிவிட்டிருந்தது. அவள் அதோடு படுத்து எழும்பியபோது பின்னேரம் நான்கு மணி.<br />
<br />
ஐந்து மணிக்கு அறைக்குள் வந்த டாக்ட்டருக்கும் தாதிமாருக்கும் ஒருவித தவிப்பும் பரிதாப உணர்வும் நிரம்பியிருந்தது போல இவளுக்குப் பட்டது. இடுப்புக்கு கீழ் எந்தவித உணர்வும் இருக்கவில்லை. கலக்கமூட்டும் எந்தவித சமிக்ஞகளையும் குழந்தை தரவும் இல்லை. இவள் அவர்களது முகத்தையே களைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள். இரவு எட்டுமணியளவில் குழந்தை இரங்கி இறங்கி வந்த போதும் இன்னும் கொஞ்சம் திரும்பினால் இலகுவாக இருக்கும் என்ற நர்ஸை அடக்கி, "இல்லை, இனியும் வைத்திருக்க முடியாது. நீங்கள் உங்களால் இயன்றவரை தள்ள முயற்சியுங்கள்" என்று முடித்துக் கொண்டார் டாகடர். இடுப்புக்கு கீழ் வலி துப்புரவாக தெரியாத காரணத்தால் வயிற்றில் பொருத்தப் பட்டிருக்கும் கருவியில் வலி வரும்போது தெரியும் சமிக்ஞகளை வைத்து நர்ஸ்மார் சொல்லும் போது பெருமூச்செடுத்து குழந்தையை கீழே தள்ளவேண்டும். இவளும் தாதிமாரும், கணவரும் சேர்ந்து தள்ளியும் குழந்தை ஒரு அளவுக்கு கீழ் வரவே இல்லை. பத்து மணியளவில் எல்லாரும் சோர்ந்த போன பின்பு இவளுக்கு கொஞ்சமாய் பயம் வந்தது. குழந்தை ஏதோ இடத்தில் சிக்கிக் கொண்டது போல விரித்த கால்களை சேர்க்க முடியாத அவஸ்தையாய் உணர்ந்தாள். "இப்ப ரெண்டு வழியிருக்கு. பிப்டி பிப்டி சான்ஸ். ஒண்டு போசெப்ஸ் ஆயுதம் பாவித்து குழந்தையின் தலையைப் பிடித்து இழுப்பது இல்லையோ சிசேரியன் செய்து எடுப்பது. இவ்வ்ளவு கஷ்டப்பட்டுவிட்டு சிசேரியன் போவதத்திற்கு முன் போசெப்ஸ் பாவித்து எடுக்க முயற்சிக்கலாம்" டாக்டர் சொல்ல இவளுக்கு விசர் ஏறியது. இதை முதலிலே சொல்லியிருக்கலாம் என்று தோன்றியது. கணவனோ இவளை ஆறுதல் படுத்தும் நோக்கில், "இவளவத்துக்கு பொறுத்திட்டாய், இதையும் செய்து பார்ப்பம். இல்லாட்டி பட்டதெல்லாம் வீண். என்ட செல்லம் எல்லே" என்றதோடு நிறுத்திக் கொண்டான். இவள் என்னவெண்டாலும் செய்யுங்கோ என்றவாறு பேசாமலே இருந்தாள். குழந்தையை போசெப்ஸ் வைத்து இழுத்தபோது அது அவளைக் கிழித்தபடி வழியெங்கும் காயம் பண்ணிக் கொண்டு சிவனே என்று வந்து சேர்ந்தது. குழந்தையைத் தூக்கி டாக்டர் காட்டியபோது செஞ்சாந்து நிறத்தில் இரத்தம் வழிந்தபடியிருந்தது. இவள் தொடையெல்லாம் இரத்தம் பாய்ந்தோடி நனைத்தது. இவள் குழந்தையையும் உணர்வு மரத்த கால்களையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.<br />
<br />
முப்பத்தாறு மணி நேரம் காத்திருக்க வைத்து வந்து சேர்ந்த மகனின் தொப்புள் கொடி வெட்டி, முகம் பார்த்து சற்றே மயங்கி அமர்ந்த கணவன், எந்தவித உணர்வுகளும் முகத்தில் காடடாது பேசாது இருந்த அவளைப் பார்த்து இவளெல்லாம் என்ன பிறவி என்று நினைத்திருந்தால் கூட ஆச்சரியப் பட்டிருக்க மாடடாள். குழந்தை கூட அழாமல் இருந்தது அவளுக்கு மட்டுமல்ல அங்கிருந்த எல்லோருக்கும் பேச்சாய் இருந்தது. "இவன் உண்மையிலேயே பைட்டர் தான்" டாக்டர் சந்தோஷமாகவே குழந்தையைத் தூக்கி அவளுக்கு காட்டினார். அவளுக்குள் அமைதி நிறைந்து விட்டிருந்தது. தன் குழந்தை என்று அறிமுகமாகும் அந்த உயிரை புன்னகையுடன் பார்த்தாள். அவள் அழவில்லை. தான் சரியாகத் தான் குழந்தையை வரவேற்கிறேனா என்று அவளுக்கே சந்தேகமாய் இருந்தது. படங்களிலெல்லாம் கண்ணீர் வழிய வழியப் பார்க்கும் மனைவிமார் நினைவுக்கு வந்தனர். குழந்தையை நர்ஸ்மார் சுத்தப்படுத்த டாக்டர் அவளுக்கு தையல் போடவாரம்பித்தார். "நீங்கள் ஏன் தையல் போடவேண்டும். நீங்கள் வெட்டினீர்களா" இவளுக்கு மூளை வேலை செய்யத் தொடங்கியது. குழந்தை பிறக்கும் போது வழி ஏற்படுத்திக் கொடுக்க சிறிது தூரத்துக்கு வெட்டுவது சாதாரணம் என்பதை இவள் அறியாமல் இல்லை.<br />
<br />
"இல்லை, உன் குழந்தை கிழித்துக் கொண்டுதான் வந்தான். நான் என்ன செய்ய" டாக்டர் தையல் போடுவதை நிறுத்தாமல் பதில் சொன்னார். எப்பிடுறலின் வலு குறைந்து போனது போல தோன்றியது. ஒவ்வொரு தையலும் அவளுக்கு வலித்தது. அதை டாக்டருக்கு சொன்னபோது, "குழந்தையைப் பார். உனக்கு வலியெல்லாம் தெரியாது" அவர் தையல் போடுவதிலேயே கண்ணாயிருந்தார். இவளுக்கு விசர் ஏறியது. "குழந்தையைப் பார்த்தால் வலி தெரியாது என்று யார் உங்களுக்கு சொல்லியது. நீங்கள் என்ன குழந்தைக்கா தையல் போடுறீங்கள்" இவள் குரல் உயர்ந்தது. இவளுக்கு விளங்கவில்லை. குழந்தை பிறந்துவிட்டது. குழந்தை எப்படியோ பிறக்கும் என்று இவளுக்கும் தெரியும். ஆனால் குழந்தையின் முகத்தைப் பார்த்தால் இவளுக்கு எப்படி வலி தெரியாமல் போகும். நர்ஸ் இவளைப் பார்த்து புன்னகைத்தாள். "இவர் இதை எல்லாப் பெண்களுக்கும் சொல்வார். இந்தக் கேள்வியை ஒருவரும் இவரைக் கேட்கவில்லை. தாங்க் கோட். நீ கேட்டுவிட்டாய்" என்றாள். "இவ்வளவு தையலை நான் எதிர் பார்க்கவில்லைதான்" என்ற டாகடரைப் பார்க்க ஒரு மாதிரியாக இருந்தது. குழந்தையைப் பத்திரமாய் வெளியே எடுக்க அவர் பட்டபாடு நினைவுக்கு வந்தது. இவள் வலியைத் தாங்கிக் கொள்வது என்று தீர்மானித்துக் கொண்டாள். டாக்டருடன் கத்தி கணவனைக் கலவரப்படுத்த இவள் விரும்பவில்லை. கடைசியில் குழந்தையை அவள் மார்பின் மேல், குழந்தையின் தலை அவளது கழுத்துக்கு கீழ் இருக்குமாறு குப்புறப் போட்டிருந்தார்கள். குழந்தையின் மென் சூடு அவளுக்கு இதமாக இருந்தது. லேசாக எழும்பி பதியும் முதுகைப் பார்த்தவாறு அவளும் தூங்கிப் போனாள். </div>
<div>
<br /></div>
<div>
இரு நாட்கள் கழித்து வீட்டுக்கு வந்த பிறகும் அவளால் எழும்பி நடக்க கொள்ள சிரமமாய் இருந்தது. சிறுநீர் கழிக்கப் போனால் உறுப்பெல்லாம் அனலாய் எரிந்தது. இது போதாதென்று மிக முக்கியமாய் அவளுக்கு தாய்ப்பால் சுரக்கவில்லை. என்னவெல்லாமோ சொன்னார்கள். எல்லார் சொன்னதையும் செய்து பார்த்தும், தின்று பார்த்தும் சொட்டாய் கூட சுரக்க காணவில்லை. ஹொஸ்பிடலில் குழந்தைக்கு கொடுத்த பால்மா வகைப் பாலை வாங்கி குழந்தைக்குப் பருக்கினாள். குழந்தைக்கு வித்தியாசம் எதுவும் தெரியவில்லை. அது தருவதைக் குடித்துவிட்டு நிம்மதியாகத் தூங்கியது. கட்டிலில் கிடத்திவிட்டு அங்கு இங்கு நகர்ந்தாள் என்றால் நொடியில் எழும்பி அழுதது. "நானெல்லாம் உனக்கு ஐந்து வயது வரை பால் தந்தனான், தெரியுமோ? " அம்மா புலம்பித் தள்ளினாள். இவளுக்கு மனது என்னவோ செய்தது. தாய்ப்பால் கொடுக்கும் எண்ணம் இருந்ததால் தான் குழந்தைக்கு கொடுக்கும் பால்புட்டி கூட வாங்கி வைக்கவில்லை என்பதை ஏனோ சொல்ல மனம் வரவில்லை.<br />
<br />
அவள் குழந்தையை வரவேற்பதற்கான எல்லா வகைதொகையையும் குறையின்றி செய்துவிட்டிருந்தாள். குழந்தையின் அறையில் அலுமாரிகள் முழுக்க தேவையான உடுப்புகள், போர்வைகள் துவாய்கள் என்று நிரம்பிக் கிடந்தன. சுவரில் குழந்தையின் பெயர் அழகாய்த் தொங்கியது. குழந்தை பிறக்க முதலே தனது மனதுக்குப் பிடித்த பெயரை அர்த்தத்துடன் தெரிவு செய்திருந்தாள். கீழே முன்னறையில் நடுவே ஏணை தொங்கியது. இந்த கனடா நாட்டில் ஏணை கட்ட அவள் நிரம்பவே சிரமப்பட்டாள். கடைசியில் முண்ணூறு டொலர்கள் செலவழித்து போட்ட ஹூக்கில் தனது சாறியையும் கட்டி வைத்திருந்தாள். எதுவும் செய்யவில்லை என்று தன் மனம் சொல்லிவிடாத அளவுக்கு எல்லாவற்றையும் செய்துவிட்டிருந்தாள். இப்போது ஏணை குழந்தையின்றி தானே கிடந்து ஆடியது. குழந்தையை கீழே கிடத்தினாள் எங்கே தன்னைவிட்டு நகர்ந்து விடுமோ என்ற தீவிரம் அவளின் மூளை முடுக்கெல்லாம் பரவித் தின்றது. </div>
<div>
<br /></div>
<div>
"பிள்ளைக்கு தாய்ப் பால் கொடுத்தால் தான் பிள்ளைக்கு உன்னில பாசம் வரும். பாலைக் கரைச்சு யாரெண்டாலும் குடுக்கலாம் தானே," பிள்ளையைப் பார்க்க வாறவர் போறவர் என்று எல்லார் வாயும் இதையே முணுமுணுத்தது. அவள் ஒரு கிழமை தாண்டி இரண்டாவது கிழமையாகியும் பால் சுரக்கவில்லை என்றதும் ஒருவிதமாய் தவித்துப் போனாள். அவள் அழுகையில் குழந்தை திடுக்கிட்டது. கணவனும் கரைந்தான். ஒரு கட்டத்தில் கணவன் அழைத்து சொல்லி வீட்டுக்கு கவுன்சிலிங் செய்ய வந்த தாதியும் கண் கலங்கினாள். "இயற்கையாய் வலி வரவில்லை தானே. வலி வாறதுக்கு உடம்பில் சுரக்கும் ஹோர்மோன் தான் பால் சுரப்புக்கு உதவி செய்யும். உங்கள் உடம்பில் இன்னும் அந்த ஹார்மோனின் தாக்கம் போதாததாக இருக்கலாம். நீங்கள் இன்னும் கொஞ்ச நாள் பொறுங்கள்" என்றுவிட்டு, மார்பு வலியெடுக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்று சொல்லிவிட்டு தாதி போன பின்னும் இவளுக்கு மனது ஆறவில்லை. குழந்தையை மார்பில் போட்டுக் கொண்டு இல்லாத எல்லாத் தெய்வங்களையும் கூப்பிட்டு கூப்பிட்டு அரற்றி அரற்றி அழத் தொடங்கிய அவளை கணவன் அந்நியளாகப் பார்த்தான். அவன் பார்த்திருக்க அவள் யாரோவாகிப் போனது போலிருந்தது அவனுக்கு. </div>
<div>
<br /></div>
<div>
குழந்தைக்குத் தாய்ப்பால் மட்டும் தான் கொடுக்கவேண்டும் என்ற கற்பிதம் இவளுக்குள் எப்படி ஊறிப்போனது என்று அவளுக்கு விளங்கவேயில்லை. ஒருவேளை தான் ஐந்து வயதுவரை தாய்ப்பால் குடித்ததாலும் வாழ்நாளில் ஒரு போதும் பால் புட்டியை வீட்டில் கண்டதில்லை என்பதாலும் இருக்கலாம். இல்லையென்றால் படித்த விஞ்ஞான அறிவு மட்டுமில்லாமல் போகவும் வரவும் பார்த்த டாக்டரில் இருந்து கதைத்த எல்லா மனிதர்களும் தாய்ப்பால் குறித்து எடுத்த வகுப்பால் இருக்கலாம். எல்லா இருக்கலாம்களும் தாண்டி இவளுக்கும் பால் கொடுப்பதில் எந்தவித சிக்கல்களும் இருக்கவில்லை. தான் என்ன பாவம் செய்தேன், ஏன் இப்டியாச்சு என்ற கேள்வி அவளை சித்திரவதைப் படுத்தியது. பால் குடிக்காட்டி குழந்தை தன்னைவிட்டு தூரப் போய்விடும் என்ற எண்ணமே அவள் மனதை கூர் கூறாய் வெட்டி தெருவெங்கும் சிதறி எறிந்தது. "குழந்தை பிறக்க முதலே அது வளர்ந்து தண்ட விருப்பத்துக்கு என்னவும் செய்யலாம்; நான் கேட்க மாட்டேன் எண்டு வாய் கூசாம சொல்லிக் கொண்டிருந்தா இப்படித்தான் நடக்கும். அது தான் பிள்ளை இப்பவே பழகிறான்." போற போக்கிலே அவர்கள் ஆயிரம் சொன்னார்கள். "பிள்ளைக்கு நாள் நட்சத்திரம் பார்த்துப் பெயர் வைக்கவேணும். இந்த நிமியிராலஜி பார்க்கிறவனெல்லாம் லூசனோ, அதிஷ்டமில்லாத பெயரை வைச்சா வேற என்ன நடக்கும்" எல்லார் வாய்களும் கதைத்தன. இவளதைத் தவிர. குழந்தையை மார்பில் போட்டவாறு அவள் தூங்கிப்போனாள். கன்னத்தடி எல்லாம் கண்ணீர் காய்ந்து கிடந்தது.<br />
<br /></div>
<div>
<div>
கனவில் குழந்தையைக் காணவில்லை. இவள் கனதூரம் நடந்து காட்டுக்குள் வந்துவிட்டிருந்தாள். நல்ல வேளை குழந்தையைக் கொண்டுவரவில்லை என்று நினைத்துக் கொண்டாள். ஏன் நடக்க வெளிக்கிட்டாள் என்று அவளுக்கே தெரியவில்லை. பதினேழு தையல்கள் போட்டிருந்த நினைவு. ஒரு சுகப்பிரசவம் இவ்வளவு தையல்களில் முடிந்தது குறித்து அவளுக்கு எந்தவித குறைகளும் இல்லை. இரத்தமும் வலியுமாய் கால்கள் பின்னடித்தன. ஆனாலும் அவளால் நடப்பதை நிறுத்த முடியவில்லை. நிறுத்தவும் தோன்றவில்லை. ஏதோ ஒன்றிலிருந்து தூர ஓடும் தீவிரத்துடன் அவள் போய்க் கொண்டேயிருந்தாள். அவளின் மனமெல்லாம் மரங்களும் செடிகளும் இடமில்லாது அடைத்துப் பிடித்தபடி வளர்ந்திருந்தன. கொடிகளும் விழுதுகளும் சிக்கிக் கொண்டு பின்னல் வலையாய் அங்கங்கே எறிபட்டிருந்தன. இருட்டு உள்ளேயும் வெளியும் கவிந்திருந்தது. பொட்டு வெளிச்சம் கூட இல்லாத அந்தக் காட்டின் பசுமையும் குளிர்மையும் அச்சத்தைத் தந்தன. நீரோடும் இடமாய்ப் பார்த்து குதித்து காலை கழுவ வேண்டுமென்ற தீவிரம் வலுப்பட்டது. அவளுக்கு அந்த இருட்டிலும் கண் தெரிந்தது. அவளுக்கு மூச்சு முட்டி பிரக்கேறியது. </div>
<div>
தூரத்தில் மெலிதாய் ஓடிக்கொண்டிருந்த நீரோடையில் இறங்கிக் கொண்டாள். அவளது இடுப்புக்கும் கொஞ்சம் கீழாய் தான் ஆழம் இருந்தது. ஹாஸ்பிடல் கவுன் நனைந்து அவள் இறங்கிய இடமெல்லாம் சிவப்பாய் கலைந்தது. அவளைச் சுற்றி வளையம் வளையமாய் தண்ணீர் சுற்றி ஓடிற்று. கலைந்த உடம்பும் வெக்கைப் பிசுபிசுப்பும் சரியாகிவிடும் என்ற நினைப்பில் அப்படியே நின்றாள். எதையோ கரைத்துத் தீர்த்துவிடும் வேகம்; இப்படியே கரைந்து கரைந்து பிள்ளை பிறக்க முதல் நாளுக்குள் போகும் வேகம். ஆனால் நீருக்கு அதே வேகம் இருப்பதாய் தெரியவில்லை. அது தன்பாட்டுக்கு கடனே என்று ஓடிக்கொண்டிருந்தது. அப்படியே நடந்தவள் நீருக்குள் முக்கால் பங்கு தெரிந்து கொண்டிருந்த கல்லொன்றின் அடியில் அமர்ந்து கொண்டாள். </div>
<div>
<br /></div>
<div>
"இஞ்ச, நான் என்ன செய்தனான் எண்டு இப்படியாய் பண்ணிட்டாய். உனக்கு விரதம் இருக்கிறன் எண்டு சொல்லி ஏமாத்தினானா, இல்லை ஏதும் நேர்த்தி செய்றன் எண்டு சொல்லி பொய் சொன்னனா?" அவள் தன் போக்கில் கதைத்துக் கொண்டிருந்தாள். கல் பேசாமல் இருந்தது. இப்போது இரத்தத்தின் அளவு குறைந்தது போலத் தோன்றியது. தண்ணீர் வரத்து அப்படியே தான் இருந்தது. அவளுக்கு அப்படியே இருந்துவிடலாம் போல தோன்றியது. </div>
<div>
<br /></div>
<div>
"ஏய், இஞ்ச என்ன கனவு காண்கிறீரே, பிள்ளை இவ்வளவு நேரமாய் கத்திக் கொண்டிருக்கிறான். கேட்கலையா? எழும்பும், ஏய்" அவள் கண் விழித்த போது கணவன் கத்திக் கொண்டிருந்தான். கூடவே குழந்தையும். அவள் பதற்றத்துடன் குழந்தையைக் கையில் வாங்கிக் கொண்டாள். </div>
<div>
<br /></div>
<div>
"பாலைக் கரைச்சு கொடுக்கிறது தானே" இவளுக்கு சினம் மூண்டது. "எல்லாரும் தானே பால் கரைச்சுக் குடுக்கலாம்" அவளுக்கு நினைவு வெறியூட்டியது. </div>
<div>
<br /></div>
<div>
"அதெல்லாம் கொடுத்தாச்சு, அதுக்குப் பிறகும் கத்தி அழுதா நான் என்ன செய்ய" கணவனுக்கும் குழந்தையைப் பார்க்க கவலையாய் இருந்தது. "என்னத்தை ஆர் கொடுத்தாலும் அது நீர் தூக்கின பிறகுதானே அமைதியாகுது. நீர் தானே அம்மா"</div>
<div>
<br /></div>
<div>
அவள் கொஞ்சமாய் விசித்துக் கொள்ள தொடங்கியிருந்த குழந்தையை மார்பில் போட்டுக் கொண்டாள். குழந்தை கண் மடல்களை சிமிட்டிக் கொண்டு தூங்க ஆரம்பித்தது. அவள் சிரிக்க ஆரம்பித்தாள். காடு கரையெல்லாம் அதிர அதிர சிரித்தாள். அவள் சிரிப்பில் ஆறு சலசலத்தது. அடித்துப் பிடித்துக் கொண்டு ஓட ஆரம்பித்தது. செடி கொடியெல்லாம் ஆடி அலைந்தன. காய்ந்த சருகுகள் எழுந்து மேலெல்லாம் பறந்தன. குழந்தை ஏனோ எழும்பவில்லை. அதுபாட்டுக்கு தூங்கிக் கொண்டிருந்தது.<br />
<br />
நன்றி ஊடறு.<br />
<br /></div>
<div>
</div>
</div>
</div>
மயூ மனோ (Mayoo Mano)http://www.blogger.com/profile/12666644873302635477noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3634761057150025278.post-25010852468392828532015-03-03T20:10:00.002-05:002015-03-03T20:10:24.563-05:00"கானல் வரி" - தமிழ்நதியின் குறுநாவல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
தமிழ்நதியின் கானல் வரி என்கின்ற குறுநாவல் 2009 ஆம் ஆண்டு வெளிவந்திருந்தது. எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களின் முன்னுரையுடன் வெளியாகிய இந்தக் குறுநாவல் பேசும் தளம்தான் நாவலை சுவாரஸ்யமானதாகவும் அதைப் பற்றி நாம் பேசவும் வைத்துவிடுகிறது. திருமணமாகிய ஒரு பெண் எழுத்தாளர் மாதவி, இன்னொரு எழுத்தாளர் மௌலியுடன் கணணி வழி தொடரும் நட்பு என்னும் உறவை ஆரம்பிக்கிறார். ஆரம்பத்திலில் எழுத்துக்கள் தொடக்கி வைத்த பாதை வழி பயணிக்கும் நட்பை, காலவோட்டத்தில் காதலாக இனங்கண்டு கொள்கின்றனர் இருவரும். கணவர் வேறு நாட்டில் பணிபுரியும் நிலையிலிருக்கும் மாதவியும், மனைவி குழந்தையை தாய்நாட்டில் விட்டுவிட்டு வேறு ஒரு இடத்தில் வேலை செய்யும் மௌலியும் தங்களுக்குரிய சிநேகத்தை கணணி வழி ஆரம்பித்து அதன் வழி பயணிக்க ஆரம்பிக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின் தனது குடும்ப நன்மைக்காகவும், குழந்தைகளுக்காகவும் என்று காரணங்கள் சொல்லி மாதவியைப் பிரிகிறான் மௌலி. வழமை போல தனித்துவிடப்படுகிறாள் மாதவி. தங்களது உறவைத் தோற்கடித்துப் தன் வழியில் பயணிக்கும் மௌலிக்கு எழுதும் கடிதங்களாக விரிகிறது நாவல். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாவலின் ஆரம்பத்தில் குடும்ப அமைப்பை மறுத்தோடும், கணவணினால் மிகவும் நேசிக்கப்படுகிற, மிக சுதந்திரமாக தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்கின்ற மாதவியைக் காணக்கிடைக்கிறது. காலங்காலமாகவே குடும்ப அமைப்பைக் கட்டிக்காக்கின்ற பெரும் பொறுப்புடன் வளர்க்கப்படும் பெண் என்ற பிராணி நிலையிலிருந்து எல்லாவற்றையும் தளர்த்தி வெளியேறும் மாதவி, ஒரு சந்தர்ப்பத்தில் தன் கணவனுக்கு தன்னால் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புது உறவைப்பற்றித் தெரியப்படுத்திவிடுகிறாள். அவளால் வெளிப்படுத்தப்படும் நேர்மை மாதவி மேல் மரியாதையைக் கொண்டுவருகிறது. ஆயுளுக்கும் என்று எழுதப்படும் காதல்களும், கல்யாணங்களும் நேசத்தில் எழுதப்படுகின்றனவோ இல்லையோ நேர்மையில் எழுதப்பட வேண்டும். எப்போது இன்னொரு உறவு சந்தர்ப்ப சூழ்நிலைகளில் உருவாக்கப்படுகிறதோ அப்போதே அது குறித்த தெளிவை தேர்ந்துணர்ந்து, யாருக்குத் தெரியப்படுத்தாவிடினும், எம்மை பரிபூரணமாக நம்பி, காலத்துக்கும் என்று வாழத்தலைப்படும் துணைக்குத் தெரியப்படுத்திவிடுதலையும் கற்பு என்றே நான் அடையாளப்படுத்துவேன். இராமன்களை கண்டறிதல் சாத்தியப்படாத நிலையிலும், கல்லாக யுகங்கள்தோறும் காத்துக்கிடத்தல் முடியாத நிலையிலும், தனது கணவருக்குத் துரோகம் செய்துவிடக்கூடாது என்ற நிலையில் தன்னை வெளிப்படுத்தும் மனைவியாக மாதவி தன்னிலையில் நிற்கிறாள். "நானும் ராமனில்லை மாதவி, நீயும் உன்னைச்சுற்றி ஒரு நெருப்பு வளையத்தைப் போட்டுக்கொள்ளாதே" என்று மௌனமாகும் கணவன் ஆச்சரியப்படுத்துகிறான். பொருள் தேடப்புறப்ட்டுக் கணவன் சென்றுவிட, தனது உடல் மனம் சார்ந்த தேவைகளைத் தளர்த்தி, கணவன் அற்ற வீடு தரும் தனிமை, உறவுகளற்ற தனிமை, புது நாடும், புது சூழலும் தரும் தனிமை என்று எல்லாக் கொடுந்தனிமைகளுக்குள்ளும் உழழும் மாதவியை, அவள் நிலையைத் தன்னிலையோடு ஒப்பு நோக்கி அவள் ஏற்படுத்திக்கொண்ட உறவின் தேவையை புரிந்துகொள்ளும் கணவனை ஏனோ பிடித்துக்கொள்கிறது. ஆனால் தன் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் நேர்மையாகவில்லாமல், இறுதியில் மாதவியுடனான உறவுக்கும் நேர்மையில்லாமல் பிரியும் எழுத்தாளர் மௌலியை ஏனோ பிடிக்காதும் போய் விடுகிறது. எழுத்தாளர்கள், படைப்பாளிகள் என்று அறியப்படும் மக்கள் மறுத்தோடிகள் என்று தம்மை அழைத்துக் கொள்வதும்,பின்னர் தங்களது வாழ்க்கையில் அவற்றைப் பின்பற்ற முடியாது தங்கள் மறுத்தோடும் வார்த்தைகளை வெறும் வார்த்தைகளாகப் படைப்புக்களில் மட்டும் சொல்லிவிட்டுப் போகும் போக்கை மௌலியிடமும், சாதாரண மக்களாக தங்களை வரித்துக்கொண்டவர்கள் பண்பாடு சார்ந்த கேள்விகள் தங்களை அணுகும்போது வெகு நேர்மையாக அவற்றை எதிர்கொள்வதை மாதவியின் கணவனிலும் காணக்கிடைக்கிறது. இந்தப் போராட்டம், காலத்துக்கும் பண்பாட்டுக்கும் இடையில் எப்போதும் நடந்து கொண்டிருப்பதாகவும் படுகிறது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குறுநாவலின் கதை நாயகன் மௌலியை, பல இடங்களில் சமூகம் கட்டியமைத்த ஆண் என்பவனின் சாதாரண நகலாகவே பார்க்கக் கிடைக்கிறது. மாதவிக்கு வைத்திருக்கும் பிற ஆன் நண்பர்களைப் பற்றிய கண்ணோட்டத்திலும் சரி மாதவியை தனக்கு சொந்தமான ஒரு பொருள் போலக் கருதி, அவள் தான் சொல்வதைக்கேட்டுத் தன்னையே மாற்றிக்கொள்ளவேண்டும் என்று நினைப்பதிலும் சரி மௌலி தன் ஆண்மையை பறைசாற்றத் தொடங்கிவிடுகிறான். இரு குழந்தைகளுக்குத் தகப்பனாய், தன் மனைவிக்குத் துணையாய் வாய்த்திருக்கும் மௌலி நம்பிக்கைகளின் வழி கட்டப்பட்ட அந்த உறவுகளை, தனது பிம்பங்களைத் திருட்டுத்தனமாக உடைத்து, மாதவியுடனான உறவை ஏற்படுத்திக் கொள்ளும் நிலையில் மாதவியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கேள்வி எழுப்பும் நிலையைப் பார்க்கும் போது மிகவும் அபத்தமாக இருக்கிறது. மாதவியைக் கேள்வி கேட்டு, தன்னைத்தானே சிகரெட்டால் சுட்டு மாதவியை மனரீதியாக சித்திரவதைப்படுத்தும் மௌலியை நோக்கி தன் மனதுக்குள்ளாகவே, "ஏன் அப்படியிருந்தாய் மௌலி? கூப்பிடுகிற எல்லோருடனும் போய்விடுகிற ஆளா நான்?" என்று கேள்வி எழுப்புகிறாள். தன்மேலான மாதவியின் காதலில் நம்பிக்கையில்லாத மௌலியும், இவற்றையெல்லாம் தாங்கிப் போக வேண்டியநிலையில் மாதவியும் இருக்கிறாள் என்றாகும் போது, எப்படிப்பட்ட உறவு என்றாலும் பெண் என்பவள் பெண்ணாகவும், ஆண் என்பவன் ஆணாகவும் இருக்கவேண்டிய, கட்டமைக்கப்பட்ட பண்பாட்டுவழிச் சிக்கல் எப்போதும் தொடரத்தான் செய்கிறது என்பதையும் உணரத்தான் வேண்டியிருக்கிறது. </div>
<div style="text-align: justify;">
மேலும், இந்தக் கதையில் மௌலியின் மனைவியின் நிலை என்னவாகியிருந்தது? இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகியதுடன் அவளது சுதந்திரத்தை காலாசாரமும் பண்பாடும் வழங்கும் மனைவி, தாய் என்கின்ற பட்டங்கள் பொறுப்பெடுத்துக் கொண்டனவா? தனிமையின் நிமித்தம் மௌலியால் ஒரு உறவைக் கட்டமைத்துக் கொள்ள நேரிட்டது என்றால், அப்படி ஒரு உறவைக் கட்டமைக்கும் சுதந்திரத்தை மாதவியின் கணவன் வழங்கியதைப் போல மௌலி தன் மனைவிக்கு வழங்க முன்வந்திருப்பானா? அவளின் உடல் மற்றும் மனம் சார்ந்த தேவைகள் குறித்து மௌலி அறிந்திருந்தானா? தனது நிலையுடன் ஒப்பிட்டு அவளும் ஒரு மனிதப்பிறவிதான் என்பதை உணரவாவது முற்பட்டானா? மீண்டும் மீண்டும் கலாசாரம் கட்டியமைத்த சமூகத்தில் பெரும்பாலும் பெண் என்பவள் குடும்ப அமைப்பைக் கட்டிக்காக்க வேண்டிய பிராணியாகவே கருதப்படுகிறாள் என்பதற்கு மௌலியின் மனைவியும் உதாரணமாகி விடுகிறாள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆரம்பத்தில் மறுத்தோடி என்று அறிமுகப்படுத்தப்பட்ட மாதவி, நாவலோட்டத்தில் இன்னொரு மாதவியாகவே மாறிக்கொண்டாள் என்பதை நாவல் காட்டுகிறது. தன் குடும்பம் விட்டு, தன் காதலின் வழி நேர்மையுடன் புறப்படும் மாதவி, மௌலி தனது குடும்பத்துக்கு செய்து கொண்டிருக்கின்ற துரோகத்தை மௌனமாக ஆதரிக்கவும் செய்தாள், அது என்ன விதத்தில் நியாயம் என்ற உளவியல் கேள்வியை இங்கு முன்வைக்க வேண்டியிருக்கிறது. தன் கணவனுக்கு நேர்மையாக இருக்க முனைந்த மாதவி, ஏன் மௌலியிடம் அதை எதிர்பார்க்கவில்லை? இறுதியில் மாதவியை விட்டு விலகும் மௌலிக்கு துரோகம் மிக இலகுவாக கைவருவது இதனாலும் இருக்கக்கூடும். ஏற்கனவே தனது குடும்பத்துக்குத் துரோகம் செய்வதை எந்த விதக் குற்ற உணர்வுகளும் இன்றி செய்பவர்கள் தாம் கொண்ட உறவுக்கு நேர்மையாக இருப்பார்கள் என்று எதிர் பார்ப்பது அறிவீனம் என்பதை மாதவி ஏன் அறிந்திருக்கவில்லை? இப்படியே மறைவாக தொடரும் என்ற ரீதியில் தனது காதலைத் தொடர்ந்து எழுதத் தலைப்பட்டிருந்தாளா? எது எப்படியிருப்பினும் தங்கள் உறவின் பிரிவு என்பது ஏலவே மறைமுகமாக எழுதப்படிருந்ததை மாதவி அறிந்திருக்காமல் விட்டதும், அதன் பொருட்டு பாரம் சுமப்பதும் காலத்தின் கட்டாயாமாக நிகழ்ந்தேறுகிறது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தனது முப்பதாவது வயதில் தற்கொலை செய்துகொண்டு வாதைகளிடமிருந்தும், வார்த்தைகளிடமிருந்தும் தன் குழந்தைகளிடமிருந்தும் தன்னை விடுவித்துக்கொண்ட கவிஞை, படைப்பாளி சில்வியா பிளாத் சிறு வயதிலிருந்தே மன உளைச்சலால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். சிறுவயதிலேயே தந்தையை இழந்து மன உளைச்சலால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த அவரது மன அழுத்தம் இன்னும் இன்னும் மேலிட அவரது காதல் கணவன் இன்னொரு உறவைத் தேடி அவரையும், அவரது இரு குழந்தைகளையும் கைவிட்டு சென்றதும் முக்கியாமான காரணம் என்கிறது காலம். அவரும் ஒரு படைப்பாளி என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது. "Dying is an art, Like everything else. I do it exceptionally well. I do it so it feels like hell. I do it so it feels real. I guess you could say I've a call." - மரணிப்பது எல்லாவற்றையும் போல ஒரு கலை. அதை நான் மிகவும் திறம்பட செய்வேன். அது நரகமாக உணரக்கூடியது போலவும், உண்மையானதாக உணரக்கூடியதாகவும் அதை நான் செய்துகொள்வேன். எனக்கு ஒரு அழைப்பு வந்திருப்பதாக நீங்கள் அப்போது சொல்லக்கூடும் என்று நான் எண்ணிக்கொள்கிறேன். என்றாள் அவள். தன்னை எழுத்துக்களில் வடிக்கக்கூடிய மிகச்சிறந்த கவிஞை. படைப்பாளி தனக்கு செய்யப்பட்ட துரோகத்தில் எப்படி இன்னும் மீள முடியாத அளவுக்கு சிதைந்து போகிறாள் என்பதற்கு சில்வியா பிளாத் ஒரு உதாரணம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கானல் வரி இதன் மறுதலையாகி நடந்தேறி விடுகிறது. துரோகங்களை இலகுவாக செய்துவிட்டு, மீண்டும் பண்பாட்டைக் காக்கும் பொருட்டு தன் மனைவியுடன் குழந்தைகளுடன் இணைந்து கொள்கிறான் மௌலி. துரோகங்கள் யார் செய்தாலும் தாங்க முடியாததாகவே இருக்கும் போது மனைவியுடன் இணைந்து அவளைக் காப்பாற்ற முனைந்த மௌலி, தன்னை நம்பிப் புறப்பட்ட மாதவியைக் கைவிட்டதும், என்ன செய்தாலும் ஆண் என்பவன் "சேறு கண்ட இடத்தில் மிதித்து தண்ணீர் கண்ட இடத்தில் கழுவி" வந்தாலும் அவன் ஆணாகி விடுகிறான். என்னதான் மறுத்தோடிகளாகப் புறப்பட்டாலும் பெண்கள் இறுதியில் பண்பாடுகளின் அவமான சின்னமாகிவிடுகிறார்கள். பண்பாட்டையும், கலாசாரத்தையும் காரணம் காட்டி இன்னொரு கோவலன் ஆகிவிடுகிறான் மௌலி. ஆனால் அவன் பொருட்டு புறப்பட்ட மாதவி காவியம் கண்ட இன்னொரு மாதவியாகவே தொலைந்து போகிறாள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: news-gothic-std, Helvetica Neue, Helvetica, Arial, sans-serif;"><span style="background-color: white; font-size: 24px; line-height: 33.5999984741211px;"><b></b></span></span></div>
</div>
மயூ மனோ (Mayoo Mano)http://www.blogger.com/profile/12666644873302635477noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3634761057150025278.post-57864318448461501962014-02-27T07:14:00.000-05:002014-02-27T07:14:15.355-05:00நெடி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
கையில் மந்திரக் கோலேதும் இல்லாது<br />
மரணத்தின் நெடியைத் தேடியபடி<br />
ஈரத்துக்குள் தூங்கும் நகரில் பயணித்த என்னை<br />
ஓநாய்களும் துருவக்கரடிகளும்<br />
கண்டங்கள் தாண்டி வழிநடத்தின<br />
இலை துளிர்க்க சிலிர்த்துப் பூக்கும் மரத்தில்<br />
காதலின் வாசமடி என்ற போது கிளுக்கிச் சிரித்து<br />
இருக்கலாம் என்றவள் தான்<br />
உடல் இளக மனதுள் கசியும் மூன்றாஞ் சாமத்தின் மௌனத்துக்கு<br />
குளிரின் பச்சை மணமென்று நான் சொன்னபோது<br />
மௌனித்திருந்தாள்<br />
நிக்கோட்டின் வழியும் முத்தத்தின் வாசமென்று<br />
பின்னதான இரவில் அவள் வாதாடிய நினைவு வந்தபோது<br />
நான் துருவங்களைத் தாண்டியிருந்தேன்<br />
மொட்டை மரங்களையும்<br />
வெள்ளை மலைகளையும் விலத்திக் கடந்தபோது<br />
தாழப்பதிந்து நதியாடிய கிளையிலிருந்து<br />
பனிக்குள் உதிர்ந்து அழுகிய பூவின் சக்கு மணத்தோடு<br />
உறைந்த நதியின் ஆழத்தில் சலசலப்பற்று கிடந்தது<br />
தனிமை;<br />
அந்தப்போதில்<br />
சூரியன் குளிருக்குப் பயந்து<br />
தயங்கித் தயங்கி மேலெழப் பார்த்தபின்<br />
பனி விலத்திக் கரைதட்டிய மீனுக்கு சாவின் நெடி<br />
என் உள்ளங்கை வியர்வையின் பிசுபிசுப்பாய் இருந்திருக்கக்கூடும்<br />
<br />
- நன்றி உரையாடல் சஞ்சிகை </div>
மயூ மனோ (Mayoo Mano)http://www.blogger.com/profile/12666644873302635477noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3634761057150025278.post-17689316594661916402014-02-02T10:14:00.001-05:002014-02-02T10:14:15.527-05:00ஒரேகதைகள்..!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
கிடுகு பதியக்கட்டிய தாழ்வாரத்தை<br />
ஒளிந்து கடந்தது வெயில்<br />
கோழிக்குப் போட்ட குறுனிகளை<br />
கொத்திக் கொண்டு திரிந்தது புலுனி<br />
முந்தநாள் இரவில் போதை கிளர்த்தி<br />
அடித்துப் பெய்த நிலவின் தடயங்கள் அழிந்து<br />
வெறித்துக் கிடந்தது முற்றம்<br />
வெப்பமிலையும் மாவிலையும் உதிர்த்து<br />
அறம் பாடி இழைந்தது காற்று<br />
துமிக்காத மழையை திட்டாமல் திட்டி<br />
உப்புமிளகாய்ச் சுளகுகளைப் பரப்பி வைத்தபடியிருந்தாள் கிழவி<br />
வெடித்துக் கிளம்பும் அழுகையை<br />
சுவரும் அறியாமல் அடக்கி<br />
மண்சுவருடைத்து சுண்ணாம்பு சாப்பிடவாரம்பித்தாள்<br />
பதின்மச்சிறுமி;<br />
<br />
பாரிஸ் நகரத்தெருக்களில்<br />
பொம்மையொன்றை ஆட்டுவித்துக்கொண்டிருந்தவனை<br />
நான் கண்டேன்<br />
பின்னொரு நாளில் புகையிரதநிலையத்திலும்<br />
இன்னொரு பனிப்புயலிலும் அவன் நிற்கப் பார்த்தேன்<br />
நூலிழையில் விரல் கோர்த்து அவன் அசைத்தபோது<br />
பொம்மையின் உடல் முழுதும்<br />
கொடிகள் முளைத்தன<br />
பூமியோடு வேரோடிப் பிரிந்தோடிய கிளைகள்தோறும்<br />
பொம்மையின் நூலெல்லாம் பின்னிப் பிணைந்தது<br />
விரல்கள்தோறும் நூல்கண்டுகளுடன்<br />
அவன் நகர்ந்தபடியே இருந்தான்<br />
கொடிகள் செழித்து வளர்வதாய் அவன் நம்பிய பொழுதில்<br />
வேரோடு கிளர்ந்தது கொடி<br />
நூல் இற்றுத் தெறிக்க<br />
பொம்மையின் வாய் உமிழ்ந்த நீரில் முகம் நனைய நகர்ந்தவனை<br />
மீண்டும் அதே தெருக்களில் இன்னொரு பொம்மையுடன் கண்டேன்<br />
போதை தலைக்கேறி மயங்கிக் கிளர்ந்த பொழுதில்<br />
ரஷ்யத் தெருக்களில் திரிந்த பொம்மலாட்டக்காரன் பற்றி<br />
வேறொரு மொழியில் பாடிச்சரிந்தாள்<br />
இன்னொருத்தி;<br />
<div>
<br /></div>
- உரையாடல் சஞ்சிகை - ஜனவரி 2014</div>
மயூ மனோ (Mayoo Mano)http://www.blogger.com/profile/12666644873302635477noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3634761057150025278.post-53161110240730175572013-08-23T10:23:00.000-04:002013-08-23T10:23:08.198-04:00ஆகக் கடவ..;<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<br />
<div>
<span style="line-height: 28px;">நடுச்சாமத் திடுக்கிடலில்</span></div>
<div>
அவரை கண்டேன்</div>
<div>
அசுமாத்தங்களின்றி போர்வைக்குள் நுழைந்தவரை</div>
<div>
யாரென்று கேட்பதுடன் அயர்ந்தேன்</div>
<div>
ஆக</div>
<div>
உனக்குக் கடவுளைத் தெரியாதென்றது அசரீரி</div>
<div>
மயிர்க்கால்கள் கூச்செறிய துடித்தெழுந்து</div>
<div>
அவர் காலடியில் அமர்ந்து கொண்டேன்</div>
<div>
<br /></div>
<div>
சாமங்கள் தாண்டிய குளிர்</div>
<div>
கடவுளுக்கப்பால் கிடந்தது </div>
<div>
<br /></div>
<div>
தூக்கமேயில்லை என்றேன்</div>
<div>
கனவுகள் அந்தரித்துத் திரிகின்றன என்றும் சொல்லி</div>
<div>
அவர் நாமங்களை உச்சரித்துச் சாய்ந்தேன்</div>
<div>
<br /></div>
<div>
----------</div>
<div>
<br /></div>
<div>
வெக்கை முகிழ்த்த பகல்</div>
<div>
<br /></div>
<div>
பெருமழைக்கான காத்திருப்பில்</div>
<div>
பூளை கசியும் கண்மூடி</div>
<div>
தனித்திருந்தாள் கிழவி</div>
<div>
காற்றில் கைகள் துளாவி</div>
<div>
</div>
இவளைப் பிடிக்க வந்தாள்<br />
<br />
கடவுளே<br />
முற்றமெல்லாம் மாம்பழங்கள்<br />
வெம்பிப் பழுத்தவற்றை<br />
தின்று செரித்தது மாடு<br />
<br />
<div>
கடவுளே</div>
<div>
கோழிப்பீ கரைந்தோடும் மண்ணை</div>
<div>
நான் வெறுத்தேன்</div>
<div>
<br /></div>
<div>
கடவுளே</div>
<div>
</div>
போறணைக்குள் தூங்கிக் கிடந்த போயிலை மணம்<br />
என் அம்மாவிலும் வீசியது<br />
<div>
</div>
ஈரப் பொச்சு மட்டைகளின்<br />
தீய்ந்த மணம் காற்றில்<br />
<br />
கடவுளே<br />
பனையளவு தாப்பம் எங்கள் கிணறு<br />
அதுக்குள் நிலவு விழுந்து கிடந்தது<br />
<br />
கடவுளே<br />
என் கொலுசை<br />
பாம்புப் புத்துக்குள் ஒளித்து வைத்தேன்<br />
<br />
கடவுளே<br />
இப்படி ஒரு சாமத்தில்<br />
நான் கடல்களை நீந்தித் தாண்டினேன்<br />
<br />
கடவுளே<br />
நேற்று என் கனவுகளை<br />
மழைக்குக் கடன் கொடுத்தேன்<br />
<br />
இன்றைக்கானவற்றை<br />
செம்பாட்டு மண்ணுக்கு<br />
<br />
நாளைக்கானவற்றை<br />
வரப்பு நிறையும் மிளகாய்களுக்கு<br />
<br />
<div>
----------</div>
<div>
<br /></div>
<div>
கால் உதறி விழிக்கையிலும்</div>
<div>
கடவுள் அங்கிருந்தார்<br />
<br />
கொடுத்தனுப்ப ஒன்றுமில்லை</div>
<div>
<br /></div>
<div>
குழந்தையின் எச்சில் முத்தமும்</div>
<div>
சாம இருட்டின் ஒரு கைப்பிடியுமாய்</div>
<div>
அவரை அனுப்பலாயிற்று</div>
<div>
<br /></div>
<div>
கடவுளே</div>
<div>
இந்த அறை உன்னுடையதாயிருந்தது</div>
<div>
இப்போது என் போர்வையும்</div>
<div>
உனதேயாகக் கடவ<br />
<br />
- நன்றி பெட்னா இலக்கிய மலர். </div>
</div>
மயூ மனோ (Mayoo Mano)http://www.blogger.com/profile/12666644873302635477noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3634761057150025278.post-64225571168681355332013-08-03T08:45:00.000-04:002013-08-03T08:45:30.881-04:00தனித்த வைரவர்..! <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
தனித்த வைரவர்..!<br />
<br />
1.<br />
<br />
<br />
பெரிய குளம் கரை புரண்டு<br />
<div>
இருட்டு ஒதுங்கும் மரத்தடியில் </div>
<div>
வாளாதிருக்கிறார் வைரவர் </div>
<div>
துடித்தடங்கும் ஆட்டின் கழுத்தடியில் வழியும் </div>
<div>
இரத்தத்தின் செஞ்சூடு இரவில் விரவ </div>
<div>
மல்லாந்து வீழ்கிறது உடலம்<br />
நான் இறைஞ்சி மண்டாடுகிறேன்<br />
மடை புரண்டோடுகிறது சோறும் கறியும்<br />
காலம் கரைந்து மூழ்க<br />
முக்கித் தவிக்கின்றன நினைவுகள்<br />
உணர்வுகள் விரயமாகி வீழ<br />
நிர்வாணித்து நிற்கும் இந்த சொற்கள்<br />
வைரவரின் நடுச்சாம உலாவலுடன்<br />
புலம் பெயர்ந்தன </div>
<div>
<br /></div>
<br />
2.<br />
<br />
காரணங்கள் சொல்லி அலுத்த பொழுதில்<br />
<div>
சூரியன் கைவிட்ட இப்பெருவெளி நிறைத்து </div>
<div>
சொற்களைப் பெய்கிறது மேகம்</div>
<div>
போதை நிறைந்த கண்களில் </div>
<div>
நீர்த்த கனவுகளின் கிறக்கம் தீர்ந்தபாடில்லை </div>
<div>
வாதை சொல்லாக் கவிதை பாழ் </div>
<div>
மொழி பாழ் என்றேன் </div>
<div>
இல்லை நீயே அழிந்தாய் </div>
<div>
என்று ஆவேசமாடி புழுங்கும் மனதை </div>
<div>
கூறு போட்டு பரிமாறியதைக் குறித்தும் </div>
<div>
சலனமில் தாமரை குளத்தைச் சுட்டி </div>
<div>
தியான மந்திரங்களை உருப்போட்டதையும்<br />
சொல்லிய பின் </div>
<div>
குளம் நிறையக் குவிந்த பறவைகள் </div>
<div>
இரத்தஞ் சொட்டும் அலகுகளும்<br />
நீள் கால்களும் </div>
<div>
கொண்டு பறந்தன <br />
கனவுகளில் துருப்பிடித்த சூலமேந்தி அலைகிறார்<br />
தனித்த வைரவர்<br />
<br />
- நன்றி எழுநா..</div>
<div>
</div>
</div>
மயூ மனோ (Mayoo Mano)http://www.blogger.com/profile/12666644873302635477noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3634761057150025278.post-83007883312162610552012-04-12T00:15:00.002-04:002013-05-12T11:34:26.697-04:00சொல்லெனப்படும் சொல் ..!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: left;">
குரல்கள் இறைந்து பாயும்</div>
மண்டபத்தில் அமர்ந்திருக்கிறேன்<br />
காண்ணாடி மதில்களில்<br />
வழுக்கித் தோற்கின்றன<br />
உதிர்க்கப்பட்ட சொற்கள்<br />
<br />
<br />
இன்றைய ஆயிரமாவது சொல்லை<br />
யார் சொல்லியிருக்கக்கூடும்<br />
எந்த மொழியில்?<br />
<br />
<br />
சிரிப்புக்குள் கரையும் சொற்கள்<br />
காதலில் ஒளியும் சொற்கள்<br />
சலிப்பில் ஒழியும் சொற்கள்<br />
பொய்யில் வெட்கிக்கும் சொற்கள்<br />
சொற்கள்<br />
சொற்கள் மட்டும்<br />
<br />
சூடில்லா சூரியன்<br />
நிழலில்லா மரங்கள்<br />
வெளியில்..;<br />
இளவேனிலின் ஈரம்<br />
உடலில்..;<br />
இது/இத்யாதி தவிர்த்து<br />
மனதின் வெப்பியாரத்தை<br />
சொல்லிவிடக்கூடிய ஒரு சொல்<br />
என்னிடமில்லை<br />
<br />
சொல்லப்படாத சொற்களில்தான்<br />
உறவுகளின் ஆயுள்<br />
மேலுஞ் சொல்லப்படாத சொற்களே தான்<br />
உறவுகளும்<br />
<br />
பின்னே?<br />
<br />
உலுக்கி உதறுகிறேன்<br />
என்னை<br />
நேற்றெழுதிய சொல்லில்<br />
ஒன்றில்லை<br />
சொல்லப்படாதவற்றின்<br />
<div style="text-align: left;">
அர்த்தங்களும் நினைவிலில்லை </div>
<br />
<div style="text-align: left;">
@ Seneca College Cafe</div>
</div>
மயூ மனோ (Mayoo Mano)http://www.blogger.com/profile/12666644873302635477noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-3634761057150025278.post-56547500962576643992012-03-10T09:29:00.000-05:002012-03-14T23:25:44.962-04:00ஆச்சி எனப்படும் தொன்மங்களின் அரசியிடமிருந்து ஆரம்பித்து..;<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
சொற்கள் என்னும் வார்த்தை சில வேளைகளில் பெரும் வாதையைத் தருவதாகிறது. அவை சில சந்தர்ப்பங்களில் மனதின் ஒரு மூலையில் தோன்றி சுற்றி சுற்றி ஒரு புள்ளியையே சூழ்கின்றன. ஒரு பொழுதில் ஒரு வார்த்தை, மறு பொழுதில் மற்றொன்று, இன்னொரு பொழுதில் இன்னொன்று. மனதின் மடிப்புக்கள் தோறும் நிரம்பிக் கொள்ளும் அவை ஒரு தருணத்தில் படைப்பாகப் பிரசவிக்கப்படுகின்றன. ஒரு சொல்லை அல்லது பல சொற்களை மனதுக்குள் உருப்போட்டுக் கொண்டு நாட்கணக்குகள் பொதித்து வைத்திருப்பதும் சில சமயங்களில் நடப்பதுதான். இதில் முதல் வார்ப்பு எப்படி நடந்தது என்றும் எதனால் நடந்தது என்றும் காரணங்கள் சொல்லிவிடக்கூடியவையா என்பதுதான் தெரியவில்லை.<br />
<br />
ஒவ்வொருவருக்கும் பாலர் பாடசாலை போய்ச் சேர்ந்த கதை என்று ஒன்று இருக்கும். சில குழந்தைகளே புதிய பள்ளிச் சூழலை ஆர்வத்துடன் எதிர்கொள்கின்றனர் அல்லது எதிர்கொள்ள முயற்சிகின்றனர். பாலர் வகுப்பில் சேர்க்கப்பட்டுப் பல மாதங்களாகியும் என்னால் இந்த வகைக்குள் அடங்கிவிட முடியவில்லை. விவசாயக் குடிகளான என் குடும்பத்தின் வயல்களிலும், தோட்டங்களிலும் சுற்றித்திரியவே நான் விரும்பியிருந்தேன். அம்மாவின் பின்னால் அலைந்து கொண்டும், வயல்களில் பிஞ்சு வெண்டிக்காய், ஈச்சம் பழம் சாப்பிட்டும் அறுத்த புகையிலை காம்புகள் காயும் தோட்டங்களில் பக்கத்து வீட்டுக் குழந்தைகளுடன் கெந்திக்கோடு விளையாடிக் கொண்டிருக்கும் வாழ்க்கையே எனக்குத் தேவையாகவிருந்தது. ஆக ஒவ்வொரு நாளும் காலையில் என் அழுகைதான் தெருவை எழுப்பியது. பாலர் பாடசாலையின் சுவர்களில் என் கதறல் எதிரொலித்து எதிர்க்க நின்ற புளிப்பு நெல்லி மரத்திலும், கிலுகிலுப்பை மரத்திலும் பட்டு அவற்றின் கிளைகளுக்குள்ளே அமர்ந்து அழிந்தது. இந்தத் துயரைப் பொறுக்க மாட்டாமல் தானாக என் பால்யத்துக்குள் நுழைந்தாள் ஆச்சி, அம்மாவின் அம்மா. அவளை எல்லோரும் ஆச்சி என்பதால் எங்களாலும் ஆச்சி என்றே அழைக்கப்பட்டாள்.<br />
<br />
காலையில் எழுந்து என்னை எழுப்பி, வெளிக்கிடுத்தி இடுப்பில் தூக்கிக் கொள்ளும் ஆச்சி வயல் வரம்புகளில் சுலபமாக வேகமாக வெறுங்காலுடன் நடந்து பள்ளிக்கூட வாசலில் இறக்குவாள். பின் அங்கு வைத்துத் தூக்கி என்னை இடுப்பில் வைத்துக் கொண்டாள் என்றால் மீண்டும் அதே வழியால் நுழைந்து வீட்டு முற்றத்தில் இறக்குவாள். பாலர் வகுப்பு நடக்கும் அந்த மூன்று மணித்தியாலங்களும் என் கண்ணில் படுமாறு கிளைத்த நெல்லி மரத்தின் கீழ் கட்டியிருந்த சீமெந்துக் கட்டுகளில் இருந்து வெற்றிலை போட்டுத் துப்பிக் கொண்டிருப்பாள். அவளை அடிக்கடி பார்த்துக் கொண்டே நான் வகுப்பில் அமர்ந்திருப்பேன். ஆனால் என் அழுகை நின்றுவிட்டது. என்னைச் சுற்றியிருக்கும் குழந்தைகளையும், புதிய சூழலையும் நான் உணர்ந்து கொள்ள முற்பட்டேன். அந்தப் புதுச் சூழல் நான் விரும்பிய வயலையும், தோட்டத்தையும், பறவைகளையும் என்னிடமிருந்து விலக்கி அவற்றை கைவேலையாக செய்து சுவரில் தொங்கப்போட வைத்தன. ஆனால் நான் முன்போல அழவில்லை. அடிக்கடி என் தொன்மங்களைப் புதைத்து வைத்திருப்பவளை யன்னல் கம்பிகளுக்கால் எட்டிப்பார்த்தபடியே அவற்றைக் கீறினேன், ஒட்டினேன். சுவரிலும் தொங்கவிட்டேன்.<br />
<br />
ஆச்சிக்கு அப்போதே எண்பத்தியிரண்டு வயதாகிவிட்டிருந்தது. இரண்டாவது வகுப்பு மட்டுமே படித்த அவளுக்குள் கதைகளும், நினைவுகளும், புனைவுகளும் கொட்டிக் கிடந்தன. அம்மாவின் ஊர் தீவாக இருந்தது. கடலில் குட்டியாக மாங்காய் வடிவத்தில் கிடக்கும் இலங்கையின் வட பகுதியில் வெள்ளைத்தாளில் மையால் தொட்டு வைத்த குட்டிப் புள்ளிப் போல இருந்தது அம்மாவின் ஊர். அங்கு பிறந்து இரண்டு வயதிலே இடம்பெயர்ந்துவிட்ட என் நினைவுகளில் தன் ஊரை கட்டிஎழுப்பித் தந்தாள் ஆச்சி. அவள் சொல்லச் சொல்ல என்னுள் எழுந்தன அந்த ஊரின் மனிதர்களும் வீடுகளும், வயல்களும் தோட்டங்களும், மண் தெருக்களும். இரவு ஊரையே காவல் காக்கும் ஐயனாரும், பறக்கும் பாம்பும், காவு வாங்கும் புளியமரமும். போதாக்குறைக்கு பட்டினத்தார் பாடல்களையும், தேவாரங்களையும் பாடிக் கொண்டே சுடு மண்ணில் செருப்பில்லாது குடு குடுவென்று தூக்கிக் கொண்டு திரிந்தாள் அவள். ஆச்சி சொன்ன கதைகளும் நினைவுகளும் மனதின் மடிப்புகளுக்குள் புதைந்து போயின. படிந்து கொள்ள முடியாமல் உழன்று திரிந்தன.<br />
<br />
ஈழத்தில் எண்பதுகளில் பிறந்த என்னையொத்தவர்களுக்கு யுத்தம், இடப்பெயர்வு, பிரிவு, மரணம் எல்லாம் பிறப்பிலேயே இயல்பாக அறிமுகமானவை. பிறந்த ஊரைவிட்டு இடம்பெயர்ந்திருந்தாலும் எனது ஆறு வயது வரைக்கும் யாழில் ஒரு இடம் வாய்த்திருந்தது. பின்னதாக நடந்த பெரும் இடப்பெயர்வில் யாழ்ப்பாணத்தில் பெரும்பகுதியைத் துடைத்தவாறு மக்கள் இடம்பெயர்ந்துவிட தொடங்கியது இடைவிடாத இடப்பெயர்வு. ஏலவே நிறைந்த நினைவுகளையும், தொன்மத்தின் கதைகளையும் காவித் திரிந்த மனது ஒரு பொழுதில் வார்ப்பாகப் படைக்க ஆரம்பித்தது. அந்தப் பொழுதைப் பிரிவுகள் தொடக்கித் தந்தன. எந்த இடப்பெயர்விலும், போர்ச் சூழலிலும் உறவுகளைப் பிரியாத குடும்பத்தை உயிர் வாழ்தலுக்கான இறுதிச் சாத்தியம் என்றிருந்த புலம்பெயர்வுகள் பிரிக்க நான் எனக்கான படைத்தலை ஆரம்பித்தேன். முதல் வார்ப்பு "வாழ்க்கை என்னும் காகித ஓடம்" என்றாரம்பித்தது.<br />
<br />
என் தொன்மங்களின் ராணி சொன்ன கதைகளை வேறு வேறு ஊர்களிலிருந்து வேறு வேறு கதை சொல்லிகள் பலதரப்பட்டவாறு புனைந்தனர். அநேகமானவை எனது ஊரையும், மனதின் ஆழ்ந்த இருட்டுக்குள் அமிழாமல் உரசித் திரியும் நினைவுகளையும் புரட்டிப் போட்டன. அவற்றை கனவுகளில் காணவும், நிஜத்தில் தேடவும் வைத்து வதைத்தன. எல்லா சித்திரவதைகளுக்கும் புத்தகங்களின் வார்த்தைகளுக்குள் மருந்திருந்தது. பதின்மங்களை நிரப்பிய புத்தகங்களே என்னைத் திசை திருப்பின.<br />
<br />
கண்டங்கள் தாண்டிப் பறந்தாவது தம் உயிர் வாழ்தலுக்கான சாத்தியங்களை உறுதிப்படுத்த முனையும் ஈழத்தமிழர்களின் பிரதிநிதியாய் என்னாலும் அதைத்தான் செய்ய முடிந்தது. நீண்ட காத்திருப்புக்கள் என்னை என் உறவுகளிடம் மீண்டும் சேர்த்தாலும் இந்த தேசத்தில் என் இருப்பு இன்னொரு இடப்பெயர்வாகவே நினைவுகளை ஆட்கொண்டிருக்கிறது என்றால் மறுப்பதற்கில்லை. முற்றுமுழுதாக வேறுபட்ட காலநிலையிலிருந்து தொடங்கும் அனுபவங்களைப் புனையும் எனக்கான ஒரு மொழியை நான் தினமும் கற்றுக் கொள்கிறேன். அந்த மொழி கொண்டு அவற்றை நாட்குறிப்புக்களாகப் பதிந்து கொள்ள முயற்சிக்கிறேன். இந்த முயற்சிகளே இந்த இடப்பெயர்வை வாழ்தலுக்கான சாத்தியத்தை அதிகரிக்கும் ஒரு முயற்சியாகவும் மாற்றுகின்றன. அவை ஆச்சி சொன்ன கதைகளுடன் வெகுவாகவே முரண்படுகின்றன எனவிருந்தபோதும் முரண்பாடுகளுடன் முரண்படுவதும் மீள அவற்றைத் திருத்திப் படைப்பதுவும் வாழ்தலை சுவைப்படுத்துகின்றன என்பதுதான் உண்மை. என்னவிருப்பினும் மனவிடுக்குளில் படியாமல் ஆழ்ந்த மௌனத்துக்குள் திரியும் சொற்களை எப்போதாவது உணர முடிகிறது. அந்த வார்த்தைகளைக் கொண்டு ஒன்றை வார்த்து விட முடியுமானால் இந்த இடப்பெயர்வும் முடிவிற்கு வந்துவிடுமென்றும் தோன்றாமல் இல்லை.<br />
<br />
படைப்புக்கள் தன்னைப் படைத்த படைப்பாளிக்கே உருவாக்கித்தரும் உலகம் மிகவும் விசித்திரமானது. ஒரு நொடியை அல்லது குறித்த நுண்மையான உணர்வைப் பதிந்து கொள்ள முற்படும்போது சிலபொழுதுகளில் நிறைவும் சில பொழுதுகளில் நிறைவின்மையும் கிடைப்பது படைப்பாளிக்கு சாதாரணமாகக் கிடைக்கும் அனுபவமாகிறது. ஒரு குறித்த மனநிலையில் தேர்ந்த படைப்பாக இருக்கும் ஒன்று இன்னொரு பொழுதில் வேறொரு வாசிப்பனுபவத்தைத் தருகிறது. இந்த சார்பு நிலைகளைத் தாண்டி படைப்புக்களைத் தேர்ந்து நூலாகத் தொகுப்பதென்பது இலகுவானதாக இல்லை. கவிதைகளைத் தொகுப்பதென்ற எண்ணம் ஆரம்பத்திலேயே தோன்றியிருந்தது என்றாலும் சாத்தியப்பட்டதென்னவோ சமீபத்தில்தான். கவிதைகளையும் வேறு சில படைப்புக்களையும் சிற்றிதழ்களும், இலக்கிய சஞ்சிகைகளும் வெளியிட்டதுடன் தொடர்ந்து இயங்குவதற்கான தளத்தையும் ஏற்படுத்தித்தந்தன. அவற்றின் ஊக்கமும் நண்பர்களின் அக்கறையும் எனது படைப்புக்களை ஒவ்வொரு முறையும் மெருகேற்ற உதவியதுடன் தொடர்ந்து மெருகேற்றிக் கொள்ளவும் உதவுகின்றன.<br />
<br />
முதலாவது தொகுப்பான "நான் பேசிக் கொண்டிருந்தபோது பெய்திராத மழை" என்னும் கவிதை நூலை வடலி பதிப்பகத்தினர் வெளியீடு செய்திருந்தனர். அதன் என்னுரையில் குறிப்பிட்டது போல தொடர்ந்து இடம்பெயர்ந்து பழக்கப்பட்டுவிட்டிருந்த உடலுக்கும் மனதுக்கும் புலம் பெயர்தல் என்பது பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்திவிடப் போவதில்லை என்று எண்ணியிருந்த போதிலும் அது அவ்வளவு எதிர்பார்த்தது போலல்ல என்பதுதான் நிஜம். வாழ்தலுக்கான சாத்தியக்கூறுகளை அதிகரித்துவிடப் பனி(ணி)யைக் கரைத்துப் பாதை செய்து பயணிக்க வேண்டியிருக்கும் இந்தப் புலம்பெயர் தேசத்திலிருந்து எனது முதலாவது கவிதைத்தொகுப்பு வெளிவந்தது குறித்து உண்மையிலேயே மனதளவில் எந்தவொரு கிளர்ச்சியையும் உணர்ந்து கொள்ள முடியவில்லை. பயணங்கள் தம்பாட்டுக்கு நீண்டு கொண்டே செல்வதான பிரம்மை தொடர அவற்றின் வழி செல்வது அன்றி வேறொன்றையும் செய்து விட முடியாத கையாலாகாத தனத்தையே இப்போது காலம் என் முன்னே வைத்திருக்கிறது என்றாலும் மறுப்பதற்கில்லை. வாழ்வு குறித்தும் எனது சுயதேடல் குறித்தும் எந்தவகையான முடிவை அல்லது தேடல் பரப்பை நான் கண்டுகொள்ளலாம் என்பதும் விரிந்து கொண்டே செல்ல எனது வாழ்க்கைக்கான குறிப்பை எனது மொழி எழுதிப் போகுமெனின் அதுவே எனது எழுத்தின் வெற்றியாகவும் அமையும்.<br />
<br />
- "புத்தகம் பேசுது" மார்ச் மாத இதழில் வெளியாகிய பதிவு.<br />
</div>மயூ மனோ (Mayoo Mano)http://www.blogger.com/profile/12666644873302635477noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3634761057150025278.post-16916072324490869112012-03-04T21:20:00.002-05:002012-03-13T09:59:25.067-04:00"ஆறாவடு"<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: justify;"><div style="text-align: left;">"87 இல் தொடக்கி 2003 வரையான இந்த இரண்டு 'அமைதி"க் காலங்களுக்கு இடையே இந்த நாவலின் கதை நகர்கிறது." என்று தன்னுரையில் குறிப்பிடும் சயந்தனின் வரிகளுடன் நாவலுக்குள் நுழைகிறேன்.</div></div><div style="text-align: justify;"><div style="text-align: left;"><br />
</div></div><div style="text-align: justify;"><div style="text-align: left;">"நீர்கொழும்புக்கு அருகேயான கடற்கரையில் குந்தியிருந்து இத்தாலிக்கு எந்த ரூட்டால் போவது என்று இவன் யோசித்துக் கொண்டிருந்தபோது இரவாகியிருந்தது."</div></div><div style="text-align: justify;"><div style="text-align: left;"><br />
</div></div><div style="text-align: justify;"><div style="text-align: left;">இப்படித்தான் நாவல் தொடங்குகிறது. ஆரவாரங்கள், சொற்களால் கட்டப்படும் அலங்காரத் தோரணங்கள் இன்றி ஆரம்பிக்கும் நாவல் முழுவதும் எங்கும் மிகையான அலங்கார சொற்களின் தடங்கள் இல்லை.</div></div><div style="text-align: justify;"><div style="text-align: left;"><br />
</div></div><div style="text-align: justify;"><div style="text-align: left;">இந்திய இராணுவம் யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டிருந்தகாலத்தில் விடுதலை இயக்கமொன்றில் உயிர்ப்பயம் காட்டப்பட்டுக் கட்டாயமாக இணைக்கப்பட்டு பின் விடுதலையாகி விடுதலைப்புலிகளுடன் இணையும் அமுதன் என்ற கதாபாத்திரத்தின் அனுபவங்களையும், அவன் சார்ந்த மக்களின், ஊரின் கதையையும் ஆறாவடு பேசுகிறது.</div></div><div style="text-align: justify;"><div style="text-align: left;"><br />
</div></div><div style="text-align: justify;"><div style="text-align: left;">"யாழ்ப்பாணத்திற்குப் பாதை திறக்க என்று புறப்பட்ட ஆமி, கடைசியில் எந்த பஸ்ஸிற்கு டிக்கெட் கிடைக்கிறதோ அங்கேயே போகலாம் என்ற மாதிரியான நினைப்பில் நிலை கொண்டிருந்தான். இங்காலே சனங்கள் நிலைகொள்ளாமல் இருந்தார்கள்." பக்-74</div></div><div style="text-align: justify;"><div style="text-align: left;"><br />
</div></div><div style="text-align: justify;"><div style="text-align: left;"><br />
</div></div><div style="text-align: justify;"><div style="text-align: left;">"ஓர் இரவு நேரச் செய்தியைக் கோகுலன் வாசித்துக் கொண்டிருந்தபோது அருகில் குண்டுவிழும் சத்தங்கள் கேட்டன. கொஞ்ச நேர அமைதிக்குப் பிறகு கோகுலன் மீண்டும் செய்தியை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார்." பக்-75</div></div><div style="text-align: justify;"><div style="text-align: left;"><br />
</div></div><div style="text-align: justify;"><div style="text-align: left;">இப்படியாக நாவல் முழுவதும் ஒருவித எள்ளல் தொனியுடன் கதை சொல்லும் கதைசொல்லி சலிப்படையாது வாசிப்பவரை தன் கதையுடன் பயணிக்கவைக்கிறார். எள்ளல் சுவையுடன் படைப்புக்களை எழுதுவது ஆசிரியரின் தனித்தன்மையாக அறியப்பட்டிருப்பினும் இந்த நாவலில் எழுத்தாளரால் கையாளப்பட்ட மொழியானது நாவல் தொட்டு நகரும் அரசியல் நிகழ்வுகள், போராட்டாங்களுக்கிடையிலான மக்களதும், போராளிகளதும் வாழ்க்கை போன்ற கனதியான உணச்சிபூர்வமான தளங்களுக்கிடையில் மிகவும் நுணுக்கமாகவும், இலகுவாகவும் பயணிப்பது மிகவும் சிறப்பாக அமைந்திருக்கிறது. நாவலின் ஏதோ ஒரு பகுதியிலாவது பாத்திரங்களின் வார்த்தைகளில், நினைவுகளில், அனுபவங்களில் ஈழத்துப் பிரதிநிதியாக வாசகரைப் பொருத்தக்கூடியதாக இருப்பதும் நாவலை பலப்படுத்துகிறது.</div></div><div style="text-align: justify;"><div style="text-align: left;"><br />
</div></div><div style="text-align: justify;"><div style="text-align: left;">ஈழப் படைப்புலகில் வெளிவரும் படைப்புக்கள் ஒவ்வொன்றும் தங்களுக்கென்று அடையாளப்படுத்தப்பட்ட அரசியலூடாகவே அணுகப்படுவது கண்கூடு. படைப்புக்களை விடுதலைப்புலிகள் ஆதரவான படைப்புக்கள் அல்லது எதிரானவை என்ற இரண்டு வகைக்குள்ளாக அவை அடக்கப்படுவதும், புறக்கணிக்கப்படுவதும் இலக்கிய உலகில் நடந்து கொண்டிருக்கும் தொடர் நிகழ்வுகள் என்றால் மறுப்பதற்கில்லை. இந்த சூழ்நிலையில் ஈழத்துப் படைப்புக்களாக வெளிவந்த ஷோபா சக்தியின் "கொரில்லா" மற்றும் விமல் குழந்தை வேல் அவர்களின் "கசகரணம்" ஆகிய நாவல்கள் அரசியல் சார்ந்த எழுத்துக்களாக மிகவும் கவனிக்கப்பட்டன.</div></div><div style="text-align: justify;"><div style="text-align: left;"><br />
</div></div><div style="text-align: justify;"><div style="text-align: left;">நாவல்கள் பேசும் வரலாற்று, அரசியல் நிகழ்வுகள் தவிர்ந்து அந்த சூழலுக்குள் வாழும் சாதாரண பொது மக்களது கதை எந்தளவுக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்ற கேள்வி இருந்து கொண்டேயிருக்கும் நிலையில் சயந்தனின் "ஆறாவடு" அதனை தன் பங்கிற்கு செய்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். உதாரணமாக விடுதலைப்புலிகளுக்கு மறைமுகமாக உதவிகள் செய்தும், அவர்களைக் காப்பாற்றியும் வரும் மக்கள் இடம் பெயரவேண்டுமென்று வெளிக்கிடும்போது தங்களிடையே பயணிக்க நேரிடும் காயப்பட்ட போராளிகளின் வாகனத்திற்கு "நீங்களும் எங்களோடைதான் வரோணுமே.. மேலாலை அவன் கண்டானென்றால் நாங்களும் சிதறித்தான் சாக வேணும்" என்று ஒரு உரையாடலாக நாவலாசிரியர் அதை பதிவு செய்கிறார். மக்களது மனநிலை மாற்றங்களையும் அவர்களது உடனடித்தேவைகளின் நிமித்தம் தங்கள் முடிவுகளை எடுத்துக் கொள்ளும் தன்மையும் நாவலின் பல பகுதிகளில் உரையாடல்கள், சம்பவங்களூடு பதியப்பட்டிருக்கின்றன. விடுதலைப்புலிகளுக்கும் மக்களுக்கும் இருந்த உறவின் தன்மைகளை வேறு வேறு இடங்களில் சொல்லிப்போகும் ஆசிரியரின் இன்னொரு உருவந்தான் நேரு ஐயரோ என்ற எண்ணமும் தோன்றி மறைகிறது.</div></div><div style="text-align: justify;"><div style="text-align: left;"><br />
</div></div><div style="text-align: justify;"><div style="text-align: left;">"பள்ளிப்பிள்ளைகளை ஏன் இணைக்கிறீர்கள்? "நீயே சொல்லு.. நீங்கள் செய்றதெல்லாம் சரியெண்டு நினைக்கிறியோ? போன்ற கேள்விகளோடும் "குடை கொடி ஆலவட்டம் செங்கோல் என்று சனங்களிட்டை இருந்து நீங்கள் தூரப் போய்க் கொண்டிருக்கிறியள்" என்று மக்களின் பிரதிநிதியாய் கருத்துக்களோடும் விடுதலைப்புலிகளை நெருங்கும் நேரு ஐயாவிற்கு போராளியாக இருக்கும் அமுதனின் பதில் பெரும்பாலும் "ஐயா, இது நெருக்கடிக் காலம், அண்ணைக்கு எல்லாம் தெரியும், மேலிடத்தில் இதைப்பற்றிக் கதைக்கிறோம்" என்றவாறாக இருக்கிறது.</div></div><div style="text-align: justify;"><div style="text-align: left;">"ஆறாவடு" நாவல் பேசும் அரசியல் பல தளங்களில் நிகழ்கிறது. மக்களுக்காக என்று உருவாக்கப்பட்ட இயக்கங்களும், அரசியல் அமைப்புக்களும் மக்களிடமிருந்து விலகிப்போன தருணங்களை இந்தவகையில் நேரு ஐயாவின் பாத்திரப்படைப்பில் படைப்பாளி சரியாகவே கணித்திருக்கிறார். சகோதரப்படுகொலைகளை அமுதனின் அனுபவங்கள் மூலம் காட்சிப்படுத்தும் படைப்பாளி இன்னொரு பத்திரமான பெரியையா மூலம் இப்படி சொல்கிறார். "அவனுக்கு நினைவு தெரிஞ்சு இது தான் ஆமி, இதுதான் இயக்கம், இதுதான் துவக்கு என்று அறிய முதலே நீங்கள் மற்ற இயக்கங்களை முடிச்சுப் புதைச்சிட்டீங்க." போர் நிறுத்தக் காலப்பகுதியில் நேரு ஐயாவின் நடவடிக்கைகளை விபரிக்கும் போதும் மக்களின் மனநிலையே காணக் கிடைக்கிறது. இவ்வாறாக புலி எதிர்ப்பு, புலி சார்பு என்று வகைப்படும் இலக்கியங்களுக்குள் அடங்கிவிடாமல் மக்கள் பார்வையிலிருந்தும் அரசியலைப் பதிந்திருப்பது நாவலின் சிறப்புக்களில் ஒன்றெனலாம். </div></div><div style="text-align: justify;"><div style="text-align: left;"><br />
</div></div><div style="text-align: justify;"><div style="text-align: left;">தொடர்ந்து, நாவலின் பாத்திரப் படைப்புக்களிலும், சம்பவங்களின் பதிவுகளிலும் பல நேரங்களில் தொடர்பிலாமலே இருக்கின்றன. அதாவது நாவல் ஒன்றிற்கு அடிப்படையாக இருக்கும் பாத்திரங்களை உருவாக்குதல், அவற்றை அவர் சார்ந்த உறவு, மற்றும் அனுபவங்களின் அடிப்படையில் கட்டியெழுப்புதல், கதை நிகழுமிடம் பற்றிய வர்ணனைகள் போன்றவற்றை "ஆறாவடு" தளர்த்தியிருக்கிறது. நாவலில் இந்திய இராணுவத்தால் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட தேவி, போராளிகளுக்கு உதவி செய்து எதிர்பாராமல் குண்டொன்றை வெடிக்க வைத்து இறக்க நேரிடும் நிலாமதி, தாயை வீட்டில் விட்டு இடம்பெயர்ந்து மீண்டும் தாயைத் தேடி வரும் போது ஊனம் வடியும் எலும்புக்கூடை கண்டடையும் சிவராசன், சாதி பற்றிப் பேசும் கோயில் சொந்தக்காரரை போராளிகளினூடு தண்டிக்கும் இளைஞன் என்று பாத்திரங்கள் தன்னியல்பாக நாவலின் ஒவ்வொரு பகுதியிலும் இணைந்து அந்தப் பகுதியிலேயே விடைபெற்றுப் போகிறார்கள். சிறுகதை ஒன்றுக்கு இருக்கக்கூடிய கட்டமைப்பு இயல்புகளுடன் அமைந்திருக்கும் இந்தப் பகுதிகளை தனித்தனி சிறுகதைகளாகக்கூட அணுக முடிகிறது. நாவலின் இந்தப் பகுதிகளை மக்களின் வாழ்க்கையாகப் பார்க்க முடியும் அதே நேரத்தில் ஒட்டு மொத்த நாவலையும் நுண்ணிய அரசியல் இணைத்து நிற்கிறது.</div></div><div style="text-align: justify;"><div style="text-align: left;"><br />
</div></div><div style="text-align: justify;"><div style="text-align: left;">நாவலின் முழுதும் பல வரலாற்று சம்பவங்கள் விரவிக் கிடக்கின்றன.அவற்றைத் தரவுகளாகத் தராமல் சம்பவங்களுடன் பாத்திரங்களுடன் பொருத்திப் புனைவினூடு எழுதியிருக்கக் காணலாம். உதாரணமாக "நல்லவேளையாக அதற்கு ஐந்து நாட்கள் பிந்தி சிங்கக்கோடியை ரத்வத்தை ஏற்றினார். சிங்கக்கொடிக்குப் பக்கத்தில் நந்திக்கொடியொன்றை தம்பு இராமலிங்கம் ஏற்றினார். நான்கு மாதம் பிந்தி தென்மராட்சியிருந்தும் வடமராட்சியிளிர்ந்தும் இயக்கம் வெளியேறியது. சனங்கள் திரும்பவும் யாழ்ப்பாணம் போனார்கள். அதற்கு மூன்று மாதம் பிந்தி தம்பு இராமலிங்கத்தை வீட்டில் வைத்து இயக்கம் சுட்டது. அதற்கு ஒரு மாதம் பிந்தி செம்மணி செக்பொயிண்டில் கிருசாந்தியின் சைக்கிளை இராணுவம் மறித்தது." தொடர்ந்து நடந்த சம்பவங்களின் தரவுகள். ஆனால் நாவலின் ஒரு பகுதியின் தொடர்ச்சியாக இது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எனினும் இத்தனை விபரங்களும் முக்கியமானவை, அவற்றைக் குறிப்பிடவேண்டுமென்ற பதற்றத்தைக் காணக்கூடியதாகவும் இருக்கிறது.</div></div><div style="text-align: justify;"><div style="text-align: left;"><br />
</div></div><div style="text-align: justify;"><div style="text-align: left;">மேலும், இறுதியாக வரும் பகுதிகளில் கடலில் தங்களுடன் பயணிக்கும் சிங்களப் போராளிகளின் உணர்வுகளையும் உரையாடல்களூடு பதிந்திருக்கிறார் படைப்பாளி. வறுமையின் நிமித்தம் இராணுவத்தில் இணையும் இளைஞர்களின் எண்ணமெல்லாம் தங்கள் தங்கள் குடும்பத்துக்குத் தங்களால் கிடைக்கப்போகும் சம்பளத்தைப் பற்றியதாக இருக்கிறது. அமுதன் போரில் பங்கேற்றபோது கைப்பற்றப்பட்ட இராணுவ முகாமில் கிடக்கும் இராணுவத்தினரின் உடைமைகளுக்குள் பொதித்து வைக்கப்பட்டிருக்கும் குழந்தையின் படத்தையும், துணைகளின் படங்களையும் சாட்சிகளாக சொல்லிப் போகும் நாவலாசிரியர் உயிருக்குப் பயந்து கடைசி முயற்சியை செய்து நகரும் இராணுவ வீரன் ஒருவனைத் தப்ப விட்டுத் தனது பாவக் கணக்கைத் தீர்த்துக் கொள்ள முயற்சிக்கிறார். தொடர்ந்து பண்டாரா என்ற சக பயணி மற்றும் முன்னாள் இராணுவம் என்ற பாத்திரத்தினூடாக "பண்டாராவுக்கு புலிகளின் பெரிய தலைவர்களின் நினவு நாட்கள் ஓரளவுக்கு மனப்பாடமாயிருந்தன. அன்றைய நாட்களின் விடியற்காலையில் புலிகள் புகுந்து தாக்க நேரலாம் என்பதால் தப்பிவிடுவதட்கு தயாராய் இருக்க வேண்டுமென்று அவன் பிரார்த்தித்துக் கொண்டான்" என்று நாவலாசிரியர் எழுதிச் செல்கிறார். முன்போருக்கால் அமுதனின் வார்த்தைகளாக "சண்டையில் நிற்கின்ற நேரங்களில் காயம் படலாம் என்றோ செத்துப் போவேன் என்றோ நினைப்பெதுவும் எனக்கு வருவதில்லை. சண்டைகளுக்குப் பிறகு யோசிப்பதுண்டு. வீரச்சாவடைந்த போராளிகளின் இறுதி ஊர்வலங்களில் அந்தச் சவப்பெட்டிகளில் நானே படுத்திருப்பது போன்ற நினைவு ஓடும். அப்பொழுது கண்களில் நீர் முட்டிக்கொண்டு வரும். நான் சாவினை விரும்பவில்லை என்று நினைத்துக் கொள்வேன்" என்று எழுதப்பட்டிருக்கிறது. போர்க்களத்தில் எதிர் எதிர் காலங்களில் நிற்கும் இரு வேறு தரப்பட்ட மனிதர்களின் உணர்வுகளைப் பதிந்த விதத்தில் நாவலாசிரியர் வெற்றிபெற்றிருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.</div></div><div style="text-align: justify;"><div style="text-align: left;"><br />
</div></div><div style="text-align: justify;"><div style="text-align: left;">புலிகள் இயக்கத்தில் களப் போராளியாய் இணைந்து கால் ஊனமுற்று அரசியல் பகுதியில் இருக்கும் அமுதன் தனது காதலின் நிமித்தம் இயக்கத்திலிருந்து விடுபட முயற்சிக்கும்போது நேரு ஐயா முன்வைத்த சில கேள்விகள் அவனுக்கு சரியெனப்படுகிறது. "காதல் ஒரு தனிமனிதனின் சுதந்திரமில்லையா என்ற யோசனை அன்றைக்குத்தான் முதலில் தோன்றியிருக்கவேண்டும், முன்பொரு நாள் நேரு ஐயா சொல்லியிருந்தார். நீங்கள் இனத்தின்ரை சுதந்திரத்திற்காக என்று சொல்லிக்கொண்டு தனி மனிதரின்ரை சுதந்திரங்களிலை தலையிட்டுத் தடுக்கிறீங்கள். அது சரியில்லை."</div></div><div style="text-align: justify;"><div style="text-align: left;"><br />
</div></div><div style="text-align: justify;"><div style="text-align: left;">"அண்ணைக்கு எல்லாம் தெரியும்" என்று பல கேள்விகளுக்குப் பதிலளிக்கும் அமுதன் இந்தப் பொழுதில் "அண்ணைக்கு எல்லாம் தெரியுமா என்ற கேள்வி இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றுவது ஆச்சரியமாயிருந்தது." என்று சொல்கிறார். எனக்குத் தோன்றும் கேள்வியெல்லாம் போராளிகள் புலிகளை விமர்சிக்க அல்லது அவர்களை/கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வெளிக்கிடும் சந்தர்ப்பங்கள் எப்போது நேர்கின்றன. இயக்கத்திலிருந்துகொண்டே இதனை செய்து கொள்ள குறைந்தளவு சாத்தியப்பாடுகள் இருந்தபோதும் காதல், குடும்பம் போன்ற தனிப்பட்ட சுதந்திரத்துக்குள் இயக்கம் நுழையும்போது தீவிரமாக விமர்சிக்க நேரிடுவதாக முன்வைக்கப்படும் பார்வைக்கு அமுதன் பாத்திரம் வலுச் சேர்க்கிறதா? தான் இயக்கத்திலிருந்த காலத்தில் இயக்கத்தை நோக்கி வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை ஒரே பதிலில் கடக்கும் அமுதன் தன்னை நோக்கி இயக்கத்தின் முடிவு எறியப்பட்டபோது, கேள்வி கேட்கும் சுதந்திரத்தை வழங்க வேண்டுமென்றும், மக்களின் விருப்பத்தையும் அவர்களின் முடிவையும் கேட்டபிறகே இயக்கம் தங்கள் முடிவுகளை முன்வைக்க வேண்டுமென்றெல்லாம் நேரு ஐயா சொன்னவற்றை நினைவுகூருகிறான்.</div></div><div style="text-align: justify;"><div style="text-align: left;"><br />
</div></div><div style="text-align: justify;"><div style="text-align: left;">"இந்த உலகத்தில், இயக்கம் இல்லையென்று ஒருதடவை கண்ணை மூடி யோசித்துப் பார்த்தேன். நீயும் அகிலாவும் எவ்வளவு சந்தோசமாக இருக்கிறீர்கள்" என்று நேரு ஐயாவால் சொல்லப்படுவதாக கற்பனை செய்யும் அமுதன் என்ன சொல்ல முற்படுகிறான்?</div></div><div style="text-align: justify;"><div style="text-align: left;"><br />
</div></div><div style="text-align: justify;"><div style="text-align: left;">இந்த நாவலின் போதாமையாக சில பகுதிகள் விரிவாக இல்லாதிருப்பதை சொல்லலாம். அமுதனின் தாயாரையும், தங்கையையும் அறிமுகப்படுத்தும் கதாசிரியர் அவர்களை இடப்பெயர்வில் கைவிட்டு நகர்கிறார். போராளி தன் குடும்பம் பற்றிக் கவலைப்படக்கூடாது என்பது போல நினைக்கும் அமுதனின் மனப்பான்மைக்காக அவ்வாறு நிகழ்ந்திருக்கலாம் என்றாலுங்கூட இன்னும் இடம்பெயர்ந்த மக்களின் அவதிகள், வலிகள், விடுபட்ட உறவினர்கள், புலம்பெயர்ந்த உறவுகளுக்காக வருடக்கணக்காகக் காத்திருந்த/காத்திருக்கின்ற மக்கள், புலிகளால் இடம்பெயர்க்கப்பட்ட முஸ்லிம் மக்கள் போன்ற மக்களின் இன்னொரு வாழ்க்கைக் குறிப்புக்கள் பற்றிப் பதிந்திருக்கவில்லை. இருப்பினும் நாவலில் எத்தனைப் பதிவது, எதனைத் தவிர்ப்பது என்பது நாவலாசிரியனின் தெரிவு என்பதையும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.</div></div><div style="text-align: justify;"><div style="text-align: left;"><br />
</div></div><div style="text-align: justify;"><div style="text-align: left;">உயிருக்கு அஞ்சி ஆபத்தான வழியில் நாட்டை விட்டுத் தப்பும் முன்னாள் விடுதலைப்புலிப் போராளிகள், தமிழ் இளைஞர்கள் பயணிக்கும் அதே வள்ளத்தில் அவர்களுடன் களத்தில் எதிரியாகப் போராடிய, வாழ்க்கையில் பெரும்தாக்கங்களை ஏற்படுத்திய இராணுவத்தின் பிரதிநிதிகளும் பயணிக்க நேரிடுவதை அவர்களுடன் சில உரையாடல்களையே நாவலில் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். இந்திய ராணுவத்தின் வன்முறைகள், தமிழ் விடுதலைக் குழுக்கள், அவர்களின் அரசியல், விடுதலைப்புலிகள், பொதுமக்கள் என்று எல்லாத்தளங்களையும் தொட்டுவிடும் படைப்பாளி நாவலை இன்னும் மெருகேற்றியிருக்கலாமோ என்ற அவாவும் தோன்றுகிறது. கடலில் வள்ளங் கவிழ்ந்து அமுதன் அணிந்திருந்த செயற்கைக்கால் எரித்திரிய முன்னாள் போராளிக் கிழவனுக்கு கிடைப்பதாக நாவல் முடிவடையும்போது, முடிவில் படைப்பை முடித்துவிடும் அவசரத்தன்மையையும் காணமுடிகிறது.</div></div><div style="text-align: justify;"><div style="text-align: left;"><br />
</div></div><div style="text-align: justify;"><div style="text-align: left;">"ஆறாவடு" என்னும் சொல்லின் அர்த்தத்தைப் பார்த்தால், வடு எனப்படுவது காயம் ஆறியபிறகு ஏற்படும் தழும்பை சொல்வது. இதைத் தெரிந்து கொண்டு எழுத்தாளர் மற்றும் தலைப்பை முன்மொழிந்தவர்கள் இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்தார்களா, இல்லை அவர்கள் அறியாமல் இந்தப் பொருளுடன் தலைப்புத் தேர்ந்தெடுக்கப்பட்டதா? என்ற கேள்விக்குப் பதிலை எழுத்தாளரிடமே விட்டு விடுகிறேன்.</div></div><div style="text-align: justify;"><div style="text-align: left;"><br />
</div></div><div style="text-align: justify;"><div style="text-align: left;">இருப்பினும் ஒரு சிறந்த படைப்பின் மூலம் எங்கள் கதையை தன் பங்கிற்கு சீரிய கதைசொல்லியின் ஆளுமையுடன் சொல்லியிருக்கும் சயந்தனிற்கு வாழ்த்துக்கள்.</div></div><div style="text-align: justify;"><div style="text-align: left;"><br />
</div></div><div style="text-align: justify;"><div style="text-align: left;">இணையம் மூலம் நாவலை வாங்க : <a href="http://vadaly.com/shop/?page_id=231&category=27&product_id=172" target="_blank">வடலி</a></div></div><div style="text-align: justify;"><div style="text-align: left;"><br />
</div></div><div style="text-align: justify;"><div style="text-align: left;">சமீபத்தில் "தமிழினி" பதிப்பகத்தினூடு வெளியாகிய எழுத்தாளர் சயந்தனின் "ஆறாவடு" நாவல் வெளியீடு 04 - மார்ச் - 2012 அன்று கனடாவில் நடந்த போது வாசிக்கப்பட்ட பதிவு. </div></div></div>மயூ மனோ (Mayoo Mano)http://www.blogger.com/profile/12666644873302635477noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-3634761057150025278.post-91440433692646500282012-02-19T18:14:00.000-05:002012-03-14T23:25:54.361-04:00இலையுதிர்காலக் குறிப்புக்கள்..!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">1 .<br />
<div><br />
</div><div>தொன்மைக் கட்டிடங்கள் நிறைந்த<br />
<div>நகருக்குள் நுழைகிறேன்</div><div><br />
</div><div>ஆதி மணத்தை நுகர்ந்தும்</div><div>அடையாளந் தெரியாது போன</div><div><span id="5_TRN_h">தொல்</span> குடிகளின் சாட்சியங்களை</div><div>தடவிப் பரிசித்துக் கொண்டும்</div><div>நிலம் கிண்டும் தீவிரத்தோடு</div><div>புகுகிறேன்</div><div><br />
</div><div>சட்ட ஓவியங்களும்</div><div>சிலைகளும்</div><div>சொல்லிச் சொல்லி ஓயும் கதைகளை</div><div>அசைபோட்டவாறு நகர்ந்து</div><div>பூங்காவில் சரியும் என் முன்</div><div>நீண்டு படுத்திருக்கிறது</div><div>தெரு</div><div><br />
</div><div>இலைகள் உதிரும் மரங்களை</div><div>முத்தமிட்ட பின்னும்</div><div>வேட்கையுற்றுத் திரியும் காற்றின்</div><div>கைகளுக்குள் சிக்கித் தவிக்கிறது</div><div>இலையுதிர் காலமில்லா நாட்டில்</div><div>பிறப்புவிக்கப்பட்ட உடல்</div><div><br />
</div></div><div>2.</div><div><br />
</div><div>மஞ்சள் இலைகள் நான்கு</div><div>சிவப்பு நான்கு</div><div>பிறகு மண்ணிறமும்</div><div>போனால் போகுது பச்சையும்</div><div>நன் நான்கு இலைகள்</div><div>வேணும்</div><div><br />
</div><div>பசை கொண்டு இலை ஒட்டி</div><div>செய்யப்பட்ட மரத்தை</div><div>வரவேற்பறையில் நிறுத்துவேன்</div><div><br />
</div><div>நீங்கள் வருவீர்கள்</div><div>என் வீட்டுக்கு</div><div>என்ன இது</div><div>யார் செய்தது</div><div>நல்லா இருக்கு</div><div>கூட இலைகள் ஒட்டியிருக்கலாம்</div><div><br />
</div><div>என்னிடம் பதில்கள் இருக்கும்</div><div>எப்பவும் போல</div><div><br />
</div><div>பால்கனியின் கண்ணாடிக் கதவுகள்</div><div>அறைந்து அறைந்து திரும்பும்</div><div>காற்றையும்</div><div>அது அள்ளி வந்த</div><div>குளிரையும்</div><div>கதவின் வழி</div><div>பொட்டலங் கட்டிக் கொண்டு வரும்</div><div>உங்கள் வருகை</div><div><br />
</div><div>உங்கள் மீளலின் பின்</div><div>கூட்டி அள்ளுவதற்கு சரியாக இருக்கும்</div><div>இலைகளையும்</div><div>குளிர்ப் பொட்டலங்களையும்</div><div><br />
</div><div>அந்தப் பின்னிரவில்</div><div>என் கனவுகளில் முளைத்தெழும்</div><div>மரங்கள் இலையுதிர்க்கா</div><div>காற்றில் குளிர் இருக்காது</div><div><br />
</div><div>கிழிந்த போர்வைக்குள்</div><div>மடிந்துறங்கும் என்னை</div><div>மொட்டை மாடி நட்சத்திரங்கள் தாலாட்டும்.;</div></div>மயூ மனோ (Mayoo Mano)http://www.blogger.com/profile/12666644873302635477noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3634761057150025278.post-22143535432236753072012-02-01T01:32:00.003-05:002012-03-14T23:26:07.320-04:00தவறான முகவரியிடப்பட்ட நாட்குறிப்பும் எனது நான்கு நாட்களும்..;பகுதி - 02<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: left;"><a href="http://mayoomano.blogspot.com/2012/01/blog-post_23.html" target="_blank">தவறான முகவரியிடப்பட்ட நாட்குறிப்பும் எனது நான்கு நாட்களும்..; பகுதி 01</a><br />
<br />
3 .</div><div style="text-align: left;"><br />
I ....</div><div style="text-align: left;">எலிசபெத்தை அன்று நாள் முழுதும் காணவில்லை. விசாரித்தால் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துவிட்டார்கள் என்ற செய்தி கிடைத்தது. போய்ப் பார்க்கலாம் என்று மனம் சொன்னாலும் வந்ததும் ஆறுதலாக பேசிக்கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன். எங்களில் சிலர் சென்று வந்து அவரை வயிறு மற்றும் கால் பகுதிகளுக்குரிய சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் மறித்து வைத்திருக்கிறார்கள் என்று சொன்னார்கள். உண்மைதான் நீண்டகாலமாகவே உபாதைகள் குறித்து முறையிட்டபடியிருந்தார். இந்தமுறை அவருக்கு நல்ல சிகிச்சை கிடைத்து வீடு திரும்ப வேண்டும். </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">II . </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">இன்று நான் மீண்டும் அந்தக் கோப்பிக் கடைக்கு சென்றேன். அங்கு அவளைக் காணவில்லை. வந்ததற்கு காரணம் உண்டு. இன்னும் இரு வாரங்களில் எனது மகளின் பிறந்ததினம். மகளுக்கு அனுப்ப என்று ஊதா நிறத்தில் சேலையும் அதே நிறத்தில் காப்புக்களையும் வாங்கியிருந்தேன். அதேபோல பச்சை நிறத்தில் இன்னொரு தொகுதிக்காப்புக்களையும் வாங்கி வந்திருந்தேன். பௌஷிகாவுக்குக் கொடுக்க வேண்டுமென்ற ஆர்வம் எழுந்தது. அவளைக் கண்டு நீ காப்புக்கள் அணிவாயா என்று கேட்கவே போயிருந்தேன். ஆனால் அவள் அங்கு இல்லை. சில நிமிடங்கள் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு கிளம்பி வந்துவிட்டேன். அவள் இடைவேளையில் நின்றிருக்கலாம், இல்லை சுகவீன விடுப்பு எடுத்திருக்கலாம். அவளைப் பற்றி விசாரித்துவிட்டு வந்திருக்கலாம் என்று தோன்றியது. </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">III ....</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">எலிசபெத்தின் உடல் வெள்ளைப்பூக்கள் சூழ அடுக்கப்பட்ட சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்ததாம். உடல் வெளுத்தும் உப்பியும் இருந்ததென்று பேசிக் கொண்டார்கள். சுருக்கம் நிறைந்த முகத்தில் கண்களும் சிரிக்கும் அமைப்பைப் பெற்றிருந்த எலிசபெத்தின் முகம் உப்பியிருக்கும் போது எப்படியிருந்திருக்கும். நான் எலிசபெத்தின் மீள் வருகையின் போது கொடுக்க வாங்கி வைத்திருந்த அவருக்குப் பிடித்த திராட்சை வத்தலை எடுத்துக் குப்பைக்கூடைக்குள் போட்டேன். எனது மகளுக்கு நேற்றுத்தான் சேலையை அனுப்பிவைத்தேன். அவள் பதில் அனுப்பப் போவதில்லை. சிலவேளைகளில் இந்தமாதம் அழைத்தால் கிடைத்ததா இல்லையா என்று தெரியும். </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">IV .....</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">இன்று கடையில் சரியான கூட்டம். பௌஷிகா மிகவும் களைத்துப் போயிருந்தாள். தலைமுடியெல்லாம் கலைந்து பறக்க சிவந்த கண்களுடன் சூடாக்கும் இயந்திரத்துடனும் பாண் துண்டுகளுடனும் பட்டருடனும் வேறு சிலவற்றுடனும் போராடிக் கொண்டிருந்தாள். அவளுக்கு உதவ அருகில் நின்றவளுக்கு வியர்த்து வழிந்தது. எனக்கு சாப்பாடு ஓர்டர் கொடுக்க மனம் வரவில்லை. ஒரு சிறிய அளவிலான டீயை வாங்கிக் கொண்டு வெளியேறிவிட்டேன். இந்த பௌஷிகா எனக்கு யாரை நினைவுபடுத்துகிறாள். கலைந்த முகத்திலும் ஓரத்தில் ஒளிந்திருக்கும் அந்த அமைதி யாருடைய முகத்தை நினைவுபடுத்துகிறது. </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">V ....</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">இன்று எலிசபெத்துக்காக நினைவு கூட்டம் நடத்தப்பட்டது. எலிசபெத்தின் மகளும் பேத்திகளும் நிகழ்வு முடிந்ததும் அவரது பொருட்களைப் பொறுப்பேற்றார்கள். இரண்டு பேத்திகளில் ஒருத்திக்கு எலிசபெத்தின் உதடும் நீண்ட கழுத்தும் வைத்திருந்தது. மற்றவள் தன் தாய்போல இருந்தாள். எலிசபெத் எனக்கு நெருங்கிய தோழியல்ல. ஆனால் தோழி. மரணமும் எனக்கு நெருங்கிய தோழியல்ல. ஆனால் அது எனக்குத் தோள் கொடுக்கக் காத்திருக்கிறது. இந்த இல்லத்தில் வந்து சேர்ந்த புதிதில் என்னைக் கலவரப்படுத்தியவை இந்த மரணங்களே. இப்போது கூடவிருப்பவர்கள் வைத்தியசாலை சென்றதும் அவர்களின் திரும்புதல்களுக்கு என்று ஒரு பொருளை வாங்கி வைத்துக் கொள்கிறேன். அவற்றை குப்பைத் தொட்டியில் போட்டும் விடுகிறேன். நினைவு நிகழ்வின் முடிவில் எலிசபெத்தின் சிறிய புகைப்படம் ஒன்று சுவரில் ஏறியது. அதே சுருக்கங்கள் கொண்ட முகம். அதே சிரிக்கும் கண்கள். </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">4 ....</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">இப்படித் தொடரும் டைரியின் சில பக்கங்கள் திகதி, நாள் கணக்கில்லாமல் நீண்டன. சில பக்கங்கள் எழுதப்படாமலே கிடந்தன. சிலவற்றில் ஓரிரு வரிகள் எழுதப்பட்டிருந்தன. எனக்கு எல்லாப் பக்கங்களையும் நினைவில் வைத்திருக்கவோ குறிப்பெடுக்கவோ முடியவில்லை. இந்தக் கதையில் வரும் பௌஷிகாவைக் கண்டுபிடிப்பதை தொடர வேண்டுமா வேண்டாமா என்றும் எனக்குத் தெரியவில்லை. எனக்குத் தலைக்கு மேல் வேலையிருந்தது. கடைசிப்பக்கங்களைப் புரட்டாமல் அபபடியே எனது பல்கலைக்கழக முதலாமாண்டுப் புத்தகங்களுக்குள் ஒளித்து வைத்தேன். </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">இரண்டு கிழமை சென்றிருக்கும். பஸ்ஸில் மிதிக்கப்பட்டு இருக்கைகளுக்குக் கீழ் தள்ளப்பட்டிருந்த மெட்ரோ நியூஸ் பேப்பரை எடுத்து எதேச்சையாகத் திருப்புகையில் இரண்டாம் பக்கத்தில் ஒரு பெட்டிச் செய்தியாய் முதியோர் இல்லத்தில் தீப்பிடிப்பு, இரு பெண்கள் பலி ஐவர் காயம் என்று தொடங்கிய செய்தி கிடந்தது. எரிந்த குறையிலிருந்த முதியோர் படமொன்றையும் தாங்கிவந்த அந்த செய்தியில் பரிதாபகரமாக தெரிந்தது எனது கோப்பிக் கடை இருக்கும் தெரு. அது வெள்ளிக்கிழமை தேதியிடப்பட்ட செய்தித்தாள். நான் பார்த்தது சனி மாலை. ஆக நடந்து ஏறக்குறைய இரு நாட்கள் ஆகிவிட்டன. நான் இதுவரைக்கும் அப்படி ஒரு முதியோர் இல்லத்தை கண்டதில்லை. இருந்திருக்கலாம், ஆனால் நான் கவனித்ததில்லை. அது எனது கோப்பிக் கடையைத் தாண்டிய அடுத்த பேரூந்து நிறுத்தத்தின் முன்னே இருந்தது. </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">நான் அந்த நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டேன். முதியோர் இல்லத்தின் முகப்பும் சில பக்கப் பகுதிகளும் கருப்பு வர்ணம் பூசி விநோதமாக என்னை வரவேற்றது. முன்னே யாருமில்லை. எல்லோரும் இடம் மாற்றப்பட்டிருக்கலாம். ஒரு பகுதி முழுக்க மஞ்சள் நிற டேப்களால் சுற்றப்பட்டு "உள்ளே வராதே" என்று எழுதியிருந்தது. மயான நிசப்தம். வரவேற்பறையில் ஒருவர், காவலாளி போல இருக்கவேண்டும், அமர்ந்து கோப்பி குடித்துக் கொண்டிருந்தார். அவர் என்னை அடையாளங் கண்டதுபோல் புன்னகைத்தார். இருக்கலாம், எனக்குத்தான் எங்கள் கோப்பிக் கடைக்கு வரும் பலரை மறந்துவிடும். நான் அவர்களின் முகத்தைப் பார்த்துத்தான் கேள்வி கேட்பேன். ஆனால் அந்த முகங்கள் என் மனதில் படிகின்றனவா என்றால் இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும். </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">"ஹாய்"<br />
<br />
"ஹாய்,"</div><div style="text-align: left;"><br />
"இங்கு என்ன நடந்தது?"</div><div style="text-align: left;"><br />
"நேற்றிரவு ஒரு தீவிபத்து. இங்கிருந்தவர்கள் எல்லோரும் இடம் மாற்றப்பட்டிருக்கிறார்கள். சிலர் வைத்தியசாலையில் தங்கவைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்கள்."</div><div style="text-align: left;"><br />
"அப்படியா? இங்கு எலிசபெத் என்று ஒருவர் இருந்தாரா? ஜூலை மாதம் இருப்பத்தெட்டாம் திகதி வைத்தியசாலையில் மரணித்திருக்கவேண்டும்."</div><div style="text-align: left;"><br />
"ஆமாம், இருந்தார். அவரது மரணத்தின் பின் சில மாதங்களுக்குள்ளாகவே இப்போது இந்த அனர்த்தம் நிகழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் இருவர் இறந்துவிட்டார்கள்."</div><div style="text-align: left;"><br />
"அவர்களது பெயர்கள் உங்களுக்குத் தெரியுமா? மிகுதிப்பேர் எங்கே தங்கவைக்கப்பட்டு இருக்கிறார்கள்? அங்கே சென்று பார்க்க முடியுமா?"</div><div style="text-align: left;"><br />
"அதனை சொல்வதற்கு இயலாது. அதற்கு நீங்கள் முகாமையாளரைத் தொடர்பு கொண்டு உங்களது அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும். உங்கள் உறவினர்/தெரிந்தவர் இங்கு இருந்தாரா?" </div><div style="text-align: left;"><br />
"இல்லை, நான் அதோ அங்கிருக்கும் கோப்பிக்கடையில்தான் வேலை செய்கிறேன். விபத்து நடந்ததாக அறிந்தேன். விசாரித்துப் போக வந்தேன்.<br />
மீண்டும் இல்லம் இந்த இடத்தில் எப்போதிருந்து இயங்கத் தொடங்கும்?"</div><div style="text-align: left;"></div><br />
"மூன்று கிழமைகள் ஆகும், நீங்கள் எலிசபெத்தை அறிந்திருக்கிறீர்களே,"<br />
<br />
<div style="text-align: left;">"அவரை அறிந்தவர் என்னுடன் வேலை செய்தார். நன்றி, நான் வரப்போகிறேன்."</div><div style="text-align: left;"><br />
"சரி," </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;"><div style="text-align: left;">அவர் மீண்டும் கோப்பிக் கப்பைக் கையிலெடுத்துக் கொண்டார். ஆக இந்த டைரியின் சொந்தக்காரி இங்குதான் வாழ்ந்திருக்கிறார். எனது கடைக்குத்தான் அடிக்கடி வந்திருக்கிறார். பௌஷிகா என்பவளும் எனது கோப்பிக் கடையில்தான் வேலை செய்கிறாள். அந்தப் பௌஷிகா யார்? நான் எனது கோப்பிக்கடைக்குள் நுழைந்துகொண்டேன். முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் இருக்கும் அந்த நாட்குறிப்பை எழுதிய பெண் தீவிபத்தில் மரணித்திருப்பாரா? எனக்கு இது குறித்து மேலும் விசாரிக்கவேண்டுமென்று தோன்றவில்லை. அந்தப் பௌஷிகாவாக என்னை நினைத்துக் கொண்டேன். அதை எனக்குப் பரிசளிக்கவேண்டுமென்று ஏன் தோன்றியது?. எனக்குத் தெரியாமல் என்னை அவதானித்திருப்பாரா? சொன்ன அடையாளங்களுக்கு நான் கொஞ்சமும் பொருந்தவில்லையே? முதலிலேயே ஏன் அருகே முதியோர் இல்லம் இருக்கலாம் என்றும் அதைத் தேடவும் எனக்குத் தோன்றவில்லை. நான் ஏன் உருவகங்கள் சொல்லும் பெண்ணையே தேடி அலைந்தேன்? என் கண்களில் துளிர்த்த நீரை குளிர் காற்று உறைய வைத்து அகர்ந்தது. </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">வீடு வந்து டைரியை திறந்தேன். முடிக்கப்படாத பக்கங்களுக்குத் திருப்பி படிக்கத்தொடங்கினேன். </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">5 .</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">I ....</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">என் மகள் பௌஷிகா இப்போதெல்லாம் பேசுவதைக் குறைத்துக் கொண்டுவிட்டாள். அவளது வீட்டுக்குப் போன போது இனிமேல் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டு வந்தது தவறுதான் போலும். என் உடமைகளை எடுத்துக்கொள்ள எலிசபெத்தின் மகள் போல அவள் வருவாளா என்ன? அவள் எங்கிருக்கிறாள் என்று கண்டுபிடித்துத் தகவல் சொல்லவே மாதக் கணக்காகிவிடும் என்றுதான் தோன்றுகிறது. நான் கோப்பிக் கடைக்கு செல்ல வேண்டும். எனது மகள் அவளது பதின்மங்களில் வேலை செய்த கடை. அவளைப்போன்ற ஒரு பெண். இளம் பெண். நிறமும் மொழியும் வேறுபட என் மகளைப் போன்று இயங்கிக் கொண்டிருக்கும் இவளது உண்மைப்பெயர் யாதாக இருக்கும். கேட்கவேண்டும். அவள் அங்கு இல்லாவிட்டால் அவளைப் பற்றி விசாரிக்க வேண்டும். விசாரித்து இந்த டைரியிலேயே குறித்து வைக்கவேண்டும். </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">II ....</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">இதை அவளுக்கே பரிசாகத் தருவதாக முடிவெடுத்துவிட்டேன். அவள் வாசிப்பாளா இல்லையோ அவள் வைத்துக் கொள்ளட்டும். என் சொத்துக்களை/பொருட்களைப் பெற்றுக் கொள்ள என் மகள் அல்லது மகன் வரப்போகிறார்களா என்ன? வந்தாலும் இந்த டைரியை சொத்துக்கள் பட்டியலில் சேர்ப்பார்களா என்ன? இதை அவளே வைத்திருக்கட்டும். </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">6 .</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">டைரியை மூடி மீண்டும் புத்தகங்களுக்குள்ளே ஒளித்து வைத்தேன். வேலைக்குப் போகும்போதும் சரி வீடு திரும்பும்போதும் சரி அந்த இல்லம் இருக்கும் திசையையே பார்ப்பதைத் தவிர்க்க வேண்டுமென்ற தீவிரம் எழுந்தது. இன்னும் ஒரு வருடம், சரியாக பன்னிரண்டு மாதங்கள், காத்திருக்க வேண்டும். என்னுடைய புத்தகங்களுக்கிடையில் இன்னும் பல டைரிகளை ஒளிக்கலாம். ஆனால் அவரது தோழியில்லாத மரணம் அவரது தோளில் இருந்து இறங்கிவிடாது இருக்கவேண்டும். எனக்குத் தூக்கம் வந்தது. இரவு பதினொரு மணிக்கு வேலை. இன்னும் நான்கு மணித்தியாலங்கள் இருக்கு. அதில் ஒரு மணித்தியாலமாவது தூங்கலாம். மூன்று மணித்தியாலங்கள் முயற்சிக்கலாம். நான் இரண்டு மணித்தியாலங்கள் கட்டிலில் புரண்டு கொண்டிருந்துவிட்டு எழுந்தேன். மேசையில் கிடந்த கைதுடைக்கும் பேப்பர் துண்டில் எழுத ஆரம்பித்தேன். </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">"உங்கள் பரிசு கிடைத்தது, மிக்க நன்றி.</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">அன்புடன்,<br />
பௌஷிகா."</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">இதை இல்லத்தில் சேர்ப்பிப்பது என்று தீர்மானத்துடன் கட்டிலில் விழுந்தேன். எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை. </div></div></div>மயூ மனோ (Mayoo Mano)http://www.blogger.com/profile/12666644873302635477noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3634761057150025278.post-46567127020348242282012-01-23T12:02:00.003-05:002012-03-14T23:26:13.668-04:00தவறான முகவரியிடப்பட்ட நாட்குறிப்பும் எனது நான்கு நாட்களும்..; பகுதி 01<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: left;"><div style="text-align: left;"><br />
</div></div><div style="text-align: -webkit-auto;"><span style="font-family: 'trebuchet ms', verdana, arial, sans-serif; line-height: 18px;">1...</span></div><span style="font-family: 'trebuchet ms', verdana, arial, sans-serif; line-height: 18px; text-align: -webkit-auto;">இலையுதிர்காலத்தின் மாலைப் பொழுதுகளில் மழை பெய்வது வழமைதான் என்று தெரிந்துகொண்டே குடைகொண்டுவராமல் தெருவில் இறங்கிய என்னை என்ன செய்யட்டும். என் குடையை யாரோ இரவல் வாங்கிய நினைவு. யாரென்பதுதான் நினைவில்லை. எலிசபெத் ஆக இருக்கவேண்டும். அவர்தான் கால்நோவுக்கென்று பிசியோதெரபிக்கும் வீட்டுக்குமாக அலைந்து கொண்டிருக்கிறார். எலிசபெத் எங்கள் முதியோர் இல்லத்தில் வந்திணைந்த இந்த ஐந்தாறு வருடங்களில் அவர் இப்படி அவதிப்படுவது இதுவே முதல்முறை. நான் எல்லோருக்கும் சீனியர்; இந்த வருடம் மார்கழி வந்தால் பதினாறு வருடங்களாகப் போகின்றன. இப்படி ஒரு விடுமுறை காலத்தில்தான் வந்து சேர்ந்தேன். மகள் அமெரிக்காவும் மகன் ஆஸ்திரேலியாவுமாக சென்று சேர்ந்தபின் நானும் அவரும் இங்கிருந்து இரண்டு எட்டில் போய்விடக்கூடிய அந்தத் தொடர்மாடியில்தான் இருந்தோம். ஐப்பசி மாதம் போல இருந்தாப்போல அவரும் போனவுடன் என்னை வற்புறுத்தி இங்கே சேர்த்தது மகள்தான். வீட்டில் தனியே இருக்க பயம், தனிமை என்றெல்லாம் சொல்லிக் கொண்டுவந்து விட்டுவிட்டாள். அவள் சொன்னதும் நியாயந்தான். இங்க வந்த பிறகுதான் இப்படி என் வயதொத்தவர்களைக் காண முடிந்தது. </span><br />
<span style="font-family: 'trebuchet ms', verdana, arial, sans-serif; line-height: 18px; text-align: -webkit-auto;"><br />
</span><br />
<div style="text-align: -webkit-auto;"><span style="font-family: 'trebuchet ms', verdana, arial, sans-serif;"><span style="line-height: 18px;">ஆனால் நான் ஒரு இளம் பெண்ணையும் இதன் பலனாய் சந்தித்தேன். என் நர்சிங் ஹோமிலிருந்து சிறு தொலைவில் இருந்தது அந்தக் கோப்பிக் கடை. கனடாவின் அடையாளங்களில் ஒன்று. எப்போதாவது அங்கு சென்று சூப் அல்லது ஏதாவது உணவுப் பதார்த்தங்கள் வாங்கி அங்கேயே அமர்ந்து அருந்திவிட்டு வருவது என் வழக்கம். அப்படியொரு நாளில்தான் அவளை நான் கண்டேன். </span></span></div><div style="text-align: -webkit-auto;"><span style="font-family: 'trebuchet ms', verdana, arial, sans-serif;"><span style="line-height: 18px;"><br />
</span></span></div><span style="font-family: 'trebuchet ms', verdana, arial, sans-serif; line-height: 18px; text-align: -webkit-auto;">அன்று அந்தக் கடையில் கூட்டமில்லை. நான் மட்டும் தான் அப்போது சாப்பாடு வாங்கப் போயிருந்தேன். சிலவேளைகளில் வரிசை நீண்டிருக்கும். ஏற்கனவே கடைக்கு வந்தவர்களில் என் வயதொத்த முதியவர்களும், சில மாணவப் பருவத்தவர்களும் அங்கங்கே அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தனர். பொதுவாக இப்படியான கடைகளை சிலர் தங்கள் உத்தியோக சந்திப்பு அல்லது பிரத்யேக சந்திப்புக்கு வார இறுதிகளில் பயன்படுத்துவார்கள். அப்படியும் இரண்டு மூன்று பேரைக் காணக் கிடைத்தது. எனினும் மழை அடித்துப் பெய்யும் ஞாயிறு மாலை என்பதால் வழமையாக வரும் கூட்டத்தைக் காணக் கிடைக்கவில்லை. கடைக்குள் நிறைந்திருந்த மழைக் குளிரும், இயந்திரங்கள் பிறப்பிக்கும் செயற்கை வெப்பமும் சேர்ந்த மிதமான சூடு எனக்குப் பிடித்திருந்தது. </span><br />
<br />
<span style="font-family: 'trebuchet ms', verdana, arial, sans-serif; line-height: 18px; text-align: -webkit-auto;">கண்ணாடிக் கதவிலும், கண்ணாடி யன்னல்களால் கட்டப்பட்ட சுவர்களிலும் வழிந்தோடும் இந்த மழையை வேடிக்கை பார்த்தவாறு நிற்கும் அவளுக்கு வயது பதினேழு அல்லது பதினெட்டு இருக்கும். அவள் புதிதாகத்தான் வேலைக்கு சேர்ந்திருக்கவேண்டும். நான் ஒரு மாதம் மகள் வீட்டில் தங்கப் போனபோது வந்து சேர்ந்திருக்கலாம். </span><br />
<br />
<span style="font-family: 'trebuchet ms', verdana, arial, sans-serif; line-height: 18px; text-align: -webkit-auto;">"ஹாய்..;"</span><br />
<span style="font-family: 'trebuchet ms', verdana, arial, sans-serif; line-height: 18px; text-align: -webkit-auto;">"குட் ஈவினிங்.., உங்களுக்கு எவ்வாறு உதவ வேண்டும்?.." </span><br />
<span style="font-family: 'trebuchet ms', verdana, arial, sans-serif; line-height: 18px; text-align: -webkit-auto;"><br />
</span><br />
<span style="font-family: 'trebuchet ms', verdana, arial, sans-serif; line-height: 18px; text-align: -webkit-auto;">ஆயிரம் தடவைகள் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு அவளின் உணர்வின்றி வெளி விழும் வார்த்தைகள். ஒரு வித அவசரத்தில் வந்து விழுந்த ஆங்கில வார்த்தைகளின் உச்சரிப்புக்குள் அவளது சொந்த நாட்டைக் கண்டு பிடிக்க முற்பட்ட அறிவை நினைத்து சிறிதாய் புன்னகைத்தவாறே அவளை ஏறிட்டேன். </span><br />
<br />
<span style="font-family: 'trebuchet ms', verdana, arial, sans-serif; line-height: 18px; text-align: -webkit-auto;">அழகிய பெண்தான் அவள். திருத்தப்பட்ட புருவங்கள். நீண்ட மூக்கின் வலது பக்கத்தில் வெள்ளியிலான சிறு வளையம் அணிந்திருந்தாள். ரோஸ் நிற உதட்டுச் சாயத்துக்குள் துருத்திக் கொண்டு தெரிந்தது இடது மேலுதட்டிலிருந்த சிறு மச்சம். பல் ஒரு வித செம்மஞ்சள் நிறம். அவளது வேலைத்தளத்தின் சீருடையின் மேற்சட்டை பச்சையில் மண்ணிற சிறு கட்டங்களை கீறிய துணியில் தைக்கப்பட்டிருந்தது. மண்ணிற நீள் காற்சட்டை அணிந்திருந்தாள். அடர்ந்த சுருள் கூந்தலை கொத்தாகப் பிடரி அடியில் சேர்த்துக் கட்டியிருந்தாள். தலையில் போட்டிருந்த ஹேர் நெட்டின் துவாரங்களுக்கு உள்ளாகவும் அதன் மேல் அணிந்திருந்த தொப்பியை மீறியும் தலை முடி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. கன்னத்துப் பூனை முடிகள் தொப்பிக்குள் அடங்க மறுத்து சுருண்டு கிடந்தன. </span><br />
<br />
<span style="font-family: 'trebuchet ms', verdana, arial, sans-serif; line-height: 18px; text-align: -webkit-auto;">"உனது பெயர் என்ன?"</span><br />
<span style="font-family: 'trebuchet ms', verdana, arial, sans-serif; line-height: 18px; text-align: -webkit-auto;">"பௌஷிகா" </span><br />
<span style="font-family: 'trebuchet ms', verdana, arial, sans-serif; line-height: 18px; text-align: -webkit-auto;">"நல்லதொரு பெயர்"</span><br />
<span style="font-family: 'trebuchet ms', verdana, arial, sans-serif; line-height: 18px; text-align: -webkit-auto;">"நன்றி, நீங்கள் இன்னும் உங்களுக்கு என்ன வேண்டுமென்று சொல்லியிருக்கவில்லை." </span><br />
<br />
<span style="font-family: 'trebuchet ms', verdana, arial, sans-serif; line-height: 18px; text-align: -webkit-auto;">அப்படியே அவளுடன் பேசிக் கொண்டிருக்கவேண்டுமென்றும் தோன்றியது. </span><br />
<span style="font-family: 'trebuchet ms', verdana, arial, sans-serif; line-height: 18px; text-align: -webkit-auto;"><br />
</span><br />
<span style="font-family: 'trebuchet ms', verdana, arial, sans-serif; line-height: 18px; text-align: -webkit-auto;">"உனக்குப் பிடித்த குக்கி வகை சொல்லு?"</span><br />
<span style="font-family: 'trebuchet ms', verdana, arial, sans-serif; line-height: 18px; text-align: -webkit-auto;"><br />
</span><br />
<span style="font-family: 'trebuchet ms', verdana, arial, sans-serif; line-height: 18px; text-align: -webkit-auto;">அவளது புருவம் ஓரத்தில் நெளிந்தது. இப்படியான கேள்விகளும் அவளுக்குப் பழையவைதான். ஆயிரம் தடவைகள் இல்லாவிடினும் சில நூறு தடவைகள் கேட்கப்பட்டிருக்கக்கூடிய கேள்வி. கேட்டுச் சலித்த கேள்வியுங்கூட. இதழ்களைப் பிரிக்காமல் புன்னகைத்தாள். பிறகு யோசிப்பவளாகத் தலையை சாய்த்தவள் அப்படியே "உங்கள் தெரிவு என்ன என்று வினாவினேன்.!" என்றவாறு மௌனமானாள்.</span><br />
<br />
<span style="font-family: 'trebuchet ms', verdana, arial, sans-serif; line-height: 18px; text-align: -webkit-auto;">"உனக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டேன்." அவள் சிறிதாய் புன்னகைத்துக் கொண்டு அப்படியே நின்றாள்.</span><br />
<span style="font-family: 'trebuchet ms', verdana, arial, sans-serif; line-height: 18px; text-align: -webkit-auto;"><br />
</span><br />
<span style="font-family: 'trebuchet ms', verdana, arial, sans-serif; line-height: 18px; text-align: -webkit-auto;">"ம்ம்..கிறீம் மஷ்ரூம் சூப் இருக்கிறதா?" </span><br />
<span style="font-family: 'trebuchet ms', verdana, arial, sans-serif; line-height: 18px; text-align: -webkit-auto;">"ஆம், அதனுடன் எதை விரும்புகிறீர்கள்? சிறு பாண் அல்லது சீஸ் பிஸ்கட்?"</span><br />
<span style="font-family: 'trebuchet ms', verdana, arial, sans-serif; line-height: 18px; text-align: -webkit-auto;">"சீஸ் பிஸ்கட்.;" </span><br />
<span style="font-family: 'trebuchet ms', verdana, arial, sans-serif; line-height: 18px; text-align: -webkit-auto;">"சரி, வேறு ஏதாவது அருந்த விரும்புகிறீர்களா? கோப்பி அல்லது ஜூஸ்?"</span><br />
<span style="font-family: 'trebuchet ms', verdana, arial, sans-serif; line-height: 18px; text-align: -webkit-auto;">"இல்லை, ஒரு கப் தண்ணீர் தர முடியுமா?"</span><br />
<span style="font-family: 'trebuchet ms', verdana, arial, sans-serif; line-height: 18px; text-align: -webkit-auto;">"நிச்சயம் தருகிறேன், நீங்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லப் போகிறீர்களா?"</span><br />
<span style="font-family: 'trebuchet ms', verdana, arial, sans-serif; line-height: 18px; text-align: -webkit-auto;">"இல்லை, இங்கிருந்து அருந்தப் போகிறேன்."</span><br />
<span style="font-family: 'trebuchet ms', verdana, arial, sans-serif; line-height: 18px; text-align: -webkit-auto;">"நல்லது, உங்களது தொகை மூன்று டொலர்களும் எழுபத்திநான்கு சதங்களும்."</span><br />
<span style="font-family: 'trebuchet ms', verdana, arial, sans-serif; line-height: 18px; text-align: -webkit-auto;">"நன்றி."</span><br />
<span style="font-family: 'trebuchet ms', verdana, arial, sans-serif; line-height: 18px; text-align: -webkit-auto;">"இது உங்களது மீதிப்பணம். இந்தத் தட்டுகளில் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். இதோ நீங்கள் கேட்ட தண்ணீர். அந்தப் பகுதியிலிருக்கும் பெண்ணிடம் உங்கள் உணவைப் பெற்றுக் கொள்ளுங்கள். உங்கள் நாள் நல்லதாகட்டும்."</span><br />
<span style="font-family: 'trebuchet ms', verdana, arial, sans-serif; line-height: 18px; text-align: -webkit-auto;">"நன்றி, உன்னுடையதும், வருகிறேன்."</span><br />
<span style="font-family: 'trebuchet ms', verdana, arial, sans-serif; line-height: 18px; text-align: -webkit-auto;"><br />
</span><br />
<span style="font-family: 'trebuchet ms', verdana, arial, sans-serif; line-height: 18px; text-align: -webkit-auto;">இந்த நீண்ட உரையாடலுக்குப் பின் அவள் களைத்துப் போனது போல தோன்றியது. முகத்தசைகளூடு ஒரு ஆயாசம் பரவித் தணிந்தது. அவள் அந்த உத்தியோகத்தில் திறம்பட இயங்குபவளாக இருந்தாள். நெடுநாளைய பயிற்ச்சியும், தொடந்த அனுபவங்களும், பல்வேறுபட்ட வாடிக்கையாளர்களை உபசரித்த பண்பும் அவள் முக பாவனைகளுக்கும், உதடு சிந்தும் மொழிக்கும், கைகளுக்கும் ஏன் உடலின் ஒவ்வொரு அசைவுகளுக்கும் ஒருவித அலட்சியத்தைத் தந்துவிட்டிருந்தது. அந்த அலட்சியம் அவளுடலில் ஒருவித அழகையும் கிளர்த்திவிட்டிருந்தது. கோப்பி சேகரிக்கப் பயன்படுத்தப்படும் கண்ணாடிக் கேத்திலை எடுத்து தண்ணீர்த் தொட்டியில் குழாயின் திருக்கை இரு விரல்களால் நெட்டித் தள்ளி ஓடும் தண்ணீரில் பிடித்து ஒரு சுற்று சுற்றிக் கழுவி மீண்டும் கோப்பியை சேகரிக்கும் இடத்தில் வைத்து கோப்பி தயாரிக்கும் இயந்திரத்தின் பொத்தானை அழுத்திவிட்டாள். பின் தாமதிக்காது ஏலவே பயன்படுத்திய பேப்பர் கப்களின் அளவுகளையும், கப் மற்றும் மூடிகளின் எண்ணிக்கைகளையும் மனதில் குறிப்பவள் போல அவற்றை உற்று நோக்கிவிட்டுத் திரும்பி அவை அடுக்கப்பட்ட தட்டிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்து அவற்றை மீள அடுக்கத் தொடங்கினாள். அவளின் செயற்பாடுகள் எல்லாமே அவளைப் பார்த்துக் கொண்டிருக்கவே சொல்லின. இவ்வாறு பலதரப்பட்ட வேலைகளை சில நிமிடங்களுக்குள் செய்துகொள்ளும் அவளது முகத்தில் எந்தவித உணர்சிகளும் இல்லை. சில நொடிகளுக்கு வந்து செல்வதாக நான் உணர்ந்த புன்னகையும் என் கற்பனைதானா? உண்மையில் அழகிதான் அவள். அழகாக இருப்பதற்குத் தான் எடுத்துக்கொண்ட முயற்சிகள் எல்லாம் தன் அலட்சிய பாவத்தால் வெகு இயல்பாகவே அழகாகக் காட்டப்படுவதை அறிந்தோ அறியாமலோ புன்னகைக்கும் அழகி. </span><br />
<br />
<span style="font-family: 'trebuchet ms', verdana, arial, sans-serif; line-height: 18px; text-align: -webkit-auto;">நான் சூப்பைத் தட்டில் வைத்துக் கொண்டு அந்தப் பகுதியிலிருந்து நகர்ந்து கண்ணாடி யன்னலோரம் இருந்த மேசையொன்றில் தெருவையும் கடையின் வரவேற்புப் பகுதியையும் பார்ப்பதாக அமர்ந்து கொண்டேன். சூடான கிறீம் மஷ்ரூம் சூப்பை மழையையும் தெருவையும் வேடிக்கை பார்த்தபடி அருந்துவது அற்புதமாக இருந்தது. கிறீம் மஷ்ரூம் சூப் எனக்குப் பிடித்தமானது. இருந்துவிட்டு இப்படி வெளியில் வந்து சாப்பிடும்போது பலவேளைகளில் கிடைக்காது. எந்த சூப் எந்த நாள் கிடைக்குமென்று ஒரு அட்டவணை வைத்திருந்தார்கள். ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த சூப் கிடைக்குமென்று எனக்குத் தெரியும். அதுவும் சில வேளைகளில் தீர்ந்துவிடும். </span><br />
<span style="font-family: 'trebuchet ms', verdana, arial, sans-serif; line-height: 18px; text-align: -webkit-auto;"><br />
</span><br />
<span style="font-family: 'trebuchet ms', verdana, arial, sans-serif; line-height: 18px; text-align: -webkit-auto;">அவள் இப்போது கையுறையணிந்த கையில் நீல நிற ஈரத்துண்டோடு மேசைகள் இருந்த பக்கம் வந்து கொண்டிருந்தாள். ஏற்கனவே அமர்ந்து சாப்பிட்டவர்கள் விட்டுப் போன தட்டுக்களை எடுத்துக் கொண்டு சிந்தியிருந்த கோப்பி மற்றும் சாப்பாட்டு மிச்சங்களையும் துணியால் ஒதுக்கி வழித்துத் துடைத்து மேசையை சுத்தம் செய்தவாறே நகர்ந்து கொண்டிருந்தாள். அவளது கண்களும் கைகளும் கால்களும் ஒருவித துரித லயத்தில் இயங்கின. </span><br />
<span style="font-family: 'trebuchet ms', verdana, arial, sans-serif; line-height: 18px; text-align: -webkit-auto;"><br />
</span><br />
<span style="font-family: 'trebuchet ms', verdana, arial, sans-serif; line-height: 18px; text-align: -webkit-auto;">"சூப் மிகவும் நன்றாக இருந்தது.."</span><br />
<span style="font-family: 'trebuchet ms', verdana, arial, sans-serif; line-height: 18px; text-align: -webkit-auto;">"நன்றி.." </span><br />
<br />
<span style="font-family: 'trebuchet ms', verdana, arial, sans-serif; line-height: 18px; text-align: -webkit-auto;">அவள் என் மேசையைத்தாண்டி சென்று மற்ற மேசைகளை சுத்தப்படுத்தி முடித்தாள். பின் துடைப்பத்தையும் ஷவலையும் எடுத்து வந்து அங்கங்கு சிந்திக்கிடந்த குப்பைகளை கூட்டியள்ளத் தொடங்கினாள். இந்த இளங்குமர்ப் பருவத்தில் இருக்கும் பெண்ணை நான் அறிந்து கொள்ளவேண்டுமென்று தோன்றியது. அவள் பருவங்களைத் தாண்டி வந்துவிட்ட எனக்கும் அவளுக்குமிடையே காலம் வருடங்களாக, இடங்களாக, நினைவுகளாக, கனவுகளாக மல்லாந்து கிடந்தது.</span><br />
<br />
<span style="font-family: 'trebuchet ms', verdana, arial, sans-serif; line-height: 18px; text-align: -webkit-auto;">மழை இப்போது லேசாகத் தூறிக் கொண்டிருந்தது. புதிதாக வருபவர்களின் காலணிகள் அள்ளி வரும் மண்ணையும், சேறையும் மீண்டும் மீண்டும் துடைக்க வேண்டி இருந்தது. அவள் சோர்வடையாதவளாக வெளி வருவதும் வாசல் பகுதியை ஈரத்துணி கொண்டு துடைத்துவிடுவதுமாக இயங்கிக் கொண்டிருந்தாள். அவளும் இன்னொரு பெண்ணுமே வேலை செய்துகொண்டிருந்ததால் இவளுக்கும் வேலை அதிகம் இருந்தது போலத் தோன்றியது. </span><br />
<br />
<span style="font-family: 'trebuchet ms', verdana, arial, sans-serif; line-height: 18px; text-align: -webkit-auto;">நான் கைதுடைத்த பேப்பரை குப்பைத்தொட்டிக்குள் போட்டுவிட்டு சூப் கோப்பையையும் கரண்டியையும் வெறுந்தட்டையும் குப்பைத்தொட்டிக்கு மேலே அவற்றின் இடத்தில் வைத்துவிட்டு பழைய இடத்திலேயே வந்தமர்ந்தேன். அவற்றை பௌஷிகா எடுத்துப்போனாள்.</span><br />
<br />
2...<br />
<br />
தலையும் வாலும் இல்லாமல் தொடங்கிய அந்த நாட்குறிப்பை இருபகலும் ஒரு இரவுமாய் வைத்துக் குழம்பிக் கொண்டிருக்கிறேன். இது பரிசாய்க் கிடைத்த நாட்குறிப்பு என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஏன் நானே இன்னமும் நம்பவில்லை. உண்மையைச் சொல்லப் போனா எனக்கு முதலில அந்தப் பரிசை என்ன செய்வதென்றே தெரியவில்லை. நேற்றைக்கு முந்திய தினம் இரவு பதினொரு மணி வேலை தொடங்க என்று பத்து நாற்பதுக்கு கடைக்குப் போனால் கூட வேலை செய்யும் அரூஜ் தான் இதைக் கொண்டுவந்து தந்தாள். கூடவே ஒரு நமுட்டுச் சிரிப்பும். அவள் சிரித்தற்கும் காரணம் இருக்கு. நானும் இதுவரை யாருக்கும் பரிசு கொடுக்கிறதில்லை. யாரும் எனக்கும் தருவதில்லை. இதில வேற தினமும் மாலை கடைக்கு வரும், பக்கத்துப் பீட்சா கடையில் வேலை செய்யும் தமிழ் பெடியனை டேட்டிங் செய்யும்படி அரூஜ் அறிவுறுத்தத் தொடங்கிவிட்டிருந்தாள். அவள் அந்தப் பரிசு அவனிடமிருந்து வந்திருக்கலாம் என்று நினைத்து சிரித்ததில் தவறொன்றும் இல்லைத்தான்.<br />
<br />
சரி, இப்ப பரிசுக்கு வருவோம். பரிசென்றால் பெரிதாக ஒன்றுமில்லை, ஒரு நாட்குறிப்பு. கிறிஸ்மஸ் காலங்களில் நான் வேலை செய்யும் கடையின் வரவேற்புப் பகுதியில் ஒரு பையைத் தொங்கவிடுவோம். அதில் கிறிஸ்மஸ் தாத்தா பரிசைக் கொண்டுவந்து போடுவார் என்பது ஐதீகம். உண்மையில் அவர் போடுறதில்லை என்பது எனக்குத் தெரிவதுபோல உங்களுக்கும் தெரிந்திருக்கும். கூட வேலை செய்யும் யாராவது இல்லை நெடுங்கால வாடிக்கையாளர்களில் யாராவது தங்களுக்குப் பிடித்த பணியாட்களின் பெயரை மட்டும் எழுதி அவர்களைப் பற்றி எந்தவொரு குறிப்பும் இல்லாமல் அந்தப் பைக்குள் போட்டு விடுவார்கள். இதில் அவர்களுக்கும் பரிசைப் பெற்றுக் கொள்பவர்களுக்கும் ஒரு சந்தோசம். இந்தக் கோப்பிக் கடையில் வேலை செய்யத் தொடங்கிய இரண்டு வருடங்களில் எனக்குக் கிடைத்த முதலாவது பரிசு இதுதான். யார் எண்டு தெரியேல ஒரு டைரியைக் கொண்டு வந்து போட்டிருக்கினம். அதுவும் வெற்று டைரி என்றால் பரவாயில்லை. முழுக்க எழுதிய முடிந்துகொண்டிருக்கும் அந்த வருடத்துக்கான டைரி. முதலில திறந்து படிக்கக் கூடாது என்றுதான் நினைத்தேன். பிறகு படித்தால் என்ன என்று தொடங்கி இப்போது கீழே வைக்க முடியாத அளவுக்கு சுவாரஸ்யமானதாக ஆகிவிட்டிருந்தது. யாரோவொரு வயோதிபப் பெண்ணின் நாட்குறிப்பு. பௌஷிகா என்ற பெயரோடு எங்கள் வேலைத்தளத்தில் யாரும் இல்லை. அவர் சொல்லும் வர்ணனைகளுடனும் யாரையும் பொருத்திப் பார்க்க முடியவில்லை. அரூஜ் கொஞ்சம் பொருந்தி வருகிறாள். ஆனால் அவள் ஒரு நாளும் பகலில் வேலை செய்வதில்லை. அவளுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் இரவு வேலை. நான் மாறி மாறி இரவும் வார இறுதிகளில் பின்னேரமுமாய் வேலை செய்வேன்.<br />
<br />
<div style="text-align: left;">என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை. இதைப்பற்றி எனது மேலாளருக்கு சொல்ல நினைத்துவிட்டுப் பேசாமல் இருந்துவிட்டேன். அவரும் மற்றவர்களும் சேர்ந்து டைரியை வாங்கி நான்காய் கிழித்து குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுவார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆக இதை ரகசியமாகவே வைத்துக் கொண்டேன். எனக்குப் பரிசு வந்திருந்த செய்தி பரவியிருந்ததால் சொந்தக் காசில் ஒரு டைரியை வாங்கி எனக்குக் கிடைத்த பரிசென்று காட்ட வேண்டியதாகப் போய்விட்டது. அதுவும் நல்லதுதான். இல்லாவிட்டால் இதை எழுதும் சந்தர்ப்பமும் எண்ணமும் வாய்த்திருக்காது. நான் எனது வேலை முடிய என் வீட்டுக்கு எதிர்த் திசையில் போகும் பஸ்ஸில் ஏறி அமர்ந்துகொண்டேன். மூன்று நிறுத்தங்கள் போனதும் ஒரு கோப்பிக் கடை வரும். அதுவும் எங்களுடையது போலத் தான். ஆனால் வேறு முதலாளி. அங்கு சென்று சேரவேண்டிய டைரி எனக்கு வந்து செர்ந்துவிட்டதோ என்ற சந்தேகம் எனக்குள் வலுப்பெற்றுவிட்டிருந்தது. கடைக்குள் நுழைந்து அங்குமிங்கும் பார்த்துவிட்டு ஒரு ஓரமாக அமர்ந்துகொண்டேன். கடையில் வரிசை வாசல் வரை முட்டிக் கொண்டு நின்றது. வேலையாட்கள் அங்குமிங்குமாய்ப் பாயாத குறையாக இயங்கிக் கொண்டிருந்தனர். இப்படிப் பாயாத குறையாக இயங்குவதற்கும் காரணம் இருக்கு. எவ்வளவு குறைந்த நேரத்தில் வாடிக்கையாளர் சேவையைப் பெற்றுக் கொள்கிறார் என்ற அடிப்படையிலேயே குறித்த கடையின் தரவரிசை மேம்படுத்தப்படும். தரவரிசையை மேம்படுத்த எங்கோ இருந்தவாறு நிறுவனமும், வீட்டிலிருந்தவாறு முதலாளியும், கடை அறைக்குள் இருந்தவாறு மனேஜரும், கூடவே நின்றவாறு மேலாளரும் பணியாட்களை நோண்டிக் கொண்டிருப்பார்கள். மாகாண அரசால் கட்டாயம் வழங்கப்பட வேண்டுமென்று அறிவிக்கப்பட்ட அடிப்படை சம்பளத்துக்குத்தான் இவ்வளவு பாய்ச்சலும். </div><br />
இபப்டி வேறு ஒரு கடையில் வந்து அமர்ந்து கொண்டு என்னைப் போல வேலை செய்யும் இன்னொரு மனித ஜென்மத்தைப் பார்த்துக் கொண்டிருப்பது எனக்கே சகிக்கவில்லை. ஆனால் வேறு வழியில்லை. கொஞ்சமாகக் கூட்டம் குறைந்தால் டைரியில் சொல்லப்பட்ட வர்ணனைகளுடன் ஒத்துப்போகும் பெண் இருக்கிறாளா இல்லையா என்பது தெரியும். ஏற்கனவே மூன்று பேரை லிஸ்டிலிருந்து எடுத்துவிட்டேன். வீட்டில் போய்த் தூங்கினால் நாளை இரவு வேலைக்கு வரும்போது களைப்பாக இருக்காது. ஆக வெட்டி வேலை செய்துகொண்டு இப்படி அமர்ந்திருப்பதைத் தவிர அந்தப் பரிசு எனக்கு ஒன்றையும் தரவில்லை. டைரியை அப்படியே குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டுப் போய்விடுவோம் என்றால் இன்னும் முடிக்காத பக்கங்களும், எனக்கு அனுமதிக்கப்படாத வேறொருவரின் டைரியைப் படித்துக் கொண்டிருக்கும் குற்றவுணர்ச்சியும் அப்படிச் செய்யாதே என்று சொல்லிக் கொண்டிருந்தன. நான் வரிசை காணாமல் போகும் வரை காத்திருக்கத் தொடங்கினேன்.<br />
<br />
- இன்னொரு பதிவில்...;</div>மயூ மனோ (Mayoo Mano)http://www.blogger.com/profile/12666644873302635477noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3634761057150025278.post-89244243125620949602012-01-04T23:00:00.000-05:002012-03-13T10:08:34.409-04:00"உச்சிதனை முகர்ந்தால்" திரைப்படமும் சில அவதானங்களும்..!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">இலங்கையில் நடந்துகொண்டிருக்கும் பேரவலங்களைத் திரையில் கொண்டுவருவதற்கு இந்தியத் திரையுலகினர் காட்டும் தயக்கமும் மௌனமும் கண்கூடு. அரசியல் மற்றும் இன்னபிறவற்றைக் காரணங்களாகப் பகிரும் திரையுலகிலிருந்து "காற்றுக்கென்ன வேலி" திரைப்பட இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் அவர்களின் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் "உச்சிதனை முகர்ந்தால்." இந்தத் திரைப்படத்தை புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் ஸ்ரீவன் புஸ்பராஜா, ஸ்ரீ பாலசுந்தரம், சிவகணேசன் தில்லையம்பலம், ரமணன் கந்தா மற்றும் விஜயசங்கர் அசோகன் இணைந்து குளோபல் மீடியா நிறுவனத்தின் சார்பில் தயாரித்திருக்கிறார்கள். மட்டக்களப்பில் பதின்மூன்று வயது சிறுமிக்கு நடந்த உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதே கதையின் கனதியை சொல்லிவிட மழை தூறிக் கொண்டிருந்த குளிர் மாலைப் பொழுதொன்றில் திரையரங்குக்குள் நுழைந்து கொண்டேன்.<br />
<div><br />
</div><div>ஈழத்தில் நடக்கும் அவலங்களை உடனுக்குடன் இந்தியச் செய்தியாளர்களுக்குத் தெரிவிக்கும் சமூக ஆர்வலர், பேராசிரியர் நடேசனுக்கு (சத்தியராஜ்) வரும் தொலைபேசி அழைப்பொன்றின் மூலம் கதைக்குள் நுழைகிறாள் சிறுமி புனிதவதி (நீநிகா) என்னும் புனிதா. தாயுடன் களவாக இந்தியாவுக்குள் நுழைய இருக்கும் புனிதாவுக்கு ஆதரவு தருவதுடன் கர்ப்பமாக இருக்கும் அவளது கருவைக் கலைத்து அவளது எதிர்காலத்தைச் சீர்படுத்த உதவுமாறு வேண்டி நிற்கிறது அந்த தொலைபேசி அழைப்பு. அந்தவகையில் இந்தியா வந்து சேரும் புனிதாவையும் தாயாரையும் தங்கள் வீட்டிலேயே வைத்துப் பராமரிக்கும் நடேசனும் அவர் மனைவியும் (நடிகை சங்கீதா) தங்கள் குடும்ப வைத்தியர் ரேகாவிடம் (லட்சுமி ராமகிருஷ்ணன்) அழைத்து செல்கின்றனர். கர்ப்பம் ஐந்து மாதத்தை நெருங்கிவிட்டதாலும் புனிதா பதின்மூன்று வயதேயான சிறுமி என்பதாலும் அவளது உடல் நிலை மிகவும் பலவீனமாக இருப்பதாலும் கர்ப்பத்தைக் கலைப்பதைவிட குழந்தையைப் பிரசவிப்பதே புனிதாவைக் காப்பாற்றும் என்று சொல்லிவிடுகிறார் வைத்தியர். தனது மகளின் எதிர்காலத்தை எப்பாடுபட்டாவது சீரமைத்துவிட வேண்டுமென்ற எதிர்பார்ப்பில் கடல் கடந்து வரும் புனிதாவின் தாய் வேறுவழியின்றி இந்தமுடிவுக்கு சம்மதிக்கிறார். இந்நிலையில் ஊரில் விசாரணைக்கென்று அழைத்து செல்லப்பட்ட புனிதாவின் தந்தையை வேறு சில தமிழ்க்கைதிகளுடன் சேர்த்து இராணுவத்தார் சுட்டுக் கொல்வதை ஒரு இணையத்தளத்தில் கண்ணுற்றவர் தகவல் சொல்ல அதனைத் தானும் பார்த்து உறுதிப்படுத்தும் புனிதாவின் தாய் மேலதிக அலுவல்களின் பொருட்டு புனிதாவை நடேசன் வீட்டில் விட்டுவிட்டு ஊர் திரும்புகிறார். பின்னதாக புனிதாவுக்கு வரும் காய்ச்சலின் போது செய்யப்பட்ட பரிசோதனைகளின் போது அவளுக்கு எய்ட்ஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட ஆரம்பிக்கிறது கதையின் இரண்டாம் பாகம். அவளுக்கே தெரியாமல் தன்னை வன்புணர்ந்தவனின் கருவை சுமந்துகொண்டு தன் தந்தை இறந்தது தெரியாமல், தாயார் ஊருக்குப் போனாரே அவருக்கு என்ன நடந்தது என்று அறியாமல் இருக்கும் புனிதாவுக்கு என்ன நடந்தது? அவள் குழந்தை என்னவாயிற்று? தாயார் என்னவானார் போன்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லி முடிகிறது திரைப்படம். எய்ட்ஸால் பாதிப்புற்றவர்களுக்கு சிறப்பு வைத்தியம் தரும் வைத்திய நிபூனராக வருகிறார் நடிகர் நாசர். இன்ஸ்பெக்டராக வருகிறார் இயக்குனர் மற்றும் "நாம் தமிழர்" அமைப்பின் தலைவர் சீமான். </div><div><br />
</div><div>புனிதா என்ற பாத்திரப்படைப்பு ஈழத்தில் சீரழிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான இளம்பெண்களின்/சிறுமிகளின் ஒரு பிரதிநிதியாக படைக்கப்பட்டிருக்கிறது. இராணுவத்தாரால் குழுவாக வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட புனிதா தான் கர்ப்பமுற்றிருப்பதைக்கூட அறியாமல் பால்யத்தின் குட்டிக் குட்டிக் கனவுகளுடன் விருப்பங்களுடன் தன் வாழ்வை எதிர்கொள்ள முயற்சிக்கிறாள். பறவைகளுக்குத் தண்ணீர் வைத்து, பூக்களுடன் பேசி, நாயிற்கு தமிழ்ப் பெயர் வைத்து அழைத்து என்று தன்னைச் சார்ந்தவற்றை எல்லைகளற்று நேசிக்கும் புனிதா ஊரில் மண் தெருக்களில் புழுதி படிந்த உடலுடன் கெந்திக் கோடு விளையாடும் குழந்தைகளை நினைவுபடுத்துகிறாள். கள்ளங்கபடமற்று சிரிக்கும் அவளது ஆழ்மனக்கனவுகளில் அவளது ஊர் படர்ந்து கிடக்கிறது. போராளிகளுடன் சிரித்து விளையாடிய, உணவு பகிர்ந்துண்ட பொழுதுகளும், மருத்துவ வசதி கிடைக்காது குண்டடிபட்டு மரணித்த நண்பியும், இறுதியாக விடைபெற்றுப் போன மனதுக்குப் பிடித்த போராளியும் அவளது நினைவுகள் முழுக்க நிறைந்து கிடக்கிறார்கள். விமானத்தின் ஓசை கேட்டு அலுமாரிக்குள் ஒளியும் புனிதாவின் கை பங்கருக்குள் ஒளியும் பள்ளிக்கூட மாணவர்களையே வரைகிறது. இவ்வாறாக முழுக்க முழுக்க போரின் பேரால் வஞ்சிக்கப்பட்ட ஈழத்து சிறுவர்களின் பிரதிநிதியான புனிதாவை தன் நடிப்பில் மிகச் சிறப்பாகப் பிரதிபலிக்கிறார் நீநிகா என்ற அந்த சிறுமி. அவரை உண்மையில் உச்சி முகரவே தோன்றியது. </div><div><br />
</div><div>ஈழத்து அகதிகளாக, இலங்கைத் தமிழர்களாக இந்தியா புகும் மக்கள் சாதாரணமாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்க முயற்சிக்கும்போதே அனுபவிக்கும் இன்னல்களும் கஷ்டங்களும் ஏலவே எழுதப்பட்டு இருக்கும் நேரத்தில் தங்களிடம் உதவி தேடி வரும் புனிதாவையும் தாயையும் தங்களுக்கு என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை என்று அடைக்கலம் தரும் நடேசன் தம்பதிகள், மறுக்காமல் உதவி செய்யும் வைத்தியர் போன்றோர் ஆறுதல் தருகின்றனர். இப்படியான மாறுதல்கள் காலத்தின் தேவை என்பதும் மறுப்பதற்கில்லை. வழி தவறி சென்று சில ஆண்களிடம் மாட்டிக் கொள்ளும் புனிதாவைக் காப்பாற்ற முன்வரும் திருநங்கை ஐஸ்வர்யா, இறுதியில் அவரை கண்டுபிடித்து உதவும் ஆட்டோ ஓட்டுனர் என்று எல்லாப் பாத்திரப்படைப்புக்களும் தாம் எடுத்துக்கொண்ட கதையின் இயல்பை தங்களின் பங்களிப்பால் சிறப்பாக பார்வையாளனுக்குக் கடத்துகின்றனர். இந்தத் திரைப்படத்தின் வசனத்தை தமிழருவி மணியன் எழுதியிருக்க இசையமைப்பாளர் இமான் இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவு பி.கண்ணன் மற்றும் மணவாளன் அவர்களால் செய்யப்பட பி.லெனின் அவர்களால் படத் தொகுப்பு செய்யப்பட்டிருக்கிறது.<br />
<br />
திரைப்படத்தின் காட்சியமைப்புக்கள் பாத்திரப்படைப்புக்கள் சிறப்பாக அமையும் அதே நேரத்தில் சிலவற்றைக் குறித்துப் பேசவேண்டியும் நேரிடுகிறது. குறிப்பாக ஆரம்பத்தில் இடம்பெறும் பெண்போராளிகள் மற்றும் தோழிகள் இணைந்து புனிதா குறித்துப் பாடுவதாக அமைந்த பாடல் காட்சியமைப்பு. போராளிகள் பாடலைப் பாடுவதுடன் புனிதாவுடன் இணைந்து நடனமாடுவதாகவும் அமைந்திருந்தது அந்தக் காட்சி. சமீபத்தில் "ஊடறு மற்றும் விடியல்" வெளியீடாக வெளிவந்த பெண் போராளிகளின் "பெயரிடாத நட்சத்திரங்கள்" கவிதைத் தொகுப்பில் பெண் போராளி அம்புலியின் கவிதை இப்படி சொல்கிறது;</div><div><br />
"ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகடிப்பில்<br />
எனை மறக்கவும்<br />
ஒரு குழந்தையை மென்மையாக<br />
தாலாட்டவும்<br />
என்னால் முடியும்.<br />
குளத்தடி மர நிழலில்<br />
எனது புல்லாங்குழலைத் தழுவும்<br />
காற்றோடு கதைபேச<br />
நான் தயார்.<br />
நிம்மதியான பூமியில் நித்திரை கொள்ள<br />
எனக்கும் விருப்புண்டு.<br />
எனது மரத்துப்போன கரங்களுள்<br />
பாய்வது துடிப்புள்ள இரத்தம்<br />
வெறும்<br />
இடியும் முழக்கமுமல்ல நான்.<br />
நான் இன்னமும் மரணிக்கவில்லை." (அம்புலி - 1997).<br />
<br />
அமைதியாக சாதாரண வாழ்க்கை வாழும் கனவுகளை ஆழ் மனதுக்குள் புதைத்துவிட்டு காலத்தின் கட்டாயத்தின் பேரில் போராடப் புறப்பட்ட பெண்போராளிகளின் மனதைப் பிரதிபலிக்கும் இந்தக் கவிதையின் காட்சியமைப்பை சிறுமிகளுடன் விளையாடி, மழையை ரசித்து மகிழும் போராளிகளாக அந்தப் பாடலில் காணக்கிடைத்தது. ஆனால் ஒரு நடனக்குழு பின்னணியில் நடனமாடுவது போல சிறுமியை மையப்படுத்தி பெண்போராளிகள் நடனமாடுவதாக அந்தக் காட்சி சித்தரிக்கப்பட்டிருந்தவிதம் பிற திரைப்படங்களில் பிறந்தநாள் குழந்தையை சுற்றி குழுவினர் ஆடிப்பாடுவதுபோல அமைந்திருந்தது. போராளிகள் மக்களுடன் இணைந்து வாழ்ந்தனர் என்பதை சுட்டிக்காட்ட விழைந்த இயக்குனர் அதனை இன்னும் சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கலாம் என்ற எண்ணம் தோன்றி மறைந்தது.<br />
<br />
மேலும் புனிதா சந்திக்கும் நபர்கள் எல்லோரும் நல்லவர்களாகவும், புனிதாவிற்கு உதவுபவர்களாகவும் இருக்க இதே இந்தியாவில் அகதிகளாக அடிப்படை வாழ்க்கைக்குப் போராடும் மக்களின் கதையையும், அவர்கள் தினம் தினம் சந்திக்கும் பிரச்சினைகளையும் காட்சிப்படுத்தும் திரைப்படம் ஒன்று வராதா என்ற ஏக்கமும் எழாமல் இல்லை. நடேசன் புனிதாவின் தாயாருக்கு சொல்வதாக வரும் வசனம் இப்படி அமைகிறது "இருபத்தாறு மைல் தொலைவில் இருக்கும்போது இருந்த நம்பிக்கை இப்போது அருகில் இருக்கும் போது இல்லையா." இந்தக் கேள்வியை தமிழ்நாட்டு மக்கள் தங்களிடம் கேட்டுக் கொள்ளவேண்டும். எந்த நம்பிக்கையில் கள்ளத் தோணியிலும், உயிரைப் பணயம் வைத்தும் தமிழ்நாட்டுக்குள் நுழைகிறார்களோ அந்த நம்பிக்கையை தமிழகம் ஈழத்து அகதிகளின் விசயத்தில் தொடர்ந்து அளிக்கிறதா என்பது கேள்விக்குறியே. தொடர்ந்த போராட்டங்கள், உயிரைக் காணிக்கையாக்கிய மரணங்கள் தமிழ் நாட்டு மக்களின் மனங்களில் மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கின்றமை மறுப்பதற்கில்லை எனினும் அவர்கள் ஈழத்து அகதிகளாக தங்கள் நாட்டில் சிறுமைப்படுத்தப்படும் உறவுகளுக்கு அடிப்படை வாழ்க்கையை வழங்குவதற்கு எந்தவகையில் நம்பிக்கையளிக்கிறார்கள் என்பது கேள்விக்குறியே. அதற்கு பத்திரிகையில் வரும் ஈழத்து அகதிகளுக்கு முகாம்களில், வெளியில் நிகழும் வன்முறைகளே சாட்சி.<br />
<br />
</div><div>நிற்க, மக்களை நேரடியாக சென்று சேர்வன திரைப்படங்கள் என்னும் வகையில் ஈழத்து அவலங்கள் திரையில் பேசப்பட வேண்டுமென்பதும் உலகமெங்கும் காட்சிப்படுத்தப்பட வேண்டுமென்பதும் காலத்தின் கட்டாயம். சில திரைப்படங்கள் சிலவரிகளிலேயே ஈழத் தமிழர்களுக்கு ஆதரவைத் தெரிவிக்க முனைவதாக சொல்லப்படுகிறது. ஆனால் தமிழர்கள் தங்களை என்ன காரணத்துக்காக பயன்படுத்துகிறார்கள் என்ற விசயத்தில் தெளிவாக இருக்க வேண்டுமென்பதும் முக்கியமானதாகும். குறிப்பாக சமீபத்தில் வெளிவந்த "ஏழாம் அறிவு" திரைப்படம் சில வரிகளில் ஈழத்துத் தமிழர்கள் குறித்துப் பேசிச் சென்றது. அந்தப் படத்தின் குறித்த வரிகளை சிலாகித்து, அவை தந்துசென்ற உணர்ச்சி வேகத்தை மெச்சி எழுதப்பட்ட பதிவுகளை சமூகத் தளங்களில் பரவலாகக் காணக் கிடைத்தது. அது எவ்வாறு இருந்தது எனின் பொதுக் கூட்டங்களில் பிறமொழி பேசும் பேச்சாளர்கள் "வணக்கம்" என்று தமிழால் தொடங்கும்போது விண்ணதிரும் தமிழர்களின் கரகோஷத்தையே. தமிழன் துரோகிக்கப்பட்டத்தை சொல்ல முழு நீளத் திரைப்படம் எடுக்க வேண்டும் என்று ஏன் பிரபல இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் முன்வருகிறார்கள் இல்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டியதும் அவசியமாகும். அவர்கள் இணைந்து செயல்படும்போது குறிப்பிடப்படும் தடைகளை அகற்றி வெற்றிபெறமுடியும் என்பதும் வெளிப்படை. பின்னதாக கவிஞர் யுகபாரதியால் எழுதப்பட்டிருந்த ராஜபாட்டை திரைப்பாடல் வரியொன்று "முள்வேலிக்குள் வாழும் தமிழீழம் போல.." என்று தொடங்கி காதலியின் பிரிவால் வாடும் காதலனை உவமித்துத் தொடர்கிறது. இவ்வாறு தமிழர்களின் கதைகளும், வாழ்க்கையும் வியாபாரத்துக்காகவும் புகழுக்காகவும் பயன்படுத்தப்பட ஈழத்து சிறுமியின் கதையை முழுக்க முழுக்க மையப்படுத்தி வந்த திரைப்படத்துக்கு என்னவாயிற்று? இந்தப் பதிவை எழுதிக் கொண்டிருக்கும் இந்தப் பொழுதில் "உச்சிதனை முகர்ந்தால்" பார்வையாளர்கள் இல்லாததால் திரையரங்குகளை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கும். பிற இந்தியத் திரைப்படங்களுடன் போராடி திரையரங்கு கிடைக்காமல் முன்னதாக திட்டமிடப்பட்டிருந்த தினத்திலிருந்து வெளியீடு பின்தள்ளப்பட்டே "உச்சிதனை முகர்ந்தால்" வெளியிடப்பட்டிருந்தது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஆக ஈழத்தின் அவலங்களை திரையில் பேசவேண்டுமேன்பதைக் கோரிக்கையாக, அப்படி செய்யவில்லை என்று குற்றச்சாட்டாக வைக்கும் மக்கள் அதனை சரிவர ஆதரிக்கிறார்களா என்றால் இல்லை. நான் அமர்ந்திருந்த திரையரங்கு வெறும் பத்துப் பேராலே நிறைந்திருந்தது. இந்தப் பத்துப் போரையும் ஏலவே இன்னொரு ஈழத்தவர் படைப்பில் கண்டிருக்க முடியும். இந்த நிலை ஏன் தொடர்கிறது என்றுதான் தெரியவில்லை.<br />
<br />
இவ்வாறாக ஈழத்தின் அவலங்களைப் பேசும் முழு நீளத் திரைப்படங்கள் வருவதற்கு பல்வேறு தடைகள் இருக்க இயக்குனர் புகழேந்தி தங்கராஜின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் "உச்சிதனை முகர்ந்தால்" திரைப்படமும் தான் எடுத்துவந்த வஞ்சிக்கப்பட்ட சிறுமியின் கதையை பார்வையாளர்களுக்குள் இறக்கிவைக்கிறது. சேனல் 4 தொலைக்காட்சி வெளிக்கொணர்ந்த இராணுவம் புரிந்த போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களைத் தொடர்ந்து இன்னொரு உறுதியான பதிவாக தெளிவாக எடுக்கப்பட்டிருக்கும் புனிதாவின் கதை ஒரு சிறுமியின்/பெண்ணின் கதையல்ல. சொல்லப்படாத ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான பெண்களின் கதை. புனிதாவுக்குக் கிடைத்த நடேசனின் குடும்பம் கிடைக்காமல் இப்போதும் அகதி முகாம்களிலும், கூடாரங்களிலும், கொட்டில்களிலும் தங்கள் எதிர்காலத்தைப் பொதித்து வைத்து நடு நிசியில் நட்ச்சத்திரங்கள் எழும் வானத்தை கூரையின் பொத்தல்களூடு வெறித்து எதிர்காலத்தை அச்சத்துடன் பார்த்திருக்கும் வாழ்க்கை வாழும் குழந்தைகளையும், மக்களையும் நினைக்க வைக்கும் திரைப்படம் பார்வையாளரின் மனச்சாட்சியையும் இருப்பையும் கேள்விக்குட்படுத்தி நகர்கிறது.<br />
<br />
புனிதா தன் மடியில் மரணத்தைத் தழுவிக்கொண்டிருக்கும் தோழி குறித்து இப்படி சொல்கிறாள், "அவள் செத்துக் கொண்டே இருந்தாள்; நாங்க பார்த்துக் கொண்டே இருந்தம்." ஆமாம், நானும் தான் புனிதா.<br />
<br />
நன்றி - "வீடு" பத்திரிகை</div></div>மயூ மனோ (Mayoo Mano)http://www.blogger.com/profile/12666644873302635477noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3634761057150025278.post-63251369163945695392011-10-23T00:05:00.008-04:002011-11-21T22:59:59.613-05:00உனக்கும் எனக்குமிடையே..!போத்தல் விளக்கை சுற்றி <div>பறந்து கொண்டிருக்கும்<br /><div>ஈசல்கள் </div><div>செட்டைகள் விழ விழ </div><div>முதலில் இருந்தே எண்ண ஆரம்பிப்பேன் </div><div><br /></div><div>பேசாமப் படி என்றவாறோ </div><div>விளக்கை உன் பக்கம் இழுத்தவாறோ </div><div>ஆரம்பிப்பாய் </div><div>அந்த இரவுக்கானதை</div><div><br /></div><div>கிடுகின் பின்னல்களூடு</div><div>வீழும் மழையின் </div><div>சத்தத்தைத் மீறட்டுமென</div><div>யாவற்றுக்குமாய் ஆரம்பிப்போம் </div><div><br /></div><div>ஏழேழு நாப்பதொம்பது </div><div>ஏழெட்டு அம்பத்தாறு </div><div>உச்சஸ்தாயில் தொடங்கி</div><div>ஈரமூறிய </div><div>சுவர்களையும் </div><div>சாணியில் மெழுகிய தரையையும் உரசி </div><div>படர்ந்து நிறைக்கும் </div><div>எங்களது குரல்கள் </div><div><br /></div><div>ஆச்சியின் காசுத்துணி முடிப்பிலிருந்து </div><div>புளிப்பு நெல்லி </div><div>உப்புத்தூள் மாங்காய் </div><div>ஐஸ்பழம் என்று நீண்டு</div><div>மீன் பொரியலின் நீள அகலத்தில் </div><div>அம்மாவுடன் பொருதுவதில்</div><div>மீள ஆரம்பிக்கும் </div><div>எனக்கும் உனக்குமான சண்டை </div><div><br /></div><div>வைரவருக்கு மடை போட்ட பின் </div><div>வீடு வரும் பெரிய பாயில் </div><div>விட்டம் பார்த்துக் கிடப்போம் </div><div><br /></div><div>வெள்ளையடித்த சுவர்களில் </div><div>தாழ்ந்த திரி வெளிச்சத்தில் </div><div>தங்களுருவை விதம் விதமாய் </div><div>எழுதியும் கிறுக்கியும் போகும் </div><div>கூரைக் கிடுகுக்குள் கிடப்பதாய் நீ சொன்ன </div><div>பாம்பும் பூராணும்</div><div><br /></div><div>நீ </div><div>முதல் நாள் "போ" என்று கலைத்த</div><div>பேய் பற்றிய கதையை </div><div>சொல்லத் தொடங்குவாய் </div><div>முகட்டுக்குள் உறங்கும் அதை </div><div>இருட்டுக்குள் தேடியவாறு </div><div>உன் பக்கத்திலேயே ஒடுங்குவேன் </div><div><br /></div><div>ஆனாலும் பார் </div><div>அம்மாவின் காலுக்காய் </div><div>மாறி மாறி உதைபட்டு </div><div>பின்னிரவில் </div><div>அவளுக்கு அங்காலும் இங்காலுமாய் </div><div>உறங்கிவிடும் நமக்கிடையே </div><div>அப்போதே விழுந்து கிடந்திருக்க வேண்டும் </div><div>நாம் கவனித்தேயிராத </div><div>இந்த மௌனம் </div></div><div><br /></div><div>- அண்ணாவுக்கு </div>மயூ மனோ (Mayoo Mano)http://www.blogger.com/profile/12666644873302635477noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-3634761057150025278.post-72773468994027290752011-10-19T09:54:00.003-04:002011-10-22T00:11:17.732-04:00வௌவாலின் குரல் கொண்டு..இலைகள் உதிர்க்கும் பெருமரங்களின் கீழ் <div>வெறிச்சோடிக் கிடக்கின்றன தெருக்கள் </div><div><br /></div><div>உச்சி மோர்ந்து </div><div>உயிர் உறைய அணைக்கிறது </div><div>குளிர் </div><div><br /></div><div>சுவர்கள் மோதி </div><div>கூரையில் எதிரொலித்து வீழும் </div><div>வௌவால் குஞ்சுகளின் குரலாய் </div><div>மனச்சுவர்களுக்குள் அடங்குகிறது </div><div>எனது குரல் </div><div><br /></div><div>பதுங்கு குழிக்குள் ஒடுங்கும் தீவிரத்துடன் </div><div>அலைபாய்ந்து ஓய்கின்றன </div><div>என் கண்கள் </div><div><br /></div><div><div>பேரன்பு கொண்டவர்களே </div><div>என் மேலான பிரியத்தின் பேரால் </div><div>கூறுங்கள் </div><div>எனக்கான ஒரு பதிலை </div></div><div><br /></div><div>எனக்குச் சற்றும் பொருந்தாத </div><div>இந்தக் குளிர் நிலத்தில் </div><div>நான் என்னதான் செய்து கொண்டிருக்கிறேன் </div>மயூ மனோ (Mayoo Mano)http://www.blogger.com/profile/12666644873302635477noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-3634761057150025278.post-91928238683408586972011-10-10T14:56:00.010-04:002011-10-22T00:11:09.305-04:00ஃபஹீமாஜஹானின் "அபராதி"படைப்பொன்றை பதிந்து செல்லும் பொது அது <span id="21_TRN_e">வெவ்வேறு</span> அனுபவங்களை படைப்பாளிக்கும் வாசிப்பவனுக்கும் விட்டுச் செல்கிறது. படைப்பாளி நின்று பேசும் தளம் யாதாகவிருப்பினும் எந்த சூழ்நிலையில், எதன் பொருட்டு <span id="21_TRN_11">நிகழ்த்தப்படிருப்பினும் அந்தப்படைப்பை உள்வாங்கிக் கொள்வதன் மூலம் வாசிப்பவரின் பிரவேசம் எழுத்துக்குள் நிகழ்கிறது. ஒரு படைப்பின் பின் படைப்பாளி மரணித்துவிடுகிறார் என்று குறிப்பிட்டார் </span> ஒருவர். அவ்வாறே, ஃபஹீமாஜஹான் அவர்களின் கவிதைத் தொகுப்பான அபராதியை வாசிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வாசிப்பனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் பொருட்டு இந்தப் பதிவு.<div><br /></div><div>"ஆருயிரே வருக" என்ற தலைப்பிட்ட கவிதையுடன் திறக்கும் அபராதியின் பக்கங்களை முப்பத்தொரு கவிதைகள் நிரப்பியிருக்கின்றன. ஒவ்வொரு கவிதையும் வாசகருக்கு வெவ்வேறு அனுபவங்களைத் தந்து நகர்கின்றன. </div><div><br /></div><div>"நிழல் மரங்களற்றுச் </div><div>சூரியன் தவிதவித்திடும் நெடுஞ்சாலையோரம் </div><div>வெய்யிலை உதறி எறிந்தவாறு </div><div>நடக்கிறாள் மூதாட்டி" </div><div><br /></div><div>என்பதாகத் "துயர்" என்னும் கவிதையில் எழுதும் கவிஞர் கொதிமண்ணில் நடக்கும் அவளின் முன்</div><div><br /></div><div>"வெயில் </div><div>மிகப் பெருந் தண்டனையை </div><div>வழி நீளப் பரவ விட்டுள்ளது" என்கிறார். </div><div><br /></div><div>ஆதி முதல் தொடரும் பயணத்தில் ஒளிந்திருக்கும், ஏலவே அனுமானிக்கக் கூடிய முடிவு தெருவின் வளைவுக்குள் மறைந்திருக்கிறது. கூடவே வரும் ஆனால் நீள அகலம் மாறி மாறித் தோன்றும் நிழல் போல அவளுடனும், அவளுள் உறைந்தும் பயணிக்கிறது துயர். </div><div> <div><br /></div><div>"என்றோ விதியாகித் தொடரும்</div><div>நியதிகளில் நசுங்குண்டவாறு </div><div>இரவு நெடு நேரம் வரை </div><div>துயிலை விரட்டி விரட்டிக் காத்திருப்பாள்" </div><div><br /></div><div>என்றவாறு "அம்மா"வை உருவகிக்கும் கவிஞர், எல்லா வீடுகளிலும் விறாந்தையில் தலைக்குக் கை வைத்துப் படுத்தபடி காவலிருக்கும் தாய்மார்களை நினைவுகளில் காட்சிப்படுத்தி மௌனிக்கிறார். ஊரில் விறாந்தைகளில் காவலிருக்கும் தாய்மார்களின் பிரதிநிதிகளை இங்கே, புலம்பெயர் தேசங்களில் குளிர் ஊறும் அறைகளுக்குள்ளே ஆற்றாமையில் புலுங்கியழும் மனதுகளுக்கு சொந்தக்காரர்களாய் காணக் கிடைக்கிறது. தாய்மார்கள் மீது அமைதியாகக் கட்டவிழ்க்கப்படும் வன்முறையை யாரும் ஆத்மார்த்தமாக உணர்ந்து கொண்டதாகத்தான் தெரியவில்லை. </div><div><br /></div><div>"கருங்கல் சிலையொன்று </div><div>அதிகாரம் செய்தபடி அலைகின்ற வீட்டில் </div><div>மோதி மோதியே செத்துவிட்டன </div><div>அவள் வளர்த்த எல்லா மான் குட்டிகளும்.." </div><div><br /></div><div>என்று முடியும் அந்தப் பதிவில் இவ்வாறாகத் தங்கள் மனதுக்குள் பிறப்புவித்து உயிர் கொடுத்து வளர்த்தெடுத்த உணர்வுகளைக் காவு கொடுத்து நடைப்பிணமாய் வாழும் தாய்மார்கள் எனப்படும் பெண்களை நினைத்து எம்மாலும் மௌனம்தான் கொள்ள முடிகிறது. </div><div><br /></div><div>"முறைப்பாடுகளுக்கு அஞ்சிய </div><div>எல்லாக் காவலரண்களும் </div><div>அவளை வெளியே துரத்துகின்றன" </div><div><br /></div><div>என்று "எல்லைக் கோட்டில் தடுக்கப்பட்டவள்" கவிதையில் </div><div><br /></div><div>"இன்று </div><div>கின்னரர் தம் இசையிழந்த </div><div>நிலமெங்கும் </div><div>அவளது ஒப்பாரி அலைகிறது </div><div>அரசரைத் துதி பாடிச் செல்வோரின் </div><div>கால்களின் கீழே </div><div>பேரவலத்தின் ஓசை மாண்டழிகிறது" என்கிறார். </div><div><br /></div><div>ஆமாம்; பேரவலத்தின் ஓசை, தாய்மார்களின், மனைவிமார்களின், குழந்தைகளின், எல்லோரினதும் குரலுந்தான் மாண்டழிந்தது. மாண்டழிகிறது. தங்கள் புத்திரர்களை வெறிகொண்டு தாழப்பறக்கும் பருந்தொன்றுக்குப் பறிகொடுத்துவிட்டு வீதிவீதியாய், தெருத்தெருவாய் மெல்லிய தீற்றாய்ப் பதிந்த அவர்களது காலடித் தடங்கள் தேடி அலையும் தாய்மார்களையும், உறவுகளையும் நினைத்து அதிர்ந்து அடங்குகிறது மனது. </div><div><br /></div><div>"மழை" என்ற கவிதையில் </div><div><br /></div><div>"இறுகி மூடப்பட்ட </div><div>வீட்டினும் வர முடியாது</div><div>நனைந்து கொடிருக்கிறது </div><div>மழை" </div><div><br /></div><div>என்னும் கவிஞர் </div><div><br /></div><div>"அது புகார் கொண்டு </div><div>தன்னைப் போர்த்தியவாறு </div><div>தென்னந் தோப்பினுள் </div><div>வழி தவறியலைகிறது" என்று தொடர்கிறார். </div><div><br /></div><div>யன்னலின் வெளியே தூறிக் கொண்டிருக்கும் மழை பெலத்து மனதுக்குள் துமிக்கிறது ஊர் ஞாபகங்களை அதே கருஞ்சாம்பல் நிறத்துடன் உடல் சுற்றிப் படரும் புகாருடன்;</div><div><br /></div><div>"இன்னொரு வெப்பமழை <span id="5_TRN_a2">பெய்து </span>கொண்டிருந்த </div><div>அவள் முகத்தில் வீழ்ந்த கணத்தில் </div><div>தனது ஆவேசமேல்லாம் ஒடுங்கிப் போய்விட </div><div>பெய்வதை நிறுத்தி </div><div>பெருமூச்செறிந்து போயிற்று </div><div>அந்த மழை"</div><div><br /></div><div>என்றவாறு முடியும் அந்தக் கவிதை தனித்திருக்கும் பெண்ணின் பிரிவின் வலியை, தனிமையின் கனத்தை, வஞ்சிக்கப்பட்ட கோபத்தை உவமித்து அகல்கிறது. மழை மட்டுமா பெருமூச்செறிந்தது? </div><div><br /></div><div>"நொந்த உடலுக்கான <span id="5_TRN_by"><span id="5_TRN_bz"><span id="5_TRN_c0">நஞ்சு</span></span></span>" என்ற கவிதையில் பால்ய பருவத்தைப் பீடித்து நிற்கும் நோயையும், நோயிலிருந்து மீட்கும் பொருட்டு அன்னைமாரால் நிகழ்த்தப்படும் சாகசங்களையும் பகிரும் கவிஞர் நிகழ்காலத்தைக் குறித்து இப்படி சொல்கிறார். </div><div><br /></div><div>"துடைத்தழித்திட முடியாமல் </div><div>நோயின் வழியைத் தாங்கி நிற்கும் முகத்தை </div><div>விசாரிக்க வருவோரிடமிருந்து </div><div>மறைப்பது பற்றிச் சிந்திக்கிறேன்"</div><div><br /></div><div>கனவுகளாலும், எதிர்பார்ப்புக்களாலும் நிரப்பப்பட்ட பால்ய பருவத்தின் நாட்கள் அற்ப ஆயுள் கொண்டவை. அந்த நாட்களில் எம்முடன் பயணிக்கும் உறவுகளை வெறுத்துவிட அல்லது கோபப்பட ஒரு சிறு நூழிலையளவுக்கான காரணம் போதுமாக இருக்கிறது. அவர்களை அன்பு செய்யவும் அதுவுமே போதும். விரைவாக சுழலும் காலத்தின் மாற்றங்கள் ஏற்படுத்திப் போகும் பாதிப்புக்களில் வாழ்க்கையை, உறவுகளைப் புரிந்து கொள்ளவும் அனுபவங்கள் தேவைப்படுகின்றன. இல்லாவிடின் உணர்ந்து கொள்ளும் பக்குவத்தை உலக நடப்புக்கள், சம்பவங்களைப் பார்த்தாவது அறிந்துகொள்ளுதல் இன்றியமையாததாகிறது. இந்தப் பொழுதில் பிறரிடமிருந்து எமது இயலாமையை, வலியை மறைத்துவைக்கும் மனதின் விருப்பத்தை செயலாற்றுவதற்கு உடல் எவ்வாறு ஒத்துழைக்கும் என்ற கேள்வி தொக்கி நிற்கவே </div><div><br /></div><div>"மின் கம்பியில் குந்தியவாறு </div><div>எனதறையையே பார்த்திருந்த வெண் பறவைக்கு </div><div>மரணத்தின் துர்க்குறிகள் கிட்டவில்லை"</div><div><br /></div><div>என்று சொல்லிக் கொள்கிறார் கவிஞர். </div><div><br /></div><div>தற்கொலை குறித்தும், மரணம் குறித்தும் பாடாத கவிஞர்கள் வெகு குறைவு எனலாம். மரணத்தைப் பாடுதலும், அதிலும் சுய மரணத்தைப் பாடு பொருளாகக் கொள்வதற்கான மனம் எந்தப் பொழுதில் வாய்க்கும் என்ற கேள்வி எப்போதாவது மனதில் அலையாய் அடித்து மறைவதுதான். தற்கொலை செய்துகொண்ட (பெண்) கவிஞர்கள் எழுதிவைத்துப் போன பாடல்களின் தாக்கமும், கனத்த மனதும் ஒன்றாய் வாய்க்கையில் பீடிக்கும் அந்த ஒரு பொழுதின் அடர்த்தியை வார்த்தைகளில் கொண்டு வருதல் எத்துனை சாத்தியமாயிருக்கும் என்பதுதான் சூட்சுமமானது. </div><div><br /></div><div>ஃபஹீமாவின் "தற்கொலை" என்ற கவிதையில் </div><div><br /></div><div>"ஊட்டி வளர்க்கப்பட்டிருக்கும் </div><div>விழுமியங்களினூடாக </div><div>பரவிச் சென்றிருக்கும் வேரினை </div><div>விடுவிக்க முடியாதவளாக </div><div>அண்ட சராசரங்களின் எதிரே வீழ்ந்து கிடக்கிறாள்"</div><div><br /></div><div>"நீ கொடுத்த சுமைகளையும் </div><div>அந்த உடலையும் </div><div>உன்னிடமே எறிந்துவிட்டாள்</div><div>இனி எக்காலத்திலும் </div><div>உன்னெதிரே வரப்போவதில்லை </div><div>நீ துன்புறுத்திய </div><div>அவள் ஆத்மா" </div><div><br /></div><div>தொடரும் ஆதிப் பெருந்துயரின் வீச்சுக்குள் மூழ்கிப் போயின தொன்மைமிகு முகங்கள் எனினும் புதியனவற்றையும் தன் சுழல் நாக்குக்கு தின்னக் கொடுத்து நகர்கிறது அது. வழங்கப்பட்ட உடலைத் துறந்து புது உடல் கொண்டு விலகும் பெண்மையின் பிறப்பு எத்துணை சுலபமானதாக அமைந்துவிடும்? மரணித்த தன் உணர்வுகளைக் கனவுகளைக் கொண்டு கட்டிய வாழ்க்கையின் இன்னொரு பாதையை நோக்கிய புதிய அடிகளின் அமைவு அந்த அரூபத்தின் மரணத்தின் பின்னானதாக எந்தவகையில் அவளால் கட்டியெழுப்பக் கூடியதாக இருக்கும், தெரியவில்லை. </div><div><br /></div><div>"நம்மெதிரே வீழ்ந்து கிடக்கிறது</div><div>காலத்தின் பிறிதொரு முகம்" </div><div><br /></div><div>என்று "கடைசிச் சொல்" கவிதையில் பிரிவைக் காட்சிப்படுத்தும் கவிஞர் "கிரீடங்களை அவமதித்தவள்" என்ற இன்னொரு கவிதையில் </div><div><br /></div><div>"ஆதி முதல் போற்றிவரும் </div><div>அந்தக் கிரீடங்களின் மீது </div><div>அவமதிப்பை <span id="5_TRN_2l">விட்டெறிகிறேன்</span>" என்கிறார். </div><div><br /></div><div>அபராதியின் கவிதைகளூடே பயணிக்கும் பெண்ணொருத்தியைக் கண்கூடாகக் காணக்கிடைக்கிறது. அவளின் உணர்வுகளை, பிரிவின் கதையை, நினைவுகளை அவை நிகழ்ந்த நொடிகளின் உயிர்ப்பு மாறாமல் தன் கவிதைகளுக்குள் பொதித்து வைத்திருக்கிறார் கவிஞர். அந்தப் பெண்ணுடன் உரையாடும் பொருட்டு ஒவ்வொரு கவிதையையும் நெருங்கின் அவலச்சுவையை, வலியின் நுனியில் துளிர்த்திருக்கும் புது இரத்தத்துளியை அதன் சூட்டுடன், துவர்ப்புச் சுவை மன நாக்கின் மெல்லிய இடுக்குகளில் பரவ உணரமுடிகிறது. </div><div><br /></div><div>"தம்பிக்கு" என்ற தலைப்பிட்ட கவிதையில் </div><div><br /></div><div>"அபயம் தேடித் தவித்த </div><div>உன் இறுதிச் சொற்கள் </div><div>எனது அறையெங்கும் </div><div>எதிரொலித்தபடியலைகின்ற இந்நாளில் </div><div>நம்பிக்கையும் ஆறுதலும் தரக்கூடிய </div><div>எல்லாச் சொற்களையும் நானிழந்து நிற்கிறேன்" என்கிறார். </div><div><br /></div><div>தங்கள் உறவுகளைப் புலம்பெயர அனுப்பிவிட்டு ஊர் எல்லையில் தொடர்பு வெளிக்கு அப்பால் நிற்கும் ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான உறவுகளைக் காணக்கிடைக்கிறது இந்தக் கவிதையில். மொழி மௌனித்து நிற்கும் அந்தப் பொழுதில் உறைந்து நிற்கும் அன்பின் வெளிப்பாடு யாதாகவிருக்கும், கண்ணீராக, இந்நிலைக்குக் காரணமானவருக்கான சாபமாக, சுயபச்சாபத்தின்/கையாலாகாததனத்தின் பொருட்டுக் கிளம்பும் கதறலாக, அடுத்த கவிதையை நோக்கி நகருவதற்கு சில நொடிகள் தேவைப்படுகிறது.</div><div><br /></div><div>"அபராதி" என்ற தொகுப்பின் தலைப்பைத் தாங்கி வரும் கவிதை இவ்வாறு முடிகிறது. </div><div><br /></div><div>"கொடூரச் சாவுகளைக் </div><div>கண்டு கண்டு அதிர்ந்த மண் </div><div>பலி கொல்லும் கண்களுடன் </div><div>உன்னையே பாத்திருக்கிறது</div><div><br /></div><div>உனது அரசியல் </div><div>சகித்திட முடியாத் துர் வாடையுடன் </div><div>வீதிக்கு வந்துள்ளது </div><div>சுபீட்சம் மிகுந்த தேசத்தின் ஆன்மா</div><div>கைவிடப்பட்ட களர் நிலமொன்றில் </div><div>புதையுண்டு அழுகிறது" </div><div><br /></div><div><br /></div><div>"அபராதி" என்ற கவிதை பேசும் நுண்ணரசியல் வலிமையானதாக இருக்கிறது. அதிகாரத்தைச் சாடும் கவிஞர் நீ செய்தவற்றுக்கான அபராதத்தை நீ கட்டும் வேளை வரும், அதை உன்னைப் பழிவாங்கக் காத்திருக்கும் கண்களின் தீவிரம் உனக்கு உணர்த்தும் என்பதாக உருவகிக்கிறார். "அபராதி" என்னும் தலைப்பு தொகுப்புக்கு எங்கணம் பொருந்துகிறது எனக் கேட்டால், ஏலவே குறிப்பிட்டபடி கவிகளுக்குள் ஊடாடித் திரியும் பெண்ணால் எழுப்பப்படும் கேள்விகள் நினைவின் பதிவுகள் வஞ்சிக்கப்பட்டவளுக்கான அல்லது காயப்படுத்தப்பட்டவளுக்கான குரலில் ஒலிக்கின்றன. ஆக கவிதைகளின் தொனியும் செலுத்தப்படவேண்டிய அபராதத்தின் மையத்தை நோக்கி எறியப்படும் கயிறின் வழியே தம் சுவடுகளைப் பதியவிட்டுக் காத்திருக்கின்றன என்றும் கொள்ளலாம். </div><div><br /></div><div>"அவளை வழியனுப்பிய இடம்," "பேய்களால் தின்னப்பட்டவள்," "அவள் வளர்க்கும் செடிகள்," "நஞ்சூட்டப்பட்ட செடி," "உயிர்வேலி" அடங்கலாக முப்பதொரு கவிதைகளின் தொகுப்பான ஃபஹீமாஜஹானின் தொகுப்பான "அபராதி" வாசிப்பின் முடிவில் வார்த்தைகளின் கனதியை மனதில் பதியவிட்டு தான் கொண்ட கவிதைகளின் பேரால் படைப்பிற்குரிய வெற்றியைப் பெறுகிறது. </div><div><br /></div><div><br /></div><div>குறிப்பு - கனடாவில் 09-10-2011 அன்று இடம்பெற்ற வடலியின் நான்கு நூற்கள் அறிமுகவிழாவில் வாசிக்கப்பட்டது சில திருத்தங்களுடன் மீள் வாசிப்புக்குட்படுத்தப்பட்டு இங்கே பதியப்படுகிறது.</div><div> </div><div> </div></div>மயூ மனோ (Mayoo Mano)http://www.blogger.com/profile/12666644873302635477noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-3634761057150025278.post-28837409641957254452011-09-30T23:38:00.000-04:002012-01-06T22:55:47.040-05:00எழுத்துருக்கள்..<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">இசை அல்லாத பாலைவனத்தில் மணல் காற்றை வேற்று வெளிக்குள் சுழற்றிமிகத் தனிமையான மணல் ஒன்றின் விரக்தி நிலையை தீராத நாட்டியமாக இசையின் மாயத்திற்குள் நகரும் குருடர்களின் தனிமைத் தீவானான் பீத்தோவன். குருடரின் ஜீவரசம் பூசிய ஸ்பரிசவெளி இசைப் பாலையில் தவிக்கிறது.. - "பாழி" கோணங்கி <br />
<div><br />
</div><div>1.</div><div>கண் தெரியும் புள்ளிக்கும் அப்பால் </div><div>விரிந்து செல்கிறது பார்வைப் புலம் </div><div>மோகித்து இடை நடுவில் </div><div>விலகி நெளிகின்றன நினைவுகள் </div><div>ஆழ உள்ளிறங்கி </div><div>அடியில் தேங்குகிறது </div><div>மிதமான சூடு </div><div>காதலின் பெயரால் </div><div>காணிக்கையாக்கப்பட்டிருக்கின்றன</div><div>சில அப்பங்களும் சிவப்பு வைனும் </div><div>பருகி முடித்த பின் </div><div>குழைந்து ஒழுகும் அவளின் </div><div>உடலின் துளிகள் </div><div>இறைந்து கிடக்கின்றன </div><div>வழி நெடுக </div><div><br />
</div><div>2.</div><div>கொளுத்தும் வெயிலின் நடுவே </div><div><div>கைக்கெட்டும் தூரமாய் நகர்கிறது </div><div>நீர் </div></div><div>சுடுமணல் குறுணிகளை</div><div>பெய்து நகர்கிறது </div><div>காற்று </div><div>வெளியாய் தீர்ந்து </div><div>தீயாய் எரிகிறது </div><div>மூச்சு </div><div>மீளவும் ஒருக்கால் </div><div>மிதமாய் ஒடுங்கி </div><div>மெல்ல சுடுகிறது </div><div>உடல் </div><div><br />
</div><div>3.</div><div>அநாசாயமாய் ஒலித்துக் கொண்டும் </div><div>பின் புலத்தில் </div><div>தீராமல் தேய்ந்தும் </div><div>அலைந்து கொண்டிருக்கிறது </div><div>பீத்தோவானின் </div><div>இன்னும் இசைக்கப்படாத சிம்பொனி; </div><div>ஆழ்ந்த இருட்டின் </div><div>மையப்புள்ளியை நோக்கி </div><div>விசையுடன் இயங்குகிறது </div><div>இசை </div><div>பார்வைக்குமப்பால் இயங்கும் </div><div>வடிவமைக்கப்படா உலகின்பால்</div><div>காமுறும் உடலை </div><div>கட்டியிழுத்து தோற்கிறது </div><div>சூடு </div><div>தீரத் தீர தேடித் புகுந்து </div><div>பொங்கி மிதக்கிறது </div><div>புணர்வின் பின் இடுவதற்காய் </div><div>ஏலவே தீர்மானிக்கப்பட்டிருந்த முத்தம்...</div></div>மயூ மனோ (Mayoo Mano)http://www.blogger.com/profile/12666644873302635477noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3634761057150025278.post-29090496351007469272011-09-30T22:41:00.002-04:002011-10-09T07:10:56.598-04:00பனிக்குள் தளிர்த்தல்..!!<div>தேடுதல்கள் நிறைந்திராத காலம் அது</div><div>விதந்தோதல்கள் அற்ற</div><div>உலகந்தான் எனதாயிருந்தது;</div><div>அதிகாலை அறை நிறைக்கும் </div><div>முகிழ்த்த மல்லிகையும் </div><div>கரு புலரிக்குள் சிவந்திருக்கும் </div><div>செவ்வரத்தையும்..</div><div><br /></div><div>நினைவில் மீந்த </div><div>பூச்சியங்களிலிருந்து கடன் வாங்குகிறேன் </div><div>ஒன்றை; பின் இரண்டை;</div><div><br /></div><div>மழை.. </div><div>ஆம்.! நல்ல மழை;</div><div>வெண்ணிறச் சிறகுகளை அசைத்து </div><div>அதோ, மேலெழுகின்றன </div><div>என் கடல் மணலில் </div><div>குந்தியிருந்த பறவைகள்;</div><div><br /></div><div>சிறகுகளைத் தீட்டும் வர்ணத்தை </div><div>வானவில்லும் </div><div>இளைப்பாறலுக்காய் தேடும் கிளையை </div><div>ஒரு மரமும்</div><div><br /></div><div>அவ்வாறே எதிர்பார்க்கிறேன்..</div><div>பனிக்குள் தளிர்க்கப் போகும் </div><div>பதியம் வைத்த செவ்வரத்தையையும்..</div>மயூ மனோ (Mayoo Mano)http://www.blogger.com/profile/12666644873302635477noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3634761057150025278.post-54743469163204609302011-08-30T23:03:00.000-04:002012-06-13T10:45:10.746-04:00"தீராநதி"<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;"></span><br />
<div>
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;">தங்களது பதின்மங்களில், இருபதுகளில் புலம்பெயர்ந்த அல்லது புலத்தில் கழிக்க நேர்ந்த தமிழ் இளைஞர்களது வாழ்க்கையைப் பல காரணிகள் நிர்ணயித்தன, இப்போதும் நிர்ணயிக்கின்றன. தாய் நிலத்தில் தொடர்ந்த பல தாசாப்தங்களை ஏப்பம்விட்ட உள்நாட்டு யுத்தமும், சிறுபான்மையினம் என்கின்ற அடையாளமும் எங்கள் இளைஞர்களை ஊரைவிட்டு, உறவுகளிடமிருந்து பிரித்து, தாய்நாட்டை விட்டுக் கிளப்பி உலகின் ஏழு கண்டங்களிலும் சேர்த்தன. அவ்வாறு புலம்பெயர்ந்த இளைஞர்களுக்கு தம் வாழ்க்கையின் முதல் குறிக்கோள் யாதாக இருக்குமெனின் புலம்பெயர்ந்த நாடு எத்தகையதாக இருப்பினும், என்ன கஷ்டத்தைத் தந்திடினும் எதிர்காலத்தில் உயிர் வாழும் சாத்தியத்தை அந்த நாடு நீட்டிப்பதால் அங்கேயே எப்படியோ வாழ்வை ஒப்பெற்றித் ஊரில் வாழும் தன குடும்பத்தையும் கரை சேர்த்து விட்டுவிட வேண்டுமென்பதாகத்தான் இருக்கும். புலம்பெயர்தலும் புதிய நாட்டில் வாழ ஆரம்பித்தலும் உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் வெகுவான சவாலாக இருக்கும் பட்சத்தில் யாரும் அதற்கு விதிவிலக்கல்ல. குறிப்பாக காலங்காலமாக குடும்பம், பெற்றோர் மகன்/மகள் உறவு, மற்றும் இதர உறவுகள் என குறித்த வட்டத்துக்குள்ளே வளரும் இளைஞர்கள் புலம்பெயர்ந்து தனியே தமது வாழ்க்கையைக் கொண்டு நகர்த்தப் பணிக்கப்ப்படும்போது தடுமாறுவதும் இயல்பாகவே நடந்தேறுகிறது. தனிக் குழுக்களாக இயங்குதல் அல்லது இணைந்து கொள்ளல் என்பது இலகுவாகவும், தனக்குரிய விடுதலையை தேடித் பெறுவதான ஒரு மனப்பாங்கை வழங்கிவிடுவதுமாக இருப்பது மட்டுமின்றி, இந்தியத் திரைப்படங்கள், வரலாற்றுக் கதைகள் சிறுவயதிலிருந்தே மனதில் ஏற்படுத்திப் போகும் நாயக மனப்பாங்கும் இப்படியான குழுக்களின் உருவாக்கத்திற்கும் இயக்கத்திற்கும் அடிப்படையான காரணங்களாக இருக்கின்றன. அப்படியான குழுக்களின் சுழற்சிக்குள் தன்னையறியாமல் சிக்கிக் கொள்ளும் நாயகனது கதையை திரையில் சொல்லி நகர்கிறது "படலைக்குப் படலை" புகழ் மன்மதனின் கதை, வசனம், இயக்கம் மற்றும் நடிப்பில் வெளிவந்திருக்கும் "தீராநதி."</span></div>
<div>
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;"><br />
</span></div>
<div>
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;">புலம்பெயர்ந்த தமிழர்கள் அதிகம் வசிக்கும் பரிஸ் நகரத்திற்குப் புலம்பெயர்ந்து அந்த நாட்டின் குடியுரிமைக்காக விண்ணப்பித்துவிட்டுக் காத்திருக்கும் ஆயிரத்திலொரு இளைஞனாக அறிமுகமாகிறார் கதையின் நாயகன் பாஸ்கர் (படலைக்குப் படலை மன்மதன்). சபேசன் என்றழைக்கப்படும் கால் ஊனமுற்ற நண்பருடன் ஒரு குறித்த வீட்டை நோக்கிப் பயணிக்கும் போது தங்களைத் துரத்தும் இளைஞர்களிடமிருந்து தப்பித்துப் பதுங்கிக் கொள்ளும் இடங்களிலிருந்து நாயகனின் நினைவுகளில் பின்னோக்கி நகர்கின்றன காட்சிகள். அரசாங்கத்தால் அனுப்பப்பட்ட கடிதமொன்றை படிப்பதன் பொருட்டு மொழி தெரியாக் காரணத்தால் தன்னை அணுகும் பாஸ்கருக்கு அதனை வாசித்துச் சொல்வதுடன் கதைக்குள் நுழைகிறார் நாயகி மதனா (வோபிதா). தனது விசா நிராகரிக்கப்பட்டதாகச் சொல்லும் அந்தக் கடிதத்தைக் கண்டு கலங்கியழும் பாஸ்கரை சமாதானப்படுத்தும் மதனா, உதவி தேவைப்படின் தன்னை அணுகுமாறு சொல்லி அகல்கிறார். ஏற்கனவே தனது உறவுகளுக்கு மீள விண்ணப்பித்து விசாவைப் பெற்றுக் கொடுத்த அனுபவத்தில் பாஸ்கருக்கும் உதவ சம்மதிக்கிறார் அவர். தொடரும் உறவு நட்பாகி, பாஸ்கரின் மனதில் காதலாக பரிணமிக்க அதனை வெளிப்படுத்தினால் எங்கே மதனா தன்னை விட்டு விலகுவாரோ என்ற எண்ணத்தில் மௌனமாகிறார் பாஸ்கர். இந்த நிலையில் மதனாவின் உறவுக்கார இளைஞர்களால் மதனாவுடனான பழக்கம் குறித்துக் கண்டிக்கப்படும் பாஸ்கரும், பாஸ்கரினால் அவரது நண்பர்களும் தங்களை அறியாமலேயே குழு மோதல்களுக்குள் இழுத்து விடப்படுகிறார்கள். பாஸ்கரின் நட்புக் குறித்து எச்சரிக்கப்பட்ட போதும் அவருக்கு உதவுவதில் உறுதியாக இருக்கும் மதனா விசாவுக்கான மீள் விண்ணப்பத்தை எழுதிக் கொடுப்பதுடன் இனித் தாமிருவரும் சந்திப்பது நல்லதில்லை எனவும், குடியுரிமை குறித்த முடிவைத் தன்னுடன் பகிர்ந்து கொள்ளுமாறும் சொல்லி பாஸ்கரைப் பிரிகிறார். ஆனால் தன் காதலைத் தெரியப்படுத்தும் நோக்கில் மதனாவை சந்தித்த பாஸ்கரின் காதலை மறுக்கும் மதனா முகாமில் தனக்கு நேர்ந்த அவலத்தைச் சொல்லி தன்னை விட்டுப் போகும்படி சொல்கிறார். இருப்பினும் தன் காதலில் உறுதியாக இருக்கும் பாஸ்கர் தன்னை அழைத்து முடிவைச் சொல்லும்படி பிரிகிறார். </span></div>
<div>
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;">இந்நிலையில் தம்மைத் துரத்தும் இளைஞர் குழுவை தனது பழைய எதிரிகளாக அடையாளங்காணும் சபேசன், தன் காலுக்கு நேர்ந்த கதியையும் அதற்கான தனது பழிவாங்கலையும் பாஸ்கரிடம் சொல்லி உடனடியாக அந்த வீட்டை நோக்கிய பயணத்தைக் கைவிட்டுவதுடன் பாதுகாப்பாகத் திரும்பவேண்டிய காரணங்களையும் சொல்லுகிறார். இருப்பினும் அந்த வீட்டை அடைந்துவிடுவது குறித்த தீவிரத்தில் இருக்கும் பாஸ்கர், சபேசனை வற்புறுத்திக் கெஞ்சி தன்னுடன் அழைத்துச் செல்கிறார். அவர்கள் இருவரும் பாதுகாப்பாக சென்று சேர்ந்தார்களா? யாரைப்பார்க்க சென்றார்கள்? சபேசனால் பழிவாங்கப்பட்ட அந்த இளைஞன் யார்? அவருக்கும் மதனாவுக்கும் என்ன தொடர்பு? பாஸ்கருக்கு என்ன நடந்தது என்பதுதான் மீதிக் கதை. </span></div>
<div>
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;"><br />
</span></div>
<div>
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;">குடியுரிமைக்காக விண்ணப்பித்து விட்டு, எப்போதாவது கிடைக்கும் வேலைகளை செய்து கொண்டு மாமாவால் ஒழுங்கு செய்யப்பட்ட வீட்டில் மச்சன்மார்களுடனும், நண்பனுடனும் தங்கியிருக்கும் புலம்பெயர்ந்த சராசரி தமிழ் இளைஞனாக அச்சொட்டாகப் பொருந்தியிருக்கிறார் பாஸ்கர். கடிதம் சொல்லும் செய்தியைக் கேட்டு நிலைகுலைவதாகட்டும், மதனாவுக்கு நேர்ந்த அவலத்தைக் கேட்டு கலங்குவதாகட்டும், உயிருக்குப் பயந்து ஒடுவதாகட்டும் தன் பாத்திரத்தின் கனதி உணர்ந்து கச்சிதமாக நடித்திருக்கிறார் பாஸ்கர். நண்பனின் சொல்லைக் கேட்டு அவனது உடைத்தெரிவுடன் மதனாவை சந்திக்க செல்வதும், அங்கே மதனாவின் கேலியில் நண்பனை மனதுக்குள் திட்டுவதும் நயம். </span></div>
<div>
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;">"இஞ்சே, நான் இப்படிக் கதைக்கிறன் எண்டு என்னைத் தப்பா நினைக்க வேண்டாம், என்ன?" என்று பாஸ்கரை ஆரம்பத்தில் எச்சரிக்கும் பேச்சில், பாத்திர வெளிப்பாட்டில் மதனா சகோதரியாக, நண்பியாக, தினமும் சந்திக்கும் சாதாரண பெண்ணாக மனதில் பதிகிறார். </span></div>
<div>
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;">ஆரம்பத்தில் மாமாவாகத் தோன்றும் அருணகிரி (லண்டன் அங்கிள் - படலைக்குப் படலை) அவர்களும், மதனாவின் மாமாவாக வரும் சிறி (அங்கிள் - படலைக்குப் படலை) அவர்களும் தங்களுக்கேயுரிய தனித்துவத்துடன் திரையில் தோன்றுகிறார்கள். மதனாவின் தாத்தாவாக வரும் ரகுநாதன் அவர்களது பங்கும் சிறப்பாக அமையப்பெற்றிருக்கிறது. பாஸ்கரை உருவேற்றி அனுப்புவதாகட்டும், தனது ஆடையைப் போடச் சொல்லி வற்புறுத்துவதாகட்டும், மதனாவின் கதையைக் கேட்டுத் தன் அக்காவின் நிலையைச் சொல்லிக் கலங்குவதாகட்டும் தனது பாத்திரத்தை நன்றாக உள்வாங்கி நடித்திருக்கிறார் நண்பராக வரும் தயாளன். பாஸ்கரை மிரட்டுவதும், அவரைத் துரத்துவதுமாய் வரும் இளைஞர்கள் முதற்கொண்டு அனைவரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக வழங்கியிருக்கிறார்கள். அந்தவகையில் இயக்குனரின் பாத்திரப்படைப்பு மற்றும் தெரிவு பாராட்டத்தக்கது. </span></div>
<div>
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;"><br />
</span></div>
<div>
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;">கஜியின் இசையில், கவிநாத்தின் கமெராவில் விரைவாக திரையில் நகரும் "தீராநதி" சங்கரினால் எடிட் செய்யப்பட்டிருக்கிறது. சுஜித் ஜியின் உருவாக்கத்தில் ஒலிக்கும் "அடிதடி வெட்டுக் குத்து" பாடலும், பாடல் காட்சியமைப்பும் அருமை. பிரணவனின் வரிகளில் ஒலிக்கும் பாடல் தாளம்போட வைக்கிறது. பாடல் காட்சி இயல்பாக, அழகாகத் திரையில் தோன்றுகிறது. ஊரில் செய்த செயல்களை வீர தீர செயல்களாகப் பேசி, அங்கிருந்த சாதியின் தீவிரத்தை அப்படியே புலம்பெயர்ந்த தேசத்திலும் தங்கள் குழந்தைகளிடம் விதைக்கும் சிறி அங்கிளின் பாத்திரப் படைப்பு எம் சமூகத்தின் இன்றைய நிலையை அப்பட்டமாகக் காட்சிப்படுத்துகிறது. என்னதான் அவலங்களைத் தாண்டி வந்தாலும், தொடரும் சாதித் திமிரும் அதனைத் தம் எதிர்கால சந்ததியும் பின்பற்ற வேண்டுமென்ற நோக்கத்தில் இயங்குவதும் கவலைக்குரிய விடயம். "இப்பெல்லாம் யார் சாதி பார்க்கினம்" என்று சொல்லிக் கொண்டே தங்கள் உறவுகளைத் தாங்களே இகழ்வதும், தாக்கிக் கொள்வதும் இன்றும் எங்கும் தொடர்வதைக் காணமுடிகிறது. மாற்றங்கள் சில நிகழ்ந்தாலும் குறிப்பிடத்தக்களவில் நடந்தேறாமை எம்மை நினைத்து நாமே வெட்கித்துக் கொள்ளும் நிலையிலேயே இருக்கிறது. போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட பெண்களின் ஒரு பிரதிநிதியாக வரும் மதனாவின் பாத்திரம் சிறப்பு. அதிலும் வாய்ப்பேச்சில் மன்னர்களான சில மனிதர்கள் இராணுவத்தால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பெண்களை எந்தக் கண் கொண்டு கணிக்கின்றனர் என்பதை காட்சிப்படுத்தியமைக்கு இயக்குனரைப் பாராட்டத்தான் வேண்டும். மதனாவின் நிலையறிந்தும் பின்வாங்காமல், தியாக மனப்பாங்கு இல்லாமல் அவளின் மேல் கொண்ட காதலின் பெயரால் அவளையே மணக்கப் போவதாக சொல்லும் பாஸ்கரின் வார்த்தைகள் மற்றவர்களுக்கும் உதாரணமாக அமையவேண்டும் எனபதே எமது விருப்பமும். ஊடகங்கள் தமது தர்மத்துக்கு மீறி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண்களின் படங்களை அவர்களது மன உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் வெளியிடுவதும் அதனால் வரும் பாதிப்புக்களை பெண்களும் அவர்களது குடும்பத்தினரும் அனுபவிப்பதும் சமகாலத்தில் நம் முன்னே நடந்து கொண்டிருப்பது கண்கூடு. அதனை நண்பனினூடு வெளிப்படுத்திய லாவகம் சிறப்பு. மதனாவின் தாத்தா என்னும் பாத்திர அமைப்பு மதனா என்ற பெண்ணின் மனதை, அவளது உணர்வுகளைப் புரிந்து கொள்வதுடன் அவளுக்கு உரிய வழியில் உதவுவதாக அமைக்கப்பட்டிருப்பது ஆறுதலாக அமைந்திருக்கிறது. முதியவர்களாக இருந்து குடும்பத்தை வழிநடத்த வேண்டியவர்கள் மாற்றங்களை வரவேற்று அவற்றிலிருக்கும் தர்மத்தின்படி மற்றவர்களின் உணர்வுகளை மதித்து பிற உறவுகளை அழைத்து செல்ல வேண்டிய கட்டாயத்தின், கடமையின் வெளிப்பாட்டை அந்தப் படைப்பின் மூலம் காட்சிப்படுத்துகிறார் இயக்குனர். </span></div>
<div>
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;"><br />
</span></div>
<div>
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;">சமீபத்தில் எம்மவர்களால், எம்மவர்களின் முயற்சியுடன் மற்றும் பங்களிப்புடன் வெளிவந்திருக்கும் முழு நீளத் திரைப்படமாய் "தீராநதி" படத்தைப் பார்க்கும்போது வித்தியாசமான சினிமா அனுபவம் கிடைப்பது மிகுந்த மகிழ்ச்சி. எங்களது மொழி வழக்கில் உருவான படைப்பென்பது எமக்கும் திரைக்கும் இடையிலான நெருக்கத்தை அதிகரித்து செல்கிறது என்றவகையிலும் படைப்புக்களினை மெருகேற்ற வேண்டிய தேவையிருப்பதும் இயக்குனரிடம் சில விசயங்களை எதிர்பார்க்க வைக்கின்றது. உதாரணமாக நாயகன் மற்றும் நாயகனின் மொழி உபயோகம். சந்திக்கும் போதும், பிரியும் போதும் பிரெஞ்ச் மொழியில் வணக்கம், மற்றும் நன்றி சொல்வது சில இடங்களில் தமிழ் நன்றியாகவும், ஆங்கில நன்றியாகவும் ஒலிப்பது நெருடுகிறது. புலம்பெயர்ந்த மொழியைத் தமிழில் கலந்து உபயோகிப்பது இயல்பாகிவிட்டது என்ற போதும் தாம் ஆரம்பத்தில் பயன்படுத்திய ஒரு மொழியிலேயே தொடர்ந்திருப்பின் அந்த குறிப்பிட்ட வெகு சில காட்சிகள் புலம்பெயர்ந்த நாட்டின் இயல்புடன் வந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றும் தோழனுடன் பயணிக்கும் நாயகன் இடைவழியில் பதுங்கும் இடங்களிலிருந்து நினைவுகளில் நகரும் காட்சிகளில் பின்னணியில் ஒலிக்கும் நாயகனின் குரல் சில இடங்களில் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்ற உணர்வு எழாமல் இல்லை. நாயகனது சுய வர்ணனை அல்லது நினைவுகளின் மேலான பயணிப்பு எனபது அவரது சார்பில் குரலில் கேட்க நேரிடும்போது பார்வையாளர்களாகிய எங்களுக்கும் திரையில் நகரும் காட்சிகளுக்கும் இடையிலான மௌன உறவை ஊடுருவிப் பயணிப்பதான உணர்வு தோன்றி மறைகிறது. மேலும், பேசுவதற்கு காட்சிப்படுத்துவதற்கு என விரிவான தளங்கள் புலம்பெயர்ந்த எங்கள் முன் பரந்து கிடக்கும் போது குழுக்களின் மோதல், பழிவாங்கல் என்று குறித்த ஒரே தளத்துக்குள்ளே நிற்பது கவனிக்க வேண்டிய ஒரு விடயமாகும். எதிர்காலத்தில் எம்மவர்களின் படைப்புக்கள் இன்னும் விரிந்து செல்லவேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமன்றி, எம்மவர்களை எமக்கான சினிமா என்ற பார்வையை நோக்கி விரைவாக பயனிக்கவைக்கும் என்பதும் முக்கியமானதாகும். </span></div>
<div>
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;"><br />
</span></div>
<div>
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;">இந்தியத் திரைப்படங்களையே பார்த்துப் பழகிப்போன எமக்கு வித்தியாசமானதாகவும், அத்தியாவசியமானதாகவும் இருக்கும் எம்மவர்களின் படைப்புக்கள் திரையிடப்படுவது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய விடயமாகும். என்னதான் இருப்பினும் குறுகிய காலப்பகுதிஎனினும், விளம்பரப்படுத்தப்பட்டபோதும் எம்மவர்கள், எம்மவர்களின் முயற்சிக்கு உரிய பதிலைத் தமது வரவின் மூலம் உறுதிப்படுத்தாத தமிழ் சமூகத்தின் மனப்பாங்கு தொடர்வது கவலையளிப்பதாகவே உள்ளது. தன் நாட்டிலேயே பாரிய வசூலைக் குவித்துவிடும் அல்லது பெயரை சம்பாதித்துவிடும் இந்தியத் திரைப்படங்களுக்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் கனடா வாழ் மக்கள், பல சிரமங்களுக்கு மத்தியில் துளிர் விடும் எங்களுக்குத் தேவையான சினிமாத் துறையை, படைப்புக்களை வளர்த்து விடுவதில் ஆர்வங்காட்டாமை வருத்தமளிக்கிறது என்றேதான் சொல்லவேண்டும். எங்கள் கலைஞர்களைப் படைப்பாளிகளை வளர்த்துவிடும் கடப்பாடும், தேவையும் இருக்கும் இந்த நேரத்தில் நாங்களும் எங்கள் பங்களிப்பை வழங்குவது கட்டாயமாகும். தேவையற்ற காட்சியமைப்புக்கள், நேர விரயங்களின்றி "தீராநதி" என்ற படைப்பை உருவாக்கி வழங்கியிருக்கும் இயக்குனர் மற்றும் நடிகர் பாஸ்கர் அவர்களை வாழ்த்துவதுடன் தொடரப்போகும் எம்மவர்களது படைப்புக்களை வரவேற்று உரிய ஊக்குவிப்பை வழங்குவதுடன் எங்கள் பங்களிப்பையும் பதிவு செய்வோம். </span><br />
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;"><br />
</span><br />
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;">நன்றி - "வீடு" பத்திரிகை.</span></div>
</div>மயூ மனோ (Mayoo Mano)http://www.blogger.com/profile/12666644873302635477noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3634761057150025278.post-32024513928167249072011-08-26T23:36:00.001-04:002011-10-09T07:07:50.944-04:00"மூன்றாம் சிலுவை" - உமா வரதராஜன்வாசிப்புக்களின் வழிநடத்துதல்கள் பிரபஞ்சத்தின் மூலை முடுக்குகளை மடிப்பு விலக்கி அதன் இறுக்குகள் தோறும் வாசிப்பவரைத் தாமதிக்க வைத்துப் பின் வாசிப்பவருக்கென்ற ஒரு உலகைப் படைக்க செய்து அதற்குள் உறைந்துகொண்டே வெளியில் உற்று நோக்கும் மாய நிகழ்வை தொடர்ச்சியாக நிகழ்த்துகின்றன. எழுத்தின் வழி படைக்கப்பட்ட உலகத்துக்குள்ளே ஒன்றித்துப் பயணித்து வெளிவரும் வாசகர் அந்த வாசிப்பின் முடிவிலே ஏதோ ஒரு உலகத்துக்கு சொந்தமாகிவிடுகிறார். அந்த உலகம் எழுத்தாளரின் படைப்பு விரித்துப் போகும் மாயக் கரங்களுக்குள் பொதிந்து அவ்வவ்ப்போது விலகி நகர்வதும், மீள சேர்வதுமாய் தோற்றம் காட்டுவதையும் செய்கிறது. எந்தவொரு வாசிப்பும் வாசகர் சார்ந்த ஒரு உலகத்தையும் படைப்பாளி சார்ந்த ஒரு உலகத்தையும் அவரவர் அனுபவங்கள், நியாயங்கள் சார்ந்த தளத்துடன் உருவாக்கித் தருகிறது.<div>
<br /></div><div>உமா வரதராஜன் அவர்களினால் எழுதப்பட்டிருக்கும் "மூன்றாம் சிலுவை" எனும் நாவல் உருவாக்கிவிட்டு நகரும் வாசகருக்கான உலகமென்பது, உலக நியதி என்றழைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சில பலவற்றை தளர்த்தி நியாயம் கேட்கும் பாவனையுடன் ஒலிக்கும் சில கேள்விகளைக் கொண்டு அமையப் பெற்றிருக்கிறது. உமாவின் முதலாவது நாவலாக இது அமைந்தாலும் அவரது எழுத்தின் செறிவிற்கு சான்று சொல்லிப் போகும் "மூன்றாம் சிலுவை" நின்று பேசும் தளம் "காதல்". நாவலுக்கான முன்னுரையில் எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் குறிப்பிட்டு சொல்வது போல் ஒரு நாவலை ஒரு குறித்த பிரிவுக்குள் அடக்கிவிடுதல் விமர்சன சௌகரியம் அன்றி வேறல்லவே. ஆனால் "மூன்றாம் சிலுவை" பேசித் தீர்க்கும் இல்லை பேசித் தீர்ப்பதாக படைப்பாளியால் சொல்லப்படும் தளம் காதல் சார்ந்தே ஒலிக்கிறது. காதலின் அடிநாதமாகிய நம்பிக்கையின் மையத்தை நோக்கி கேள்வி எழுப்பும் எழுத்தாளர் அதன் பின்னான விளைவுகளின் பேரால் தண்டனையை வாசிப்பவர் கரங்களில் விட்டு செல்கிறார்.</div><div>
<br /></div><div>வயதில் தன்னைவிட இருபத்தியிரண்டு வருடங்கள் குறைந்தவளாகிய ஜூலியின் பால் ஏற்படும் காதலில் சாய்ந்து விழும் ராகவன் ஜூலியின் பிரிவால் மரணத்தின் விளிம்புவரை சென்று வருவதாக விரிகிறது கதைப் புலம். அலுவலகமொன்றின் உயரதிகாரியான ராகவனிடம் வேலை கேட்டு வரும் அபலைப் பெண்ணான ஜூலி வெகு சீக்கிரமே அவருடன் காதல் வயப்பட்டுவிடுகிறாள். எட்டு வருட தொடர்பின் பின் அவள் இன்னொரு திருமணத்துக்கு தயாராகி ராகவனை விட்டுப் பிரிந்து போகிறாள். இந்தக் காதலின் நம்பிக்கை துரோகிக்கப்பட தனித்து வீழ்கிறார் ராகவன். அவர் ஜூலியின் திட்டமிட்ட பிரிவை வாசகரிடம் முன்வைத்து தனக்கான நியாயத்தையும், அவளுக்கான தண்டனையையும் வாசகரின் தீர்மானத்துக்கே விட்டகல்கிறார்.</div><div>
<br /></div><div>ஏற்கனவே இருமுறை திருமண பந்தத்தில் இணைந்து இரண்டுமே தோல்வி என்று குறிப்பிடும் ராகவன் மூன்றாவதாத் தொடுக்கும் உறவே ஜூலியின் காதல். ராகவனின் காதல் அவரது ஐம்பதுகளில் ஏற்பட்டிருப்பினும் காதலுக்கு வயது ஒன்றும் தடையில்லை என்ற வகையில் ஏற்புடையதாகிறது. ஓடிப்போன தந்தை, வெளிநாட்டில் தொழில் செய்யப் புறப்பட்டு நொந்து வந்திருக்கும் தாய், திருமண வயதில் தமக்கை, மனநிலை சரியில்லா பாட்டி என்று வாழ்க்கையின் கோரப்பக்கங்களை புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்த ஜூலி வேலை தேடி ராகவனிடம் செல்லும் கையுடன் அவரது அன்பில் வீழ்ந்துவிடுகிறாள். சில வருட உறவின் பின் ஜூலி தனக்கென்ற வாழ்க்கையைத் தீர்மானிக்கும் நோக்கில் இன்னொருவனை வெளிநாட்டில் மணக்க உத்தேசித்து அதன் பொருட்டு ராகவனை விலக்கி உறவில் இருந்து வெளியேறுகிறாள்.</div><div>
<br /></div><div>இந்த நிலையில், இந்த நாவல் முன்வைக்கும் சில கேள்விகள் நாவலை வாசித்துக் கொண்டு முன்னேறும் போது தோன்றாமல் இல்லை. காதல் எந்தவொரு வகைக்குள்ளும் அடங்காத போது எதனையும் விமர்சனத்தின் முன் வைப்பது நியாயமாகாது. ஆனால் அடிப்படையான கேள்விகளை, வாசகரின் பார்வையை முன்வைப்பதில் தவறில்லை என்ற அடிப்படையில் ஜூலி செய்தது தவறென்னும் பட்சத்தில் இந்த உறவின் நீட்சியினிடையில் ஜூலி ராகவனிடம் "என்னை என்ன செய்யப் போகிறீர்கள்?" என்றும் கேட்கிறாள். இந்த நாவலில் மூன்று பெண்களை காணமுடிகிறது. ராகவனின் முதல் இரண்டு மனைவிமார் கதையோட்டத்தில் பெரிதாக காட்சிப்படுத்தப்படாவிட்டாலும் அவர்களுடன் சேர்த்து ஜூலியுடன் மூன்று பெண்களின் வாழ்க்கையைப் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. ஜூலி ராகவனுக்கு செய்தது துரோகமாகப் பார்க்கப்படும் பட்சத்தில் கணவன் என்ற உறவில் இருந்து கொண்டே ராகவன் ஜூலியுடன் கொண்ட உறவு அவரது முதல் மனைவிமார்களால் என்னவகையாகப் பார்க்கப்படும்? ராகவனின் காதல் வயது தாண்டியதாகவும், காலந் தாண்டியதாகவும் காட்சிப்படுத்தப்படும் போது அவர்களது காதலிற்கு என்னவாகிற்று? தன்னை மறுத்தோடும் ஜூலியை சபிக்கும் ராகவனிடம் அவரது மனைவிமாரை, குழந்தைகளை மறுத்தோடும் ராகவனுக்கான சாபங்கள், வேண்டுதல்கள் எங்கே முறையிடப்படும்?</div><div>
<br /></div><div>தன்னை மறுத்து விலகிப்போகும் ஜூலியின் குணத்தை, நடத்தையை விமர்சிக்கும் ராகவன் தனது மனைவிகள் பேரில் எத்தகைய எதிர்பார்ப்புக்களை முன்வைத்திருந்தார் என்பது அவரது சில வரிகளில் காணக்கிடைக்கிறது. "என்னைச் சுற்றி இருந்தவர்கள் எல்லோரும் சந்தோசமாக இருந்தார்கள். அவர்கள் கோவிலுக்கு சென்றார்கள்.அவர்கள் கோயில் விழாக்களைத் தவறவிடுவதில்லை. சினிமாக்களை நாடுவார்கள், சுற்றுலாக்கள் போனார்கள். நகைக்கடைகள், புடைவைக் கடைகள் என அலுப்படையாமல் அலைந்தார்கள்.." என்று நீளும் வரிகளில் அவர்களின் உலகத்தை கற்பனை செய்து கொள்ள முடிகிறது. அவர்களுக்கென்ற உலகு அதுதான் என்பதையும் அவர்கள் அதில் சந்தோசித்து உறைகிறார்கள் என்பதையும் தீர்மானித்து கொள்ளும் ராகவன் தனக்கான தேவை தன்னை மட்டுமாய் நேசிக்கக் கூடிய காதலி என்று நகர்ந்து செல்கிறார். ஆனால் ஜூலியை நோக்கி அவள் தன்னை வஞ்சித்து சென்று விட்டாள் என்று விரல்களை நீட்டும் ராகவனை நோக்கி அவரது மிகுதி நான்கு விரல்கள் சுட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. "இதுவரை இந்தக் கிழவன் இனித்தானா" என்று ஜூலியின் கணவனிடம் கோபிக்கும் ராகவனால் ஜூலியின் பிரிவை எதனால் தாங்க முடியவில்லை? தன் மனைவிமார்களுடனான வாழ்க்கை தோல்வியில் முடிந்ததால் ஜூலியை மூன்றாவதாக ஏற்க மறுக்கும் ராகவனால் எதன் பொருட்டு ராகவனுடனான வாழ்வு தோற்றதாக எண்ணி பிரியும் ஜூலியை விலகிச் செல்ல அனுமதிக்க முடியவில்லை? இவ்வளவு நடந்த பின்னும் ராகவனது இதய சத்திரகிச்சையின் போது வைத்தியசாலையில் இணைந்து கொள்ளும் முதல் மனைவியைப் பிரிந்து நகர்வதும், பின் இரண்டாவது மனைவியிடம் இருந்து பிரிந்து ஜூலியை நோக்கி நகர்வதும் இலகுவாக இருந்தபோது, அவர்களுடனான வாழ்க்கை தோல்வியடைந்துவிட்டது என்று குறிப்பிடும் ராகவன் ஜூலியின் நகர்வை ஏற்றுக் கொள்ளாமைக்கு காதல் என்ற ஒன்றை மட்டுமா காரணமாகக் கூற முடியும்? இதனை ராகவனின் மனைவிமார்களில் ஒருவர் செய்ய எண்ணியிருக்கும் பட்சத்தில் ராகவன் என்னவகையான எதிர்வினையை ஆற்றியிருப்பார்? ஆக, ஜூலியின் பிரிவைத் தாங்க முடியாமல் போனதற்கு ஒரு பெண் தன்னை ஏமாற்றி காதல் செய்து கலவி முடித்து, பண உதவி, ஆளுதவி பெற்று சீவித்து விட்டு தூக்கிஎறிந்து விட்டுப் போனாளே என்ற ஆண் மனோபாவமும் காரணமாக இருக்கலாம்.</div><div>
<br /></div><div>நாவலின் இடை நடுவே வந்து வந்து போகும் ஜூலியின் அக்காமாரும் சரி, கதையில் சிறு முக்கியத்துவத்தைப் பெற்றுவிடும் ஜூலியின் அம்மாவும் சரி அவரவர் அனுபவங்களின்படி முன் அனுமானிக்கக் கூடிய முடிவொன்றை நாவலுக்கென்று தந்துவிடுகிறார்கள். ஏலவே காதலித்து அவனை விட்டு வேறு ஒருவனைத் திருமணம் செய்து கொள்ளும் அக்காவாகட்டும், கணவனைப் பிரிந்து வெளிநாட்டில் தொழில் செய்யப் புறப்பட்டு அங்கேயே வேறு ஒருவனுடன் வாழ்ந்த பின் தான் தாய் நாட்டுக்கு திரும்பி வரும் தாயாகட்டும் ஜூலி இப்படித்தான் என்ற இயல்புகளை தாங்கள் அறியாமலேயே ஜூலிக்கு வழங்கிவிட்டு நகர்கிறார்கள். இதில் தன் காதலை முழுவதுமாக ஏற்றுக் கொள்ளும் ஜூலியுடனான தொடர்பை சமூகத்துக்கு வெளிப்படுத்த தயங்கும் ராகவன் இன்றும் சமூகத்தில் உறுதியாகக் கட்டி எழுப்பப் பட்டுக் கொண்டிருக்கும் ஆண் என்னவும் செய்யலாம் பெண்ணால் முடியாது என்ற வகையான குணாதிசயங்களை சொல்ல முற்படுகிறாரா என்ற சந்தேகமும் எழாமலில்லை.</div><div>
<br /></div><div>எழுத்தாளர் தமிழ் நதியினால் எழுதப்பட்ட "கானல் வரி" குறு நாவல் பேசி நகரும் தளமும் சமூகத்தின் கட்டுப்பாடுகளை விலத்தி ஓட நினைக்கும் மனிதர்களைப் பற்றியதே. ஆனால் அந்த குறு நாவலில் மனைவிக்காக குழந்தைக்காக தனது திருமணத்தின் பின் ஏற்பட்ட காதலின் காதலியை விலத்தி ஓடும் ஒரு "புனிதனின்" கதை பேசப்பட்டிருக்கிறது. கதையின் நீரோட்டத்தில் பெண் நவீன மாதவியாக காட்டப்பட்டிருக்கிறாள். குடும்பத்தை கொண்டிழுக்கும் தேவையும் கடப்பாடும் இருக்கும் பட்சத்தில் மனிதர்களை பிறழ்ந்துவிட வைக்கும் அந்த நொடியை என்ன பெயர் கொண்டு அழைக்க முடியும் என்ற கேள்வியும் எழாமல் இல்லை. காதல் என்ற பெயர் கொண்டு இந்த உறவுகள் கட்டமைக்கப்படும் என்னும் பட்சத்தில் உறவை விட்டு நீங்குதலும், நீங்குவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குதலும் சில வேளைகளில் அவசியமாகிறது. அப்படியான சந்தர்ப்பங்களில் இத்தகைய காதலின் முடிவு பிரிதல்தானா, சாபங்களை ஏற்றுக் கொள்ளுதல் தானா என்றால் இல்லை என்றும் முடிக்கலாம். பிணக்குகளில் முறியும் பந்தங்களும், அந்த வகையான பந்தங்களில் இருந்து முறையாகப் பிரிந்து வேறு துணையுடன் இணையும் மனிதர்களும் இந்த சமூகத்தில் இருக்கிறார்கள். உறுதியான முடிவை எடுத்துவிட முடியா புனிதத்தினதும், தூய்மையினதும் கட்டமைப்புக்களும் அளவுகோல்களும் அவரவர் சௌகரியத்துக்கு ஏற்ப வெவேறு நிலையைப் பெற்று விடுகின்றன. எப்போது பிறரால் அந்த வளையங்கள் தளர்த்தப்பட முயற்சிக்கப்படுகின்றனவோ அப்போது அவர்களுக்கு சில பட்டங்களை வழங்கிவிடவும், அவர்கள் மேல் காறி உமிழ்ந்துவிடவும் இந்த சமுதாயம் தயாராகவே இருக்கிறது. மறுத்தோடிகளின் பக்க நியாயங்கள் எப்போதும் வாதத்துக்கு உகந்தனவாக காலங்காலமாக புறக்கணிக்கப்பட்டு நகர்ந்துவிடப்படுவனவாக காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.</div><div>
<br /></div><div>"மூன்றாம் சிலுவை" நாவலை ராகவனின் சார்பில் நின்று அவரது உலகின் கண்களோடு பார்க்கையில் வயதை மீறித் தோன்றும் காதலின்பால் அவர் கொண்ட நம்பிக்கைகளும் கனவுகளும் மிகத் தந்திரமாக ஜூலியினால் உடைக்கப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்ட ஏமாற்றமும், சினமும் நாவலினூடு வெளிப்படுகிறது என்று சொல்லலாம். நாவலின் தொடக்கத்தில் ராகவனால் எழுதப்பட்டிருக்கும் கவிதைகளை நோக்கின் காதலில் தோற்றுப் போனதன் வலியும், துரோகம் இழைக்கப்பட்டதா என நம்ப மறுக்கும் மனதின் உணர்வும் நிரம்பிக் கிடக்கின்றன. மௌனமாகக் கடக்க முயற்சிக்கும் நாளின் ஒவ்வொரு நொடியும் காதல் நினைவுகளை ஞாபககத்தில் நிறுத்தி கொலை வாள் கொண்டு துரத்துகின்றன.</div><div>
<br /></div><div>சரிகளும் பிழைகளும் அவரவருக்கென மாறுதல்கள் கொள்கின்றன. மறுத்ததோடுதலும் அவை பொருட்டு தொடர்கின்றன. உலகில் காதல் என்பது காதல்தான் என்றவாறு அமைகையில் உமா வரதராஜன் அவர்களும் தன்னிலையில் நின்று எழுதியிருக்கும் நாவலும் காதலின் பிரிவின், துரோகத்தின் வலியை பேசுகிறது. துரோகங்கள் யாருக்கு இழைக்கப்பட்டிருப்பினும் தாங்கோனாதவைதான். அந்தத் துரோகம் இந்த நாவலின் வழி பழிவாங்கப்படும் என்றிருப்பின் அதுவும் இன்னொன்றாய் வகையாகிறது. அவரவர் நியாயங்களின்பால் விரியும் படைப்பின் உலகம் வாசிப்பவரை தீர்மானிக்கச் சொல்லி மெல்ல நகர்கிறது இன்னொன்றின் பொருட்டு. முன்னுரையில் எழுத்தாளர் பிரபஞ்சன் சொன்னது போல் இதுவும் "கோடிப்பக்கங்களில் ஒரு புதிய பக்கம்." அவ்வளவுதான்..</div>மயூ மனோ (Mayoo Mano)http://www.blogger.com/profile/12666644873302635477noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3634761057150025278.post-70218459772037807292011-08-09T00:03:00.001-04:002011-10-09T07:10:36.772-04:00செய்திகள்தான் காண்..!!சிறுமிகளின் கருப்பைகள் நிறைந்த<div>புதுமைப்படுத்தப்பட்ட பால்ய பருவத்தை</div><div>அறிமுகஞ் செய்து நகர்கின்றது</div><div>இந்த வாழ்வு</div><div>கூடவே</div><div>தந்தையின் குறி பயணித்த</div><div>மகள்களின் யோனிகளையும்</div><div>பிஞ்சுகளை சுவைத்த</div><div>மாமன்மார்களையும்</div><div>உறவுகளைத் திரித்தெழுதும்</div><div>வன்புணர்வுகளையும்</div><div>
<br /></div><div>செய்திகளாகிவிட்டவற்றுக்குள்</div><div>நிறைந்து கிடக்கும்</div><div>ஒரு மனைவியை</div><div>ஒரு காதலியை</div><div>ஒரு தோழியை</div><div>ஒரு கர்ப்பிணியை</div><div>ஒரு மகளை</div><div>ஒரு சிசுவை</div><div>ஒரு "வயோதிகையை"</div><div>சான்று காட்டுகிறது</div><div>விலங்கில் இருந்தான</div><div>மனிதனின் கூர்ப்பு</div><div>
<br /></div><div>எப்படியிருந்தும் அச்சேறி விடுகிறது</div><div>இன்னொரு செய்தி</div><div>
<br /></div><div>13-06-2007</div>மயூ மனோ (Mayoo Mano)http://www.blogger.com/profile/12666644873302635477noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3634761057150025278.post-71298049264118162082011-07-22T23:35:00.004-04:002011-10-09T07:10:27.373-04:00ஒரே ஒரு தோழிக்கு..!!<div>புல்வெட்டிகளின் இடுக்குகளூடு</div>பச்சையம் சாறு மணக்க மணக்க <div>புழுங்கித் தவிக்கிறது கோடை </div><div>பூ உதிர்க்கும் மரங்களினடியில் </div><div>மரக்கதிரைகளிலும் மேசைகளிலும் </div><div>உதிர்ந்து கிடக்கின்றன </div><div>கடைசியாய் நாம் பேசிக் கொண்ட வார்த்தைகள் </div><div>சிகரட் புகை; பிடிக்குமா பிடிக்காதா?</div><div>உன்னவன் பிடிப்பானா பிடிக்க மாட்டானா?</div><div>அபத்தமாய் நீண்டது பேச்சு </div><div>தெருவைக் கடந்து பறித்த ரோஜாவும் </div><div>பெயரறியாப் பூவும் பொறுக்கி </div><div>பூச்சொண்டோன்றை தந்தேன் </div><div>என் பேரால் </div><div>தண்ணீர் தெளித்து வைத்திருந்தாய் </div><div>நாம் மீண்டபின் </div><div>உன் நடுங்கும் கைகளால் தடவி </div><div>தவறி உடைத்த பின்னும் </div><div>விம்பங்களாய் சிதறிக் கிடக்கிறது கண்ணாடி </div><div>பதறி அள்ளிய என் கைகளுக்கு </div><div>உன் கண்ணொன்றே கொள்ளக் கிடைத்தது;</div><div>அதைச் சொல்லி முடிக்க முன் </div><div>அவசரப்பட்டு </div><div>அந்தப் பூவுக்கு </div><div>என் பெயரையா வைத்து மீண்டாய்? </div><div><br /></div><div>- அவளுக்கே..!!</div>மயூ மனோ (Mayoo Mano)http://www.blogger.com/profile/12666644873302635477noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-3634761057150025278.post-13400636556485286042011-07-12T10:54:00.009-04:002011-10-09T07:10:10.378-04:00பெயரற்றவன்..!இரவு மணி 10.00<div><br /></div><div>கொட்டஹேனாவின் சமீபத்திய திடீர் வரவுகளான அடுக்குமாடிக் குடியிருப்புக்களின் ஐந்தாவது மாடியின் பல்கனியில் கதிரை போட்டு அமர்ந்திருந்தாள் சைந்தவி. நல்லகாலம் அவள் அப்பாவோ அம்மாவோ வீட்டில் இல்லை. அப்பா நின்றால் இப்படி வெளியில் காற்றாட நிற்கவோ இருக்கவோ விடமாட்டார். தெருவுக்கு எதிரே இருக்கிற டெலிபோன் கடையில் வேலைக்கு நிற்கிற பெடியங்கள் முதல் கொண்டு ஏஜென்சி அனுப்பும்வரை இங்கு தங்கிக் கொண்டு வெளிநாடுகளுக்கு கதைக்க வரும் பெடியங்கள் வரை இவர்களது மற்றும் அடுத்திருக்கும் தொடர்மாடிகளையும், அங்கிருக்கும் பெண் பிள்ளைகளையும், குறிப்பாக இவளது இரண்டு அக்காமாரையும் இவளையும் சேர்த்து வெறித்துப் பார்ப்பதாகவும், காதலில் வீழ்த்தி கூட்டிக் கொண்டு ஓடிப் போவதாயும் அவருக்கு கற்பனைகள் எழுந்து எழுந்து அடங்கும். அப்படிக் கற்பனைகள் கனவுகளாக வந்து அவரை குழப்பிவிட்டிருக்கும் நாட்களில் கடுமையாக நடந்து கொள்ளுவார். சும்மா சும்மா அக்காமாரைக் கண்டிப்பதில் இருந்து அவர்கள் மேல் எரிந்து விழுவதுவரை அவர் செய்துகொண்டிருப்பார். அப்பாவிலும் நியாயம் இல்லாமல் இல்லை. இப்படித்தான் பத்தாவது மாடியில் இருந்த உமா அக்கா பிரான்சுக்குப் போகவென்று வந்து நின்ற சதீஷ் அண்ணாவை மேல நின்றே காதலித்து திருட்டுத்தனமாய் கல்யாணமும் செய்து இப்ப அவர் போனபிறகு தன் வீட்டுக்கு வந்து அவட அம்மாட கால்ல விழுந்து அவர் கூப்பிடும் வரை காத்திருக்கிறா. இந்தக் கதையை அந்த மூன்று குடியிருப்புக்களும் முண்ணூறு நாட்கள் பேசித் தீர்த்தன. உமா அக்காதான் பாவம், குனிஞ்ச தலை நிமிராம நடந்து முதுகு கூனிப் போச்சு. </div><div><br /></div><div>இரவு மணி 10.20</div><div><br /></div><div>"சே, இவன் இப்படித்தான். பத்து மணிக்கு வந்திருவான். இண்டைக்கு இவ்வளவு லேட்டாகிட்டு."</div><div><br /></div><div>இவன் யார், என்ன பெயர், எங்கே போகிறான், எங்கே வருகிறான், சொந்த இடம் எது, பார்க்க சிங்கள சாயல் அடிக்குது போல இருக்கு, வேலை பார்க்கிறானா இல்லையா, இல்லை எங்கேனும் வெளிநாட்டுக்குப் போகக் காத்திருக்கிறானா; ஒரு மண்ணும் அவளுக்குத் தெரியாது. இவன் இங்கின எங்கேயும் தான் இருக்கிறான் எண்டதில அவளுக்கு சந்தேகங்கள் இல்லை. கொச்சிக்கடை அந்தோனியார் திருவிழாவில தூரத்தில கூட்டத்தோட கூட்டமாப் பார்த்த நினைவு. சத்தியா கொஞ்சம் மெல்லமா நடந்திருந்தால் அவன்ட வீட்ட ஒழுங்காப் பார்த்திருக்கலாம். அவள் தன்னோட ஆளோட கதைக்கிற அவசரத்தில எட்டி எட்டி நடந்ததில இவள் இவனை மிஸ் பண்ணிவிட்டிருந்தாள். </div><div><br /></div><div>சைந்தவி நிமிர்ந்து அமர்ந்தாள். போன் கடை கல்லாகட்டத் தொடங்கிவிட்டிருந்தது. இப்ப இங்க இரவென்றால் அநேகமான வெளிநாடுகளிலெல்லாம் பகல் அல்லது மதியமாக இருக்கும். வேலைக்குப் போகமுதல் சொந்தக்காரரைப் போனில பிடிச்சுக் கொள்ளவேண்டுமென்ற அவசரமும், ஏஜென்சி இன்றும் தங்களை அனுப்பிவிடவில்லை என்ற தகவலை சொல்லி துக்கத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய தீவிரமும் இளந்தாரிகள் பலரையும், வயதுபோன சிலரையும் அந்தக் கடையில் சேர்த்துவிட்டிருந்தது. அந்தக் கடையை ஒட்டியபடியே இருந்த கொத்துறொட்டிக் கடையிலும், அதுக்கு முன்னாலே இருந்த பீடாக் கடையிலும் கூட்டமாக இருந்தது. </div><div><br /></div><div>இரவு மணி 10.30</div><div><br /></div><div>தொலைபேசி அலறியது. சைந்தவி எழுந்து வந்து அலட்சியமாய் ரிசீவரைத் தூக்கி காதில் வைத்தபடி "ஹலோ" என்றாள்.</div><div><br /></div><div>"இல்லை, நான் சைந்தவி. சின்னக்கா டியூஷன் போட்டாள்."</div><div>"..............................."</div><div>"அப்பாவும், அம்மாவும் பெரியக்காவுமாய்க் கோவிலுக்குப் போட்டினம்."</div><div>"..............................."</div><div>"பொன்னம்பலவாணேஸ்வரம், இண்டைக்குப் பிரதோஷமாம்."</div><div>"..............................."</div><div>"அண்ணாவுக்கு இன்னும் விசா கிடைக்கேல, வார கிழமை திரும்ப கேஸ் வருதாம்."</div><div>"..............................."</div><div>"சரி, நான் எடுக்க சொல்றன்."</div><div><br /></div><div>சைந்தவி பழையபடி வந்து அமர்ந்து கொண்டாள். அவளது மூத்த அண்ணா லண்டன் போய் ஐந்துவருடங்களாகப் போகின்றன. அவருக்கு விசா கிடைத்ததும் குடும்பமாய்ப் போய் சேர்வதற்காக அவளது குடும்பம் காத்திருக்கிறது. அண்ணாவுக்கு விசாதான் கிடைக்கவில்லையே தவிர அவர் குடும்பத்தை எந்தவித கஷ்டமும் இல்லாமல் தான் பார்த்து வருகிறார். அவர்ட காசில்லாமலே சின்னன்னாவை இத்தாலிக்கு எடுப்பிச்சு விட்டிருக்கிறார். சின்னண்ணா அங்கிருந்து கனடா போகப் போறதா அப்பா சொல்லிக் கொண்டிருந்தார். பெரியக்காவுக்குப் பார்க்கும் மாப்பிள்ளைகளும் லண்டன் அல்லது கனடாவில் மட்டுமே இருந்துகொண்டிருந்தார்கள். அவளுக்குத்தான் எங்கும் போகாமல் இங்கேயே இருக்க வேண்டுமென்று தோன்றியது. </div><div><br /></div><div>"இவன் எங்க போய்த் தொலைஞ்சான்.." </div><div><br /></div><div>முதுகைத் துளைக்கும் பார்வைகளை நரம்பு முனைகள் உணர்ந்துகொண்டன. கூசி கொஞ்சநேரம் குறுகுறுத்துத் தன்பாட்டுக்கு அடங்கிக் கொண்டன. அவள் அதையெல்லாம் சட்டை செய்யாமல் வாகாய் சாய்ந்து காலை நீட்டி வைத்துக் கொண்டாள். இது இப்பதான், கொஞ்ச நாளாகத் தொடர்கிறது. அவன் பெயர்கூட இன்னும் அறியமுடியவில்லை. டியூசன் போய்வரும் போது ஆட்டோ ஒன்றில் ஏற நேர்ந்தபோது இவனை அங்கே கண்டாள். ஆட்டோ டிரைவர் தன் நண்பன் என்று கேட்டுக் கொண்டதன் பேரில் அவனும் தன்னுடன் ஆட்டோவை சேர் பண்ண சரி என்று சொல்லிவிட்டிருந்தாள். அப்பா கண்டால் தெருவிலேயே வைத்து பெல்டால் விளாசித்தள்ளிவிடுவார் என்பது அவளுக்குத் தெரியாமலில்லை. டிரைவர் கேட்டபோது அவனுக்கு முன்னே இல்லை என்று சொல்லி அவளது கட்டுப் பெட்டித்தனத்தை காட்ட விருப்பமுல்லாமல் சரி என்று தலைய ஆட்டிவிட்டிருந்தாள். அன்றிலிருந்து அவன் இப்படிப் பின்னே தொடர்வதும் வீட்டுக்கு எதிரே வந்து நிற்பதும் ஆரம்பித்துவிட்டிருந்தது. </div><div><br /></div><div>இரவு மணி 10.45</div><div><br /></div><div>தூரத்தில் அவன் தலை தெரிந்தது. முதலாவது தொடர்மாடி தொடங்கும் குறுக்குச்சந்தின் அந்தத்தில் இருந்து மூன்றாவதாய் இருக்கும் சைந்தவியின் குடியிருப்பு வரை அவன் நடந்து வந்து தெருவை குறுக்கால் கடந்து எதிர்க்கடையில் நின்று கொள்வது வரை அவனை இவள் தெளிவாகப் பார்க்கலாம். பிறகு பார்க்க முடியாது. ஏனென்றால் இவள் பார்ப்பதை யாராவது மேலிருந்து பார்த்துவிட்டு வீட்டுக்கு சொல்லிவிடுவார்கள். இல்லை என்றால் அப்பா வீட்டிலிருந்தால் அவர் இவளை எழுப்பிவிட்டு தான் அமர்ந்துகொண்டு வேடிக்கை பார்க்க, அல்லாட்டால் இங்காலப் பக்கம் பார்க்கும் பெடியங்களைத் அவர்கள் குடும்பத்துடன் குலப்பெருமையுடன் சேர்த்து வையத் தொடங்கிவிடுவார். </div><div><br /></div><div>அவன் மெதுவாய் இவளது தெருவுக்குள் நுழைந்தான். நீலக்கலரில டெனிமும் மஞ்சள் நிறத்தில சட்டையுமாய் வந்தவனை வடிவாகப் பார்க்கத் தொடங்கினாள் சைந்தவி. உண்மையிலேயே இவன் யாழ்ப்பாணத்துப் பெடியன் மாதிரி இல்லை. கொழும்புப் பக்கமாகத்தான் இருக்கவேண்டும். இவனை வீட்டில் காட்டினால் வீட்டில் நிகழப்போகும் பயங்கரத்தை அவள் அறியாமல் இல்லை. ஏனோ உமா அக்காவின் நினைவு வந்து இதழோரத்தில் பயங்கலந்த குறுகுறுப்புடன் கூடிய சிரிப்பைத் தவழவிட்டது. அவன் அருகே சிரித்தபடியும், ஏதோ சொல்லியபடியும் அந்த ஆட்டோ டிரைவரும் வந்து கொண்டிருந்தார். அவருக்கு இவனை விட எப்படியும் பத்து வயதளவில் அதிகமாகவே இருக்கவேண்டும் என்று சைந்தவிக்குத் தோன்றியது. இவனுக்கு இருபத்தைந்து வயதிருக்கலாம். இவளை விட எட்டு வயதுகள் அதிகம். ஆனால் வயதில் என்ன இருக்கிறது. பேசியபடியே நடந்துவரும் அவன் தூரத்தே பார்ப்பது போல இவள் அமர்ந்திருக்கும் மாடியையும் பார்க்காமல் இல்லை. வெளியிலிருந்து பார்த்தால் இவள் அமர்ந்திருப்பது தெரியாது எனினும் பல்கனியின் கீழிருக்கும் பூக்கல்லினூடு கொஞ்சமாய்த் தெரியும் பாவாடை காட்டிக் கொடுக்கும் என்பதை இவள் அறியாமல் இல்லை. அவன் நண்பனுடன் தெருவைக் கடந்து போன் கடைக் கூரைக்குள் ஒதுங்கி நின்று கொண்டான். </div><div><br /></div><div>இரவு மணி 11.00</div><div><br /></div><div>அம்மா, அப்பா, சின்னக்கா, பெரியக்கா என்று ஒருத்தரையும் காணவில்லை. அவர்கள் அப்படியே பெரியம்மா வீட்ட போயிருக்கவேண்டும். "நல்லகாலம்," சைந்தவிக்கு கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது. கோவிலுக்கு எதிர்த்தவாறு பெரியம்மா வாடகைக்கு இருந்தாள். அது கொச்சிக்கடைப் பகுதிக்கு சேர்ந்தது எனினும் பெரியம்மாவுக்கு அந்தப் பகுதி பற்றிய பயம் இல்லை. பெரியம்மாவைப் போல யாழ்ப்பாணத்தவர்கள் சிலரும் அங்கே குடியேறத் தொடங்கிவிட்டிருந்தார்கள். </div><div><br /></div><div>மெலிதாய் எட்டிப் பார்த்து தான் அங்கிருப்பதை அவன் அறிந்திருக்கிறான் என்று தெரிந்தபின் மீண்டும் தலையைக் குறுக்கிக் கொண்டாள். உள்ளங்கால்கள் வியர்த்து பல்கனியின் சீமெந்து தரையில் குறுமணல்களுடன் சேர்ந்து கசியத் தொடங்கியிருந்தன. கால்களைத் தூக்கி மடித்து கதிரையில் பதித்து மடிந்து அமர்ந்து கொண்டபோது தான் இதயம் இவ்வளவு வேகமாக அடிப்பது புரிந்தது. அவன் மேலே பார்ப்பதும் போனில் ஒன்றிவிட்ட நண்பனைப் பார்ப்பதுமாய் நின்றான். ஒரு சிகரெட்டைப் பற்றவைத்து இரண்டு இழுப்புக்களில் தூக்கி எறிந்துவிட்டு சுவரோடு சாய்ந்து நின்றபடி போனை நோண்டத் தொடங்கினான். தெருவில் ஆள் நடமாட்டம் குறையத் தொடங்கிவிட்டிருந்தது. இந்தத் தெருவின் மட்டுமில்லை கொழும்பில் தமிழர்கள் வாழும் தெருக்களின் இயல்பே இதுதான். பத்துப் பத்தரைக்குப் பின் அதிகம் ஆள் நடமாட்டம் இருக்காது. பதினோரு மணிக்கு எல்லோரும் கோழி அடைவது போல வீடுகளுக்குள் அடைந்து கொண்டுவிடுவார்கள். என்னதான் லட்சங்கள் கட்டி போலீஸ் ரிபோர்ட் எடுத்தாலும் திடீரென்று நடக்கும் தேடுதல்களும் கைதுகளும் தன்பாட்டுக்கு நடந்து கொண்டுதான் இருந்தன. இவளால் அவனை இப்போது தெளிவாகப் பார்க்க முடிந்தது. டிரைவர் இன்னும் போனைக் காதில் இருந்து எடுக்கவில்லை. அவன் சுவர்ப்பக்கமாகத் திரும்பிப் பேசிக்கொண்டிருந்தான். </div><div><br /></div><div>"ஐயோ, என்ன இது."</div><div>"கத்தியா, இல்லை அரிவாள்.."</div><div>"கடவுளே, கழுத்தில வெட்டிறாங்கள்.. ஐயோ, வயித்திலையும்..டேய், உன் பிரண்டை வெட்டிறாங்கள். திரும்பிப் பாரேண்டா. டேய், உன்னைத்தான்..ஐயோ, கடவுளே.." </div><div><br /></div><div>இரத்தம் கொப்புளித்து நுரைத்துக் கொண்டு பாய்ந்தது. அவன் மடிந்து முகங்குப்புற விழுந்தான். வெட்டியவர்கள் பாய்ந்து ஏறிக்கொள்ள ஹொண்டா மோட்டார் பைக் பறந்து மறைந்தது. டிரைவர் சாவகாசமாய்த் திரும்பி அவனைத் தூக்கிக் கொண்டான். சட சடவென கடைக் கதவுகள் சாத்துப்படுவதும், டெலிபோன் கடையின் விளக்குகள் அணைக்கப்பட்டு எல்லோரும் ஒளிந்துகொள்வதும் தெரிந்தது. </div><div><br /></div><div>டிரைவரின் புலம்பல்கள் சைந்தவிக்குத் தெரியாத சிங்களமொழியில் இருந்தன. சாத்தப்பட்ட கடைக் கதவுகளிலும், கணத்தில் வெறிச்சோடிய தெருவிலும் அவள் அர்த்தமறியாத வார்த்தைகள் அதிர்ந்து கொண்டிருந்தன. </div><div><br /></div><div>அந்தப் பெயரற்றவனின் உடல் இப்போது குளிர்ந்திருக்கும். இரத்தம் பாய்வது நின்று லேசாய் ஒடுங்கி வழியத் தொடங்கியிருக்கும்.</div><div><br /></div><div>"டேய், உன்னை..இப்படிக் கூட்டிக் கொண்டுவந்து கொலை பண்ணிட்டியேடா"</div><div><br /></div><div>"சைந்தவி, என்னடி அங்க வேடிக்கை பார்க்கிறாய். அங்க போயிருக்காத எண்டு எத்தினைதரம் சொல்றது. உள்ள வாடி." அப்பா கத்திக் கொண்டு சைந்தவி மேல் பாய்ந்து உள்ளே இழுத்துக் கொண்டார். </div><div><br /></div><div>கொஞ்ச நேரத்தில் போலீஸ் ஜீப் வந்து நிற்பதும் ஆட்கள் தடதடப்பதும் தெருவை அதிர்த்து கேட்டன. </div><div><br /></div><div>போலீஸ் விசாரணை போன் கடையில தான் முதல்ல தொடங்கியிருக்கும்..</div><div><br /></div><div>"மல்லி, இப்ப கொஞ்சம் முன்னே இங்கன ஒரு கொல நடந்திச்சுத்தானே. அத நீ பார்த்ததா?"</div><div><br /></div><div>"ஐயோ, இல்லையே மாத்தையா, நாங்க பத்துமணிக்கே கடையைப் பூட்டிட்டமே."</div><div><br /></div><div>"பொய் சொல்லப்படாது. நாங்க ஒழுங்கா......"</div><div><br /></div><div>இரவு மணி 11.10 </div><div><br /></div><div><div>சைந்தவி அக்காவுக்கருகில் படுத்துக்கொண்டாள்.</div></div><div><br /></div><div>"சார், நான் பார்க்கேல. அப்பா அம்மா வருகினமா எண்டு பார்த்தனான். பிறகு வீட்டுக்குள்ள வந்திட்டன். கொலை நடந்தமாதிரி சத்தங்கூடக் கேட்கேல.." </div><div><br /></div><div>மடிந்து விழும்போது பெயரற்றவனின் கண்கள் இவள் வீட்டையா வெறிச்சுக் கொண்டு விழுந்தது. </div><div><br /></div><div><br /></div><div>(2007/Dec)</div>மயூ மனோ (Mayoo Mano)http://www.blogger.com/profile/12666644873302635477noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-3634761057150025278.post-57414375653412418812011-07-06T01:01:00.001-04:002011-10-09T07:10:19.933-04:00சாணும் முழமும் அடியும்..!!!<span class="Apple-style-span" style="font-family: 'Trebuchet MS', Trebuchet, Verdana, sans-serif; font-size: 13px; line-height: 20px; "><span title="Click to correct" class="transl_class" id="0">மிதந்தெழும்</span> <span title="Click to correct" class="transl_class" id="1">தொன்மத்தின்</span> <span title="Click to correct" class="transl_class" id="2">வன்மப்</span> <span title="Click to correct" class="transl_class" id="3">புணர்ச்சிக்குள்</span></span><span class="Apple-style-span" style="font-family: 'Trebuchet MS', Trebuchet, Verdana, sans-serif; font-size: 13px; "><div class="post-body entry-content" style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0.75em; margin-left: 0px; line-height: 1.6em; "><div><div><span title="Click to correct" class="transl_class" id="4">சிதைந்தொழுகும்</span> <span title="Click to correct" class="transl_class" id="5">என்னை</span></div></div><div><span title="Click to correct" class="transl_class" id="6">பெண்ணென்று</span> <span title="Click to correct" class="transl_class" id="7">சொல்லிக்கொள்கிறேன்</span></div><div><span title="Click to correct" class="transl_class" id="8">ஆக</span></div><div><span title="Click to correct" class="transl_class" id="9">நீ</span> <span title="Click to correct" class="transl_class" id="10">என்னவனாகிறாய்</span></div><div><span title="Click to correct" class="transl_class" id="11">கேள்விக்குறியுடன்</span> <span title="Click to correct" class="transl_class" id="12">திரும்பி</span> <span title="Click to correct" class="transl_class" id="13">முழிக்கும்</span> <span title="Click to correct" class="transl_class" id="14">என்னை</span></div><div><span title="Click to correct" class="transl_class" id="15">உறுத்து</span> <span title="Click to correct" class="transl_class" id="16">நோக்குகிறாய்</span></div><div><span title="Click to correct" class="transl_class" id="17">அன்பே</span>,</div><div><span title="Click to correct" class="transl_class" id="18">நாளை</span> <span title="Click to correct" class="transl_class" id="19">என்பதற்குத்</span> <span title="Click to correct" class="transl_class" id="20">தேவையான</span></div><div><span title="Click to correct" class="transl_class" id="21">என்</span> <span title="Click to correct" class="transl_class" id="22">சுதந்திரங்களின்</span> <span title="Click to correct" class="transl_class" id="23">நீளங்களை</span></div><div><span title="Click to correct" class="transl_class" id="24">அடிகளால்</span>, <span title="Click to correct" class="transl_class" id="25">சாண்களால்</span>, <span title="Click to correct" class="transl_class" id="26">முழங்களால்</span></div><div><span title="Click to correct" class="transl_class" id="27">எதனால்</span> <span title="Click to correct" class="transl_class" id="28">அளந்து</span> <span title="Click to correct" class="transl_class" id="29">முடித்தாய்</span>?</div><div><span title="Click to correct" class="transl_class" id="30">அவற்றை</span> <span title="Click to correct" class="transl_class" id="31">நான்</span> <span title="Click to correct" class="transl_class" id="32">எதற்குள்</span> <span title="Click to correct" class="transl_class" id="33">போட்டுக்கொள்ளட்டும்</span>?</div><div><span title="Click to correct" class="transl_class" id="34">கைப்பை</span>, <span title="Click to correct" class="transl_class" id="35">கர்ப்பப்பை</span> <span title="Click to correct" class="transl_class" id="36">நிறைந்து</span></div><div><span title="Click to correct" class="transl_class" id="37">உடல்</span> <span title="Click to correct" class="transl_class" id="38">வழியும்</span> <span title="Click to correct" class="transl_class" id="39">அவற்றை</span></div><div><span title="Click to correct" class="transl_class" id="40">இழுத்து</span> <span title="Click to correct" class="transl_class" id="41">மூடுகிறேன்</span>;</div><div><span title="Click to correct" class="transl_class" id="42">தெறித்து</span> <span title="Click to correct" class="transl_class" id="43">விழப்போகும்</span> <span title="Click to correct" class="transl_class" id="44">பொத்தான்களின்</span> <span title="Click to correct" class="transl_class" id="45">வழி</span></div><div><span title="Click to correct" class="transl_class" id="46">தொங்கிக்கிடக்கிறது</span></div><div><span title="Click to correct" class="transl_class" id="47">நேற்றைய</span> <span title="Click to correct" class="transl_class" id="48">எழுச்சியில்</span> <span title="Click to correct" class="transl_class" id="49">நீ</span></div><div><span title="Click to correct" class="transl_class" id="50">மீதம்</span> <span title="Click to correct" class="transl_class" id="51">வைத்த</span> <span title="Click to correct" class="transl_class" id="52">முத்த</span>(<span title="Click to correct" class="transl_class" id="53">ம்</span>)<span title="Click to correct" class="transl_class" id="54">த்தை</span></div><div><span title="Click to correct" class="transl_class" id="55">நான்</span> <span title="Click to correct" class="transl_class" id="56">யாரிடம்</span> <span title="Click to correct" class="transl_class" id="57">பரிசளிக்கலாம்</span>?</div><div><span title="Click to correct" class="transl_class" id="58">சக</span> <span title="Click to correct" class="transl_class" id="59">மனுசியெனும்</span> <span title="Click to correct" class="transl_class" id="60">மதிப்பில்</span> <span title="Click to correct" class="transl_class" id="61">மயங்கி</span></div><div><span title="Click to correct" class="transl_class" id="62">முத்தங்களை</span> <span title="Click to correct" class="transl_class" id="63">பறக்கவிடுவதான</span> <span title="Click to correct" class="transl_class" id="64">கனவில்</span></div><div><span title="Click to correct" class="transl_class" id="65">ஆயாசத்துடன்</span> <span title="Click to correct" class="transl_class" id="66">மூடும்</span> <span title="Click to correct" class="transl_class" id="67">விழிகளில்</span></div><div><span title="Click to correct" class="transl_class" id="68">தேங்கிக்</span> <span title="Click to correct" class="transl_class" id="69">கிடக்கிறது</span></div><div><span title="Click to correct" class="transl_class" id="70">நூற்றாண்டுக்கான</span> <span title="Click to correct" class="transl_class" id="71">தூக்கம்</span>;</div><div><span title="Click to correct" class="transl_class" id="72">இன்னும்</span> <span title="Click to correct" class="transl_class" id="73">சூல்</span> <span title="Click to correct" class="transl_class" id="74">கொள்ளாத</span></div><div><span title="Click to correct" class="transl_class" id="75">என்</span> <span title="Click to correct" class="transl_class" id="76">குழந்தைகளைக்</span> <span title="Click to correct" class="transl_class" id="77">கூப்பிடு</span></div><div><span title="Click to correct" class="transl_class" id="78">பேசிக்</span> <span title="Click to correct" class="transl_class" id="79">கொள்வோம்</span> <span title="Click to correct" class="transl_class" id="80">என்கிறாய்</span></div><div><span title="Click to correct" class="transl_class" id="81">சமத்துவம்</span> <span title="Click to correct" class="transl_class" id="82">பற்றி</span> <span title="Click to correct" class="transl_class" id="83">என்கிறாய்</span></div><div><span title="Click to correct" class="transl_class" id="84">எழுத்துப்</span> <span title="Click to correct" class="transl_class" id="85">பிரதிகளைப்</span> <span title="Click to correct" class="transl_class" id="86">புரட்டி</span></div><div><span title="Click to correct" class="transl_class" id="87">அடிமை</span> <span title="Click to correct" class="transl_class" id="88">என்ற</span> <span title="Click to correct" class="transl_class" id="89">சொல்லைத்</span> <span title="Click to correct" class="transl_class" id="90">தேடுகிறேன்</span></div><div><span title="Click to correct" class="transl_class" id="91">அகராதிகளை</span> <span title="Click to correct" class="transl_class" id="92">தின்று</span> <span title="Click to correct" class="transl_class" id="93">ஏப்பமிட்டதில்</span></div><div><span title="Click to correct" class="transl_class" id="94">புகைப்படத்துக்கான</span> <span title="Click to correct" class="transl_class" id="95">வெளிச்சத்தில்</span> <span title="Click to correct" class="transl_class" id="96">காணமலாகி</span></div><div><span title="Click to correct" class="transl_class" id="97">தொலை</span> <span title="Click to correct" class="transl_class" id="98">நிலத்தில்</span> <span title="Click to correct" class="transl_class" id="99">கிடக்கிறது</span></div><div><span title="Click to correct" class="transl_class" id="100">கறுப்பாலான</span> <span title="Click to correct" class="transl_class" id="101">உன்</span> <span title="Click to correct" class="transl_class" id="102">உடலொன்றின்</span> <span title="Click to correct" class="transl_class" id="103">பிரதி</span></div><div><span title="Click to correct" class="transl_class" id="104">நீ</span> <span title="Click to correct" class="transl_class" id="105">சொல்லத்</span> <span title="Click to correct" class="transl_class" id="106">தொடங்குகிறாய்</span></div><div>"<span title="Click to correct" class="transl_class" id="107">ஆணும்</span> <span title="Click to correct" class="transl_class" id="108">பெண்ணும்</span> <span title="Click to correct" class="transl_class" id="109">சமனெனக்</span> <span title="Click to correct" class="transl_class" id="110">கொள்வதால்</span>"</div><div><span title="Click to correct" class="transl_class" id="111">சரி</span>, <span title="Click to correct" class="transl_class" id="112">நீ</span> <span title="Click to correct" class="transl_class" id="113">சொல்லேன்</span></div><div><span title="Click to correct" class="transl_class" id="114">இன்றைக்கானதை</span> <span title="Click to correct" class="transl_class" id="115">நான்</span> <span title="Click to correct" class="transl_class" id="116">முழத்தால்</span> <span title="Click to correct" class="transl_class" id="117">அளக்கவா</span>?</div></div></span>மயூ மனோ (Mayoo Mano)http://www.blogger.com/profile/12666644873302635477noreply@blogger.com5